search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchants"

    • விழாவிற்கு விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா குற்றாலத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் மோகன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட துணை செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், இஸ்மாயில், பூசைத்துரை, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் காமாட்சி ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி வேளாண்மை துணை இயக்குனர் தமிழ் மலர், மாவட்ட மத்திய மாநில திட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அதன்படி தென்காசி மாவட்ட சங்கத்தின் புதிய தலைவராக சக்கராஜா, செயலாளராக ராஜகுரு, பொருளாளராக முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    விழாவில் பல்வேறு விவசாய இடுபொருள் நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக தமிழ்நாடு விவசாய இடுபொருட்கள் வியாபாரிகள் சங்க நிறுவனர் மறைந்த ரெங்கசாமி உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. துணைத் தலைவர் ஆறுமுகசாமி நன்றி கூறினார்.

    • அவிநாசி கைகாட்டிப்புதூா் ஈரோடு நெடுஞ்சாலை அருகே புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது.
    • சந்தை வளாகத்துக்குள் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

    அவினாசி :

    அவிநாசி வாரச் சந்தை சாலையோர கடைகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறை தடுக்க, பயன்படுத்தாத உள்புறக் கடைகளை வியாபாரிகளுக்கு பிரித்து வழங்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து அவிநாசி தனியார் அறக்கட்டளை நிா்வாகி ரவிகுமாா் கூறியதாவது:-

    அவிநாசி கைகாட்டிப்புதூா் ஈரோடு நெடுஞ்சாலை அருகே புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. இதில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள், வெளி மாநிலத்தவா்கள் கூடுகின்றனா். சந்தையின் வெளியே இருபுறமும் அமைக்கப்படும் கடைகளால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வந்ததால், அவிநாசி காவல் துறை, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தடுப்பு அமைத்து சந்தையின் உள்புறமாக கடைகள் அமைக்க அறிவுறுத்தி உள்ளனா். இருப்பினும் இதற்கு நிரந்தரத் தீா்வாக வாரச் சந்தை வளாகத்தில், பல காலமாக பயன்படுத்தாமல் உள்ள கான்கிரீட் கடைகளை வியாபாரிகளுக்கு பிரித்து வழங்கி கடைகள் அமைக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் சந்தையில் வழிப்பாதை கடைகள் அனைத்தையும் முறைபடுத்த வேண்டும். சந்தை வளாகத்துக்குள் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

    • நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் கல்லுரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நகர் நல அதிகாரி நமச்சிவாயம் ,போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன், மருத்துவர் ராதிகா மைக்கேல், சமூக ஆர்வலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மாணவர்களிடம் விழிப்பு ணர்வு உரையாற்றினர்.

    பின்னர் மாணவ -மாணவிகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மணிமண்டபம்வரை பேரணியாக சென்றனர். அப்போது வரும்வழிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இதைப்போல் பொதுமக்க ளும் வணிக ர்களும் நமது குப்பையை நாமே அகற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • கஞ்சா ரவுடி கும்பல் கடைவீதியில் உள்ள ஒவ்வொரு கடையாக சென்று அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரிகளிடம் பணம் பறித்தனர்.
    • வணிகர் செந்தில்வேல் தாக்கப்பட்டதை கண்டித்தும், மிரட்டி பணம் பறித்ததை கண்டித்தும், சம்பந்தபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் கரந்தையில் 200-க்கும் மேற்ப்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் கரந்தை கடைவீதியில் கடை வைத்துள்ளார். இவர் வர்த்தக சங்க பொரு ளாளராகவும் உள்ளார்.

    நேற்று மாலை இவரது கடைக்கு கஞ்சா, குடி போதையில் கும்பலாக சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து பணம் கொடுக்குமாறு மிரட்டினர். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாது என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் செந்தில்வேலை அரிவாளால் வெட்டி விட்டு பணத்தை பறித்து கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த செந்தில்வேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிசிக்சைக்காக மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கஞ்சா ரவுடி கும்பல் கடைவீதியில் உள்ள ஒவ்வொரு கடையாக சென்று அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரிகளிடம் பணம் பறித்தனர். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 29), தினேஷ் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சிலரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று வணிகர் செந்தில்வேல் தாக்கப்பட்டதை கண்டித்தும், மிரட்டி பணம் பறித்ததை கண்டித்தும், சம்பந்தபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் கரந்தையில் 200-க்கும் மேற்ப்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்தனர்.

