search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People suffer due to"

    • மழை நீர் வடிகால் பணி அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது.
    • வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து அண்ணா மடுவு வரை இருபுறங்களிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, சாலை விரி வா க்கம் பணி நடந்து வருகிறது.

    அந்தியூர் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு விழா மற்றும் பண்டிகை காலங்களில் வியாபாரம் நடப்பது வழக்கம். இந்த நிலையில் பஸ் நிலையம் பகுதியில் மழை நீர் வடிகால் பணி அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது.

    தற்சமயம் பண்டிகை காலம் தொடங்கி உள்ளது. மேலும் நவம்பர் 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படு கிறது.

    தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரு வதால் கடைகள் முன்பு பள்ளங்கள் தோண்டினால் அந்த பகுதியில் கடை நடத்துபவர்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    அதன் பிறகு தற்போது இந்த தீபாவளி பண்டிகை வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருக்கும் நிலையில் கடைகள் முன்பு பள்ளங்கள் தோண்டப்பட்டு இருப்பதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    பஸ் நிலையம் பகுதி களில் கடைகளில் அதிக வாடகை கொடுத்து கடை வைத்து நடத்தி வருகிறோம்.

    பண்டிகை காலங்களில் நடக்கும் வியாபராத்தை நம்பி தான் இருக்கிறோம். தற்போது தீபாவளி நேரத்தில் வியாபாரம