search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் வாழைத்தார் சந்தை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
    X

    களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்கும் இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    களக்காட்டில் வாழைத்தார் சந்தை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

    • கேரள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது.
    • ஆண்டு தோறும் வாழை விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு மவுசு அதிகம். கேரள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது.

    ஆண்டு தோறும், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. சீசன் தொடங்கும் போது ஏத்தன் ரக வாழைத்தார் 1 கிலோ ரூ. 40 வரை விற்பனை ஆகி வருகிறது. அடுத்த 10 நாட்களில் இருந்தே வாழைத்தார் விலை இறங்குமுகமாகி விடும். படிப்படியாக விலை குறைந்து ரூ. 10-க்கும் குறைவாக விற்பனையாகும்.

    வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது. இதையடுத்து ஆண்டு தோறும் வாழை விவசாயி கள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைத்து, அரசே நேரடியாக வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அறுவடை காலத்தில் வாழைத்தார்களை சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

    அதன்படி களக்காடு அருகே ஜெ.ஜெ.நகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் 3 ஏக்கர் பரப்பளவில் வாழைத்தார் ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு மையம் அமைக்க. கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி தமிழக சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி சந்தை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஆனால் கட்டுமான பணிகள் மிகவும் மந்தமான முறையில் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது வாழைத்தார்கள் அறுவடை சீசன் தொடங்கும் நிலையில் உள்ளது.

    பணிகள் தொடங்கி 4 மாதங்களாகியும் 20 சதவிகித பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. எனவே இன்னும் 1 மாதத்திற்குள் கட்டுமான பணிகளை முடித்து, சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று களக்காடு ஒன்றிய இந்திய கம்யூ. செயலாளர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×