search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவிப்பு"

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.
    • குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் வயல் வெளியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் ஆத்தூர் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது மழையை தொடர்ந்து பனி மூட்டமும் நிலவுகிறது.

    இதனால் சேலம் மற்றும் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டு செல்கின்றனர். இந்த குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • உடல்கள் அடக்கம் செய்யப்படாத இடத்தில் அடக்கம் செய்து கொள்ளுங்கள் என காசி உறவினர்களிடம் கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • மீண்டும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டு நிலம் மீட்கப்படும் என அதி–காரிகள் தெரிவித்ததை அடுத்து இறந்த காசியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

    பாப்பிரெட்டிப்பட்டி,ஆக.16-

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.துறிஞ்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் காசி (வயது65). இவர் உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். இவரது உடலுக்கு உறவினர்கள் பல்வேறு சடங்குகளை செய்து முடித்த பின்பு உடலை அடக்கம் செய்ய பி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

    சுடுகாட்டிற்கு அருகே வசித்து வரும் மக்கள் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய கூடாது என கூறினர்.

    2.45 ஏக்கர் இடம் கொண்ட சுடுகாட்டை அருகில் உள்ள சில நில உரிமையாளர்கள் 2.30 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பை மீட்டு உடல்கள் அடக்கம் செய்யப்படாத இடத்தில் அடக்கம் செய்து கொள்ளுங்கள் என காசி உறவினர்களிடம் கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பொம்மிடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி மற்றும் வருவாய் துறையினர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலை யில் இறந்த காசியின் உடல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அடக்கம் செய்ய முடியாமல் தவித்த னர்.

    அப்பகுதி மக்களிடையே மீண்டும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டு நிலம் மீட்கப்படும் என அதி–காரிகள் தெரிவித்ததை அடுத்து இறந்த காசியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    • அந்த வழியாக வந்த இளைஞர்கள் புதுப்பேட்டை போலீசில் குழந்தையை ஒப்படைத்தனர்.
    • சிறிது நேரத்தில் குழந்தையின் பெற்றோர் யார் என போலீசார் கண்டுபிடித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் நேற்று பிற்பகல் சாலையோரம் 2 வயது குழந்தை எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு திரிந்தது. அந்த வழியாக வந்த இளைஞர்கள் புதுப்பேட்டை போலீசில் குழந்தையை ஒப்படைத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் துரிதமாக செயல்பட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.

    சிறிது நேரத்தில் குழந்தையின் பெற்றோர் யார் என போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தை காணாமல் போனது எப்படி? குழந்தையை யாராவது கடத்தி வந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் கடை வீதி அருகே குளக்கரைத் திடல் உள்ளது. கடைவீதி மற்றும் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன.
    • இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் வரும் பொதுமக்கள், குளக்கரைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் தேர்த்திருவிழா நடைபெறும். பங்குனி உத்திரத்திற்கு அடுத்த நாள் முப்பெரும் தேரோட்டம் நடைபெறும்.

    நாமக்கல் கடை வீதி அருகே குளக்கரைத் திடல் உள்ளது. கடைவீதி மற்றும் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க மோட்டார்சைக்கிள் மற்றும் கார்களில் வரும் பொதுமக்கள், குளக்கரைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

    மேலும் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குளக்கரைத்திடலுக்கு வந்து நாமக்கல் மலை ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம். நாமக்கல் நகருக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை தரும்போது இந்த குளக்கரைத்திடலில் தான் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    ஏற்கனவே குளக்கரைத்திடல் குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ பாஸ்கரின் முயற்சியால் குளக்கரைத்திடல் முழுவதும் சீரமைக்கப்பட்டு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளது. நாமக்கல்லில் இந்த ஆண்டு, முப்பெரும் தேர்த்திருவிழா கடந்த வாரம் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மெயின் ரோட்டில் உள்ள குளக்கரைத்திடலில், தற்காலிக தேர் கடைகள் அமைப்பதற்காக மற்றும் பந்தல் அமைப்பதற்காக பேவர் பிளாக் தளத்தில் குழிகள் தோண்டி பந்தல் கால் நடப்படுவதால் தரைத்தளம் சேதமடைகிறது. இதனால் பிற்காலத்தில் குளக்கரைத்திடல் மீண்டும் குண்டும் குழியுமாக மாறி, முழுமையாக சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கடை அமைக்க ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் குளக்கரைத்திடலுக்குள் வாகனங்கள் வரக் கூடாது என்று தடை செய்துள்ளனர். இதனால் கடைவீதி மற்றும் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்களின் டூ வீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த முடியால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலை ஒரு மாதம் வரை நீடித்தால் பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி தேர் கடையை, குளக்கரை திடலில் அமைக்காமல், பார்க் ரோட்டில் உள்ள பூங்கா பகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு செல்வது வழக்கம்.
    • உணவு பொருட்கள் மற்றும் தேநீர், குடிநீர் போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    கடலூர்:

