search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் இயக்க பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    மக்கள் இயக்க பேரணி

    • நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் கல்லுரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நகர் நல அதிகாரி நமச்சிவாயம் ,போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன், மருத்துவர் ராதிகா மைக்கேல், சமூக ஆர்வலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மாணவர்களிடம் விழிப்பு ணர்வு உரையாற்றினர்.

    பின்னர் மாணவ -மாணவிகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மணிமண்டபம்வரை பேரணியாக சென்றனர். அப்போது வரும்வழிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இதைப்போல் பொதுமக்க ளும் வணிக ர்களும் நமது குப்பையை நாமே அகற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    Next Story
    ×