search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "extreme cold"

    • சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது.
    • மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்காக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகிளில் நேற்றும் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காடு, டேனீஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

    ஏற்காட்டில் நேற்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய மழை 3.30 மணி வரை சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது. ஏற்காடு ஒண்டிக்கடை பஸ் நிலையம், டவுன், செங்காடு, மஞ்சகுட்டை, வாழவந்தி, கொம்பக்காடு, நாகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கன மழை கொட்டியது.

    மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கன மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இதே போல டேனீஸ்பேட்டை, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஆனைமடுவு, வாழப்பாடி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது . சேலம் மாநகரில் நேற்று 3 மணியளவில் தொடங்கிய மழை லேசான தூறலுடன் நின்று போனது. இதனால் சேலம் மாநகர மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 17 மி.மீ.மழை பெய்துள்ளது. சேலம் 0.6, வாழப்பாடி 3, ஆனைமடுவு 1, ஆத்தூர் 1, தம்மம்பட்டி 9, சங்ககிரி 2.3, மேட்டூர் 3.2, டேனீஸ்பேட்டை 14 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 51.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.
    • குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் வயல் வெளியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் ஆத்தூர் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது மழையை தொடர்ந்து பனி மூட்டமும் நிலவுகிறது.

    இதனால் சேலம் மற்றும் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டு செல்கின்றனர். இந்த குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
    • பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    கடலூர் :

    தமிழகத்தில் கடந்து சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடலில் காற்று அதிகம் இருந்ததால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. தற்போது கடல் பகுதியில் அமைதி திரும்பியது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் திடீர் என பருவநிலை மாறி உள்ளது. இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்த கடும் குளிர் கடலூர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விழுப்புரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் பனிமூட்டம் அடர்ந்த புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

    இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் முகப்பு விளக்கை எரிய விட்டபடி கடும் குளிரில் நடுங்கியபடி எப்போது விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கிறார்கள்.  குறிப்பாக கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் கடுங்குளிர் வாட்டி வதைகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கடுங்குளிரை தாங்காமல் பெரும் சிரமப்பட்டு செல்கிறார்கள்.  இந்த கடும் குளிரால் அவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானோர் இந்த குளிரால் ஏற்படும் உடல் நடுக்கத்தை தாங்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் அலுவல கத்திற்கு செல்லும் பணி யாளர்கள் அதிகாலை நேரத்தில் இந்தக் கடுங்குளிரிலும் குளிர்ந்த தண்ணீரில் குளித்து விட்டு செல்கின்றனர்.இந்த தண்ணீரால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கடலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் ஏற்படும் கடும் குளிரிலிருந்து ஸ்வெட்டர் அணிந்து செல்கிறார்கள். எனவே பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி மாவட்டம் முழுவதும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
    • மலைப்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

    மழை நின்றதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவுடன் கடும் குளிரும் நிலவியது. இந்த நிலையில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி மாவட்டம் முழுவதும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    இதனால் காலை நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்படுகிறது. மலைப்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    ×