    திருச்செந்தூரிலிருந்து கடலூர் வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் தினந்தோறும் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்று வருகின்றது. காலை 6.20 மணி அளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு செல்வது வழக்கம். இதேபோல் மயிலாடு துறையில் இருந்து கடலூர் வழியாக விழுப்புரத்திற்கு தினந்தோறும் காலையில் பயணிகள் ெரயில் சென்று வருகின்றது.  இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ெரயில் சிதம்பரம் வழியாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் ெரயில் நிலையத்தில் காலை 6.45 மணியளவில் திடீரென்று 2 ெரயில்களும் நிறுத்தப்பட்டன. காலை நேரம் என்பதால் பயணிகள் தேநீர் மற்றும் காலை உணவு உண்பதற்காக புதுச்சத்திரம் ெரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு உணவு பொருட்கள் மற்றும் தேநீர், குடிநீர் போன்ற எந்த வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    காலை 7.45 மணி அளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது ெரயிலில் குழந்தைகள் வைத்திருந்த பயணிகள், வயதானவர்கள் பெருமூச்சு விட்டபடி மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். ஆனால், இந்த மகிழ்ச்சி சிறிது நேரத்தில் தவிடு பொடியானது.  கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் ெரயில் நிலையத்தில் மீண்டும் செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர். ெரயிலில் வந்த பயணிகள் எதற்காக சிக்னல் கிடைக்கவில்லை? ஏதேனும் பெரிய அளவிலான பிரச்சனையா? என்பதை ெரயில் நிலையத்தில் இறங்கி விசாரித்துக் கொண்டிருந்தனர். மேலும், பயணிகள் அனைவரும் ெரயில் நிலையத்தில் உணவு இல்லாமல் மிகுந்த வேதனையுடன் அலைந்து கொண்டிருந்தனர். சீரமைக்கும் பணி இந்த நிலையில் கடலூர் ஆலப்பாக்கம் ெரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நேற்று இரவு 10 மணிக்கு ெரயில்வே துறை ஊழியர்க ளால் தொடங்கப்பட்டது. இந்த பணி இன்று காலை வரை நடைபெற்றதால் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள்ெரயில் சுமார் 1 1/2 மணி நேரமாக புதுச்சத்திரம் மற்றும் ஆலப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆலப்பாக்கத்தில் இருந்து காலை 8.10 மணி அளவில் கடலூர் நோக்கி செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்திற்கு காலை 8. 25 மணிக்கு வந்தடைந்தது. சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக வந்தது குறிப்பிடத்தக்க தாகும்.

    • கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.
    • இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    உடுமலை:

    குடிமங்கலம் அருகே பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாமல் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பாளையம்,அடிவள்ளி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலக வரம்பில் வருகிறது.இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வந்தனர்.இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராம குடியிருப்புகளில் காலி இடம்,வீடுகள் விற்பனை செய்யும்போது கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.இதற்காக உரிய காரணமும் தெரிவிக்க மறுக்கின்றனர்.இதனால் இந்த கிராமங்களில் காலி இடங்களை வாங்கியவர்கள் பத்திரப் பதிவு செய்ய முடியாமலும்,இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.எனவே பத்திரப் பதிவுத்துறை உரிய விளக்கம் அளிக்கவும்,பிரச்சினைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    • போலீசார் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்
    • கொற்றிகோடு போலீசார் ஆற்றுகோணம் சென்று மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    கன்னியாகுமரி:

    பொங்கல் அன்று தக்கலை அருகே கைசாலவிளை மேக்காமண்டபம் பகுதியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஒவ்வொரு வீடாக சென்று பார்ப்பதும் செல்வதுமாக இருந்துள்ளார்.

    இதை கவனித்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவரது பெயர் கமலாட்சி எனவும், தனது மகளுக்கு பொங்கல் கொண்டு வந்ததாகவும் வீடு அடையாளம் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தனது மகளின் பெயர் ஊர் கேட்ட போது மகள் பெயர் கிரேசி எனவும் ஊர் பெயர் தெரியவில்லை எனவும் கூறினார். மேலும் தனது மகளை பார்க்க மேக்காமண்டபம் வந்து இந்த பாதை வழியாக வருவேன் எனவும் கூறினார்.

