search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் நகராட்சியில் புகார் மனு பெட்டி
    X

    காேப்புபடம்

    பல்லடம் நகராட்சியில் புகார் மனு பெட்டி

    • 18 வாா்டுகளிலும் மக்களின் குறைகளை தீா்க்க தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.
    • மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை சமா்ப்பிக்கும் வகையில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கூறியதாவது: -

    பல்லடம் நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் மக்களின் குறைகளை தீா்க்க தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் குறை தீா்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகள், நிறைகள், பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக நேரத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை இப்பெட்டியில் செலுத்தலாம். இந்த புகாா் மனு பெட்டி ஒவ்வொரு வாரமும் திறக்கப்பட்டு மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    Next Story
    ×