search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கழுக்குன்றம் செவ்வாய் சந்தை 50 வருடத்தை கடந்தது
    X

    திருக்கழுக்குன்றம் "செவ்வாய் சந்தை" 50 வருடத்தை கடந்தது

    • செவ்வாய் சந்தை செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம் பெயர் பெற்று வந்தது.
    • வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் எம்.என்.குப்பம் பகுதியில் 50 ஆண்டிற்கு முன்பு துவங்கப்பட்ட பாரம்பரிய "செவ்வாய் சந்தை", செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம் பெயர் பெற்று வந்தது. இன்று அது பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறது.

    முன்பு போல் மாடுகள் ஏலம், கோழி விற்பனை, கிராமத்து விளையாட்டு பொருட்கள், மளிகை, காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள் என பலவகை பொருட்கள் வருவதில்லை., தற்போது இங்கு மீன் கருவாடுகள், மாடுகள் மட்டுமே குறைந்த அளவில் விற்கப்படுகிறது. அதுவும் போதிய அளவில் லாபத்தை தருவதில்லை என வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த பாரம்பரிய சந்தை மீண்டும் பிரபலமாக, அதை விரிவாக்கம் செய்து, வியாபாரிகள் வெயில், மழையில் பொருட்களை பாதுகாக்க கூறை, கழிப்பறை, வாகனம் நிறுத்தும் இடம், உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்தால் இங்கு இன்னும் கூடுதலாக வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×