    பொதுமக்கள் மூதாட்டியை அமர வைத்து விசாரிக்க தொடங்கினர். பல மணி நேரம் ஆன பின்பும் மகள் வீடு கண்டுபிடிக்க முடியாததால் கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மூதாட்டியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டியின் வீடு புதுக்கடை காட்டுவிளை என கூறியதால் போலீசார் புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் மூதாட்டியின் போட்டோவையும் அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக புதுக்கடை போலீசார் விசாரணை செய்த போது மூதாட்டியின் கணவர் செல்லையா எனவும், அவர் இறந்த பிறகு மகன் தாஸ் வீட்டில் வசித்து வருவதும் பொங்கல் அன்று மகளை பார்க்க பொங்கல்படி கொண்டு சென்றுள்ளார். மகளின் வீடு ஆற்றுகோணம் பகுதியில் உள்ளது என தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து கொற்றிகோடு போலீசாருக்கு புதுக்கடை போலீசார் தெரிவித்தனர். பின்னர் கொற்றிகோடு போலீசார் ஆற்றுகோணம் சென்று மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மூதாட்டி தனது மகளையும், பேரக்குழந்தையும் பார்த்து கண் கலங்கினார். பின்னர் மூதாட்டியை அவரது மகளுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். மூதாட்டி வீடு அடையாளம் தெரியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாங்கள் மலை குறவன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சாலை ஓரத்தில் வசித்து வந்தோம்.
    • ஆனால் அங்குள்ள மக்கள் வீடு கட்ட அனுமதிக்கவில்லை.

    கடலூர்:

    நெய்வேலி மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகரை சேர்ந்த மலை குறவன் பழங்குடி மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களது இலவச வீட்டு மனை பட்டா, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு ஆவணங்களை ஒப்படைப்பதாக அறிவித்தனர் பின்னர் அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் மலை குறவன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சாலை ஓரத்தில் வசித்து வந்தோம். மேலும் எங்கள் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளி வசதி இல்லாமல் 40 குடும்பம் தவித்து வந்தோம்.

    இந்த நிலையில் சிதம்பரம் தாலுகா கூடு வெளிசாவடியில் வீட்டுமனை பட்டா அளித்தார்கள். இதைத் தொடர்ந்து அங்கு வாழ்வதற்கு சென்றோம். ஆனால் அங்குள்ள மக்கள் வீடு கட்ட அனுமதிக்கவில்லை. மேலும் ஊருக்குள் விடாமல் தாக்கினார்கள். ஆகையால் நாங்கள் வசித்து வந்த தாலுகாவில் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

    • தொடரும் குளறுபடியால் தட்டச்சு தேர்வு நாளை நடக்குமா என தேர்வர்கள் தவிக்கின்றனர்.
    • தற்போது வரை தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் கிடைக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் தட்டச்சு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 24, 25 ஆகிய நாட்களில் நடக்கும் என தொழில்நுட்ப கல்வி த்துறை அறிவித்திருந்தது. ஆனால் பழைய நடைமுறை தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடப்பட்டதால் தேர்வுகள் அப்போது ரத்து செய்யப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது பெய்த தொடர் மழை காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை (26-ந் தேதி) மற்றும் 27-ந் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் கிடைக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பொதுவாக ஹால்டிக்கெட்டுகள் தட்டச்சு பயிற்சி மையம் மூலம் வழங்கப்படும். ஆனால் தற்போது வரை ஹால் டிக்கெட்டுகள் வராததால் நாளை தேர்வு நடக்குமா? என்று தேர்வர்கள் பரிதவிப்புக்கு ள்ளாகின்றனர்.

    • அந்தியூரில் இருந்து பி-13 என்ற டவுண் பஸ் காலை 8 மணிக்கு அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவிலூருக்கு 8.30 மணிக்கு சென்றடையும்.
    • கடந்த 4 நாட்களாக இந்த பஸ் வரவில்லை என அந்த பகுதியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பணிமனையில் இருந்து தினமும் 85 பஸ்கள் செல்கின்றது. இங்கு வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 55 பஸ்கள், டவுண் பஸ் 30 இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் அந்தியூரில் இருந்து பி-13 என்ற டவுண் பஸ் காலை 8 மணிக்கு அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவிலூருக்கு 8.30 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் அங்கிருந்து அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவிகள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவ ர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் அந்த டவுண் பஸ்சில் காலை 9 மணிக்கு பள்ளி பஸ் நிறுத்தம் வந்தடைவது வழக்கம்.

    மேலும் மாலை 6 மணிக்கு பள்ளி முடிந்து அந்தியூர் பிரிவில் இருந்து மெசக்கவுண்டனூர் வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் சென்று கொண்டிரு க்கின்றனர். இந்நிலையில் அவர்கள் பஸ்கள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக இந்த பஸ் வரவில்லை என அந்த பகுதியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். அடிக்கடி இந்த பஸ் நிறுத்துவதால் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் நிலை தவிக்கும் நிலையில் உள்ளது.

    இதனை அரசு கவனத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் காலை நேரத்தில் வரக்கூடிய பஸ் ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ இல்லை டிரைவர், கண்டக்டர் வரவில்லை என்றாலோ மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.
    • வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . இங்குள்ள அறிஞர் அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடைகளின் உரிமம் புதுப்பிக்கவில்லை எனக்கூறி, கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர். இதனால் கடைகள் பூட்டப்பட்டதால்,பயணிகள் குளிர்பானம், தின்பண்டம், உள்ளிட்ட பொருட்கள் வாங்க பஸ் நிலையத்திற்கு வெளியே சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில், கடைகள் இல்லாததால், குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கவும், குடிநீர் பாட்டில் வாங்கவும் முடியவில்லை. வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது. ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் விபத்து ஏற்படுமோ என பயமாக உள்ளது . எனவே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில்,கடந்த ஆகஸ்டு 26 ந்தேதி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் 86 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 78 கடைகளின் அரசு நிர்ணய வாடகை அதிகமாக இருப்பதாக கூறி வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. மொத்தமுள்ள 86 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 2 கடைகளும், பஸ் நிலையத்தில் 4 கடைகளும், மாணிக்காபுரம் சாலையில் 2 கடைகளும் உள்ளிட்ட 8 கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டன. மற்ற 78 கடைகள் ஏலம் எடுக்கப்படவில்லை. இதனால் பஸ்நிலையத்தில் கடைகள் திறக்கப்படவில்லை. கடந்த 30 நாட்களாக பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டி கிடப்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    • நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது தெங்கு–மரஹடா, கள்ளம்பாளையம் மலை கிராமம்.இங்கு100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு செல்ல மாயாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பகுதி மக்கள் தினமும் பரிசல் மூலம் வியாபா–ரத்திற்காக சத்தியமங்கலம், கோத்தகிரி செல்கின்றனர்.

    இதேபோல் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்வதற்காகவும் பரிசலில் சென்று வருகின்றனர். இங்குள்ள கல்லூரி மாணவர்களும் பரிசல் மூலமே கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

    பரிசல் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. ஆனால் மழைக்கா லங்களில் திடீரென மாயா ற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிடும். இந்த மாதிரி நேரங்களில் ஆபத்தை உணராமல் மக்கள் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதியான அவலாஞ்சி, பைக்காரா, குன்னூர், அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் பைக்காரா அணை நிரம்பியுள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கூடுதல் நீர் வர வாய்ப்புள்ளதால் நேற்று பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கல்லூரிக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். அதேபோல் வியாபாரிகள் விவசாயிகள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க தடை தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதி சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இன்றும் கல்லூரிக்கு செல்லவில்லை. இதேபோல் விவசாயிகள் வியாபாரிகள் வெளியில் செல்லாமல் முடங்கிப் போய் உள்ளனர்.

    இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:

    நாங்கள் பரிசில் மூலம் தான் தினமும் பிழைப்பு க்காக வெளியூர் சென்று வருகிறோம். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

    சில சமயம் ஆபத்தை பொறுப்பெடுத்தாமல் பிழைப்புக்காக பரிசலில் சென்று வருகிறோம். தற்போது நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்துள்ளது. இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க முடியவில்லை. இதனால் கல்லூரி மாணவர்கள் இன்றும் கல்லூரிக்கு செல்லவில்லை.

    இதேப்போல் விவசாயிகள் வியாபாரிகளும் வெளியே செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடங்கி போய் உள்ளனர். அன்றாடம் வெளியே சென்று வருமானம் ஈட்டினால் தான் எங்கள் பிழைப்பு ஓடும். தற்போது 2 நாட்களாக கிராமத்திலேயே முடங்கி இருக்கிறோம்.

    நாங்கள் நீண்ட வருடமாக மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக பல்வேறு அதிகாரிகள் சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

    ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. இனியாவது அதிகாரிகள் தொங்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×