search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தை"

    • ஆந்திர பகுதியிலிருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
    • ஆடு விலை அதிகமாக உள்ளதால் கறியை விலையும் இனிவரும் காலங்களில் அதிகமாகும்.

    காவேரிப்பட்டினம்:

    வருகிற 9-ந் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை 11-ந் தேதி கொண்டாடப்படுகிறதையொட்டி காவேரிப்பட்டணம் வார சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோராக இருந்தது.

    காவேரிப்பட்டணம் பகுதியில் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன ஆனால் தற்போது இப்பகுதியில் ஆடுகளை பெரும்பாலானோர் வளர்ப்பதில்லை. இதனால் ஆடுகளுக்கு இப்பகுதியில் விற்பனை அதிகமாய் உள்ளது. மேலும் ஆந்திர பகுதியிலிருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஆடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் ஆடு விலை அதிகமாக உள்ளதால் கறியை விலையும் இனிவரும் காலங்களில் அதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வாரந்தோறும் கோடி கணக்கில் மாடுகள் வியாபாரம் நடக்கும் சந்தையில் இன்று இலட்சக்கணக்கில் மட்டுமே வியாபாரம்.
    • வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் மாட்டுச் சந்தை தமிழகத்தில் பிரபலமான மாடு சந்தையாக விளங்கி வருகிறது.

    வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை விழுப்புரம் கடலூர் திருப்பத்தூர் தர்மபுரி தேனி மதுரை சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாடுகள் மற்றும் பல நூறு மாற்று வியாபாரிகள் கலந்துகொண்டு பல கோடி வர்த்தகம் நடைபெறும் சந்தையாக விளங்கும் கேளூர் மாட்டுச் சந்தையில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை காரணமாக மாட்டுச் சந்தைக்கு பணங்கள் கொண்டு வருவதில் மாற்று வியாபாரிகளுக்கு பெருத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் கேளூர் மாட்டுச்சந்தைக்கு மாடு வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளதால் மாடுகள் விற்பனையாவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் இருந்து மட்டுமே மாடுகள் குறைந்த அளவிலே வந்துள்ளதால் வியாபாரிகளும் குறைந்த அளவில் கலந்து கொண்டனர். கோடிக்கணக்கில் நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் இன்று லட்சக்கணக்கில் தான் வியாபாரம் நடைபெற்றது. வியாபாரம் மந்தமாக நடைபெறுவதாக மாட்டுச் சந்தையில் உள்ள மாடு வியாபாரிகள் மாடுகளை விற்க வந்திருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
    • மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மற்றும் வடசேரி பகுதி மீன் மார்க்கெட்களில் கெட்டுப்போன, பார்மலின் கலந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட்ட பார்மலின் கெமிக்கல் மனம் கொண்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    அந்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோயில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமார பாண்டியன், சங்கரநாராயணன், மீன்வளத்துறை ஆய்வாளர் மரிய பிரான்ஸ்கோ விவின் மற்றும் மேற்பார்வையாளர் கார்த்தீபன், நாகர்கோவில் மாநகர மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சத்யராஜ், மாதேவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் கணேசபுரம்-வடசேரி மீன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்களை இன்று ஆய்வு செய்தனர்.

    விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது. மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு சில வியாபாரிகள் உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.

    அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை மினி டெம்போவில் ஏற்றி கொண்டு சென்றனர். உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற கெட்டுப்போன சுமார் 230 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த மீன்களை சுண்ணாம்பு தூள் மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் எதுவும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யபட்டு வருகிறது.
    • தற்போது ரூ.13 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரத்துக்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திரு மங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறு வது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யபட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் வந்திருந்து ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் இந்த சந்தையில் காணப்படும்.

    இந்நிலையில் ஆட்டுச் சந்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 7,000 முதல் 10,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது. வருகிற திங்கட்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ஆட்டின் விலை ரூ.10,000 முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.13 ஆயிரம் முதல் ரூ.35 ஆயி ரத்துக்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இன்று மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடை பெற்றுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். கட்டுக்கடங்காத கூட் டத்தில் ஆடு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் ஆட்டுச் சந்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாகவே ஆடுகளின் விலை சற்று கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும், பொங்கல் பண்டிகை முடிந்த பின் ஆட்டின் விலை கட்டுக்குள் வரும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது ஆடுகளின் வரத்து கூடுதலாக இருப்பதாலும் ஆடுகள் தொடர்ந்து விலை ஏற்றத்தின் காரணமாக ஆடுகள் விற்பனை செய்பவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

    • கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது.
    • வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளன்று கால்நடை வார சந்தைக்கு சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது. வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதன் காரணமாக கொளத்தூர் கால்நடை வார சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகளவில் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்ததால் ஆடுகளின் விலை கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பூக்களின் விலை கிடு கிடு உயர்ந்துள்ளது
    • ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு விலை உயர்ந்தது

    வேலாயுதம் பாளையம்,

    நொய்யல்,மரவா பாளையம் , குளத்துப்பா ளையம், காளிபாளையம் ,வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் ,மூலியமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி ,முல்லை, சம்பங்கி ,அரளி,ரோஜா ,செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்க ளைப் பறித்து லேசான கோனிப் பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் ,அருகில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர் .பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிக ளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை வருகின்றனர்.

    கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் வாங்கிச் சென்றனர். தற்போது குண்டுமல்லி ரூ.1200- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.250- க்கும், அரளி கிலோ ரூ.520- க்கும், ரோஜா கிலோ ரூ.460- க்கும், முல்லைப் பூ ரூ.1000- க்கும், செவ்வந்திப்பூ ரூ.520- க்கும், கனகாம்பரம் ரூ.1100-க்கும் வாங்கி சென்றனர். ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கு ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது.

    ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கு விற்பனையானது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பூவன் வாழைத்தார்கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவுவடைந்துள்ளது.

    • செவ்வாய் சந்தை செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம் பெயர் பெற்று வந்தது.
    • வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் எம்.என்.குப்பம் பகுதியில் 50 ஆண்டிற்கு முன்பு துவங்கப்பட்ட பாரம்பரிய "செவ்வாய் சந்தை", செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம் பெயர் பெற்று வந்தது. இன்று அது பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறது.

    முன்பு போல் மாடுகள் ஏலம், கோழி விற்பனை, கிராமத்து விளையாட்டு பொருட்கள், மளிகை, காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள் என பலவகை பொருட்கள் வருவதில்லை., தற்போது இங்கு மீன் கருவாடுகள், மாடுகள் மட்டுமே குறைந்த அளவில் விற்கப்படுகிறது. அதுவும் போதிய அளவில் லாபத்தை தருவதில்லை என வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த பாரம்பரிய சந்தை மீண்டும் பிரபலமாக, அதை விரிவாக்கம் செய்து, வியாபாரிகள் வெயில், மழையில் பொருட்களை பாதுகாக்க கூறை, கழிப்பறை, வாகனம் நிறுத்தும் இடம், உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்தால் இங்கு இன்னும் கூடுதலாக வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    • சந்தைக்கு வரும் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • கழிப்பிடங்கள் அனைத்தும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பழைய மார்க்கெட்டில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காய்கறிகள் சந்தை நடத்தப்பட்டு வந்தது.

    கால்நடை சந்தை

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே மார்க்கெட்டுக்குள் வைத்து ஆடு மற்றும் மாடுகள் சந்தையும் புதிதாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சந்தைக்கு பொருட்கள் மற்றும் ஆடு, மாடுகள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியாக பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட் பகுதி இருப்பதால் பொது மக்களின் கழிப்பிட வசதிக்காக போர்வெல் அமைத்து தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிட கட்டிடம் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சரியாக பராமரிபபு இல்லாமல் தண்ணீர் வசதியின்றி கழிப்பிடங்கள் அனைத்தும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அதனை மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    சமூகஆர்வலர்கள் கோரிக்கை

    இதனால் சந்தை நடை பெறும் நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கீழப்பாவூர் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் வியா பாரிகளின் நலன் கருதி பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட்டுக்குள் இயங்காமல் இருக்கும் கழிப்பிட கட்டிடத்தில் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    • ஜெட் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
    • 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இட்லிப்:

    சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷியா இருந்து வருகிறது.

    இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தையில் ரஷிய படையினர் அதிரடி வான் வெளி தாக்குதல் நடத்தினார்கள். ஜெட் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.

    இந்த திடீர் தாக்குதலில் காய்கறி சந்தைக்கு வந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிந்து இருந்தனர். இவர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

    ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டமாஸ்கஸ் தெரிவித்து உள்ளது. ஆனால் இது குறித்து சிரியாவோ, ரஷியாவோ எந்த கருத்தையும் கூறவில்லை. படுகாயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு சிரியாவில் நடந்த மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
    • வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து, 40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேதாரண்யம் சாலை பள்ளிவாசல் மைதானத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்தச் சந்தையில் உள்ளூர் விவசாயிகள் மட்டுமன்றி மதுரை, ராஜகிரி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், தஞ்சாவூர், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.

    இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சந்தையில் வழக்கத்தை விட கூடுதலாக வியாபாரிகள் ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனர். இதே போல ஆடுகளை வாங்கவும் ஏரா ளமானோர் வந்திருந்தனர்.

    பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை யானதாக சந்தை ஏற்பா ட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • சாதாரண வாரங்களிலேயே ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.
    • சென்ற ஆண்டு விற்பனையான தொகையில் இருந்து ரூ.3 ஆயிரம் வரை ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது.

    இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். மதுரை, தேனி, ராமநாதபுரம் , சிவகங்கை, நெல்லை, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

    இங்கு சாதாரண வாரங்களிலேயே ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.

    அந்த வகையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை வியாபாரம் இன்று களை கட்டியது. இன்று அதிகாலை முதல் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது

    வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்தனர்.

    7 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரத்திற்கு விலை போனது. மேலும் எடைக்கு ஏற்ப ரூ.33 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை இருந்தது. ஜோடி ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை விலை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பக்ரீத் பண்டிகையில் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதால் அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டுகளை விட ஆடுகளின் விலை இந்த ஆண்டு அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர். இது சென்ற ஆண்டு விற்பனையான தொகையில் இருந்து ரூ.3 ஆயிரம் வரை ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. ரூ.6 கோடிக்கு ஆடுகளின் விற்பனை இருந்ததாக வியாபாரிகள் கூறினர்.

    ×