    இதையடுத்து வர்த்தக சங்க தலைவர் முருகானந்தம், செயலாளர் ரங்கராஜன் தலைமையில் ஏராளமான வியாபாரிகள் கடைவீதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தகவல் அறிந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ஜிஎஸ்டி வரி - பண மதிப்பிழப்பால் கோடிக்கணக்கான வியாபாரிகள், வர்த்தகர்கள் வாழ்விழந்து போனார்கள் என்று சீமான் பேசியுள்ளார். #seeman #pmmodi #gst

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். இந்த தேர்தலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம். ஒருபக்கம் பா.ஜனதா- அ.தி.மு.க. ஆகியவற்றின் பின்னால் ஒரு அணி. மற்றொரு பக்கம் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளின் பின்னால் ஒரு அணி.

    தமிழ்நாட்டில் ஒரே ஒரு கட்சி பெரிய கட்சி உண்டென்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். தனித்து நிற்கிறது. துணிந்து நிற்கிறது. உண்மையும் நேர்மையும் ஆக மக்களை அணுகுகிறது. மது, பணம், உணவு கொடுக்காமல் தன்னெழுச்சியாக மக்கள் தானாக திரண்டு கூடுகிறார்கள் என்றால் தமிழர் நாட்டிலேயே மிகப்பெரிய கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சிதான். இது உண்மையிலேயே மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி.

    பா.ஜனதா அது ஒரு மதவாத கட்சி என்று மதவாதத்துக்கு எதிரான கூட்டணியான தி.மு.க. கூறுகிறது. இதே தி.மு.க. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து பதவி அனுபவித்து இருக்கிறது. அப்போது அது மதவாதம் அல்ல மிதவாதம். 5 ஆண்டு காலத்தில் செய்யாததை இந்த பா.ஜனதா அடுத்த ஆட்சி காலத்தில் செய்யப்போகிறதா? பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த வரியால் பல கோடிக்கணக்கான வியாபாரிகள், வர்த்தகர்கள் வாழ்விழந்து போனார்கள். இனிப்பு வார்த்தைகளை கூறி ஏமாற்றுகிறார்கள்.

    நாங்கள் ஓட்டுக்காக பேசவில்லை. உங்கள் உரிமைக்காக பேசுகிறோம். இந்த தேர்தலை ஒரு தேர்தலாக பார்க்காமல் ஒரு மாறுதலாக பார்த்து, இந்த தேர்தலில் ஒரு மாற்றத்தை தாருங்கள். உழவை மீட்போம், உலகைக் காப்போம் என்ற முழக்கத்தோடு நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். எனவே நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சீமான் பேசினார். #seeman #pmmodi #gst

    பான் பராக், குட்கா விற்பனை செய்யும் வணிகர்களின் உணவு பாதுகாப்பு உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என காஞ்சீபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Gutka
    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் புகையிலை, குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கடைகளில் புகையிலை பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன.

    அதிகாரிகள் தொடர்ந்து வேட்டை நடத்தியும் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் புகையிலையை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதேபோல காஞ்சீபுரம் மாவட்டத்திலும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தாராளமாக நடக்கிறது. இதையடுத்து குட்கா, புகையிலை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பான்பராக், குட்கா பொருட்கள் விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை 1,36,707 கிலோ பான்பராக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

    உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வழக்குகளில் இதுவரை 2,24,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பான் பராக், குட்கா விற்பனை செய்யும் வணிகர்களின் உணவு பாதுகாப்பு உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Gutka
    பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தும், மீனவர்கள் கடலுக்கு செல்லாமலும் பேராட்டத்தில் ஈடுபட்டனர். #PetrolDieselPriceHike
    தஞ்சாவூர்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர் சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும், மீனவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்திலும் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. என பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பஸ்கள் இன்று வழக்கம் போல் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயங்கவில்லை. தஞ்சையில் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடை மருதூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பாபநாசம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    திருவாரூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. லாரி, ஆட்டோக்கள் மட்டும் ஓடவில்லை. மேலும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

    திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், பேரளம், நன்னிலம், வலங்கைமான், கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, பேரளம், கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு , மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயங்கின. மேலும் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் ஓடவில்லை.

    நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், வேதாரண்யம், தலைஞாயிறு, தரங்கம்பாடி, பொறையாறு, குத்தாலம் ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, கோடியக்கரை பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. #PetrolDieselPriceHike
    லாரிகள் வேலை நிறுத்தத்தால் புதுவை காய்கறி வியாபாரிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும், மினி வேன்களிலும் காய்கறிகளை எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் புதுவை மாநில லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளனர். இன்று 6-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தால் புதுவையில் இயங்கும் 3 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை. இவை அனைத்தும் மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரிலும், கோரிமேடு எல்லைப்பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    புதுவைக்கு பெங்களூர், வேலூர், மேட்டுப்பாளையம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிகளவில் வரும். லாரி வேலை நிறுத்தத்தால் புதுவை காய்கறி வியாபாரிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும், மினி வேன்களிலும் காய்கறிகளை எடுத்து வருகின்றனர். இதனால் புதுவையில் காய்கறிகளுக்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

    ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஒரு சில காய்கறிகளுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மினிவேன் மூலம் காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள், மளிகை பொருட்கள் ஆகியவையும் தடையின்றி கொண்டுவரப்படுகிறது. #tamilnews
    கடை வரியை குறைக்கக்கோரி இன்று வியாபாரிகள் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தாம்பரம்:

    தாம்பரத்தில் உள்ள துரைசாமி ரெட்டியார் மார்க்கெட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு கடைக்கும் ஆண்டுக்கு ரூ.3500 வரியாக நகராட்சி வசூலித்து வந்தது. இந்த நிலையில் வரி கட்டணத்தை ரூ.46.300 ஆக நகராட்சி உயர்த்தியது. இதை கட்டாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடை வரி பல மடங்கு உயத்தப்பட்டதால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    வரியை குறைக்கக்கோரி இன்று வியாபாரிகள் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது விக்கிரமராஜா கூறியதாவது, தாம்பரம் துரைசாமி ரெட்டியார் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வரியை 110 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இந்த வரி உயர்வை குறைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம், முதல்வரை சந்தித்தும் முறையிடுவோம் என்றார்.

    வரி உயர்வை குறைக்க கோரி கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திய வியாபாரிகள் பின்னர் கலைந்து சென்றனர்.
    கடத்தூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகள் 10 ரூபாய் நாணயத்தை 2 ரூபாய், 5 ரூபாய் கமி‌ஷனுக்கு வாங்கி வருகிறார்கள்.
    கடத்தூர்:

    மத்திய அரசால் அச்சடிக்கப்பட்டு 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நாணயங்களை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். அரசு பஸ்களிலும் கண்டக்டர்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.

    ஆனால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவது கிடையாது.

    குறிப்பாக தருமபுரி மாவட்டம் கடத்தூர், பொம்மிடி, பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை, ரேசன் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை.

    இதேபோல மின் அலுவலகங்களில் மின்சார கட்டணம் செலுத்த நாணயங்களை கொடுத்தாலும் வாங்குவதில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளிலும் வாங்க மறுக்கிறார்கள்.

    இதேபோல பெட்டிகடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத் தும் வியாபாரிகளும் இதை வாங்க மறுக்கிறார்கள்.

    தற்போது இந்த நாணயங்களை பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் கமி‌ஷனுக்கு வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    கடத்தூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகள் 10 ரூபாய் நாணயத்தை கமி‌ஷனுக்கு வாங்கி வருகிறார்கள். ஒரு சிலர் ரூ. 2 கமி‌ஷனுக்கு வாங்குகிறார்கள். இன்னும் சிலர் 5 ரூபாய் வரை கமி‌ஷன் கழித்து இந்த நாணயங்களை வாங்கிக் கொள்கிறார்க்ள.

    தற்போது வியாபாரிகளுக்கு இந்த புது தொழில் கைகொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்கும் வியாபாரிகள் சென்னை சென்று இதை மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசிலர் தருமபுரி வந்து வங்கிகளில் மொத்தமாக 50 முதல் 500 நாணயங்கள் வரை கொடுத்து மாற்றிக் கொள்கிறார்கள்.

    தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையதள சேவை முற்றிலும் முடங்கியதால் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். #sterliteprotest
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



    போராட்டக்காரர்கள் ஊர்வலமாக புறப்பட்டது முதல் போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூடு, கல்வீச்சு, பலியானவர்களின் புகைப்படம் என பல்வேறு விபரங்கள் உடனுக்குடன் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவியது.

    போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசு மற்றும் போலீசாருக்கு எதிரான பதிவுகளையும் ஏராளமானோர் பதிவிட்டனர். இதனால் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவியது.

    போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும் தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் சம்பவங்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இதன் தாக்கத்தை போலீசார் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    இதையடுத்து வன்முறை பரவாமல் இருப்பதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு (27-ந் தேதி வரை) இணையதள சேவையை நிறுத்தி தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணி முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது.

    ஆனால் தொலைபேசி சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை. வழக்கம் போல் மற்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேச முடிகிறது.

    இணையதள சேவை முடங்கியதால் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை சமூக வலை தளங்களில் பதிவிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் ரீதியாக இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். #sterliteprotest
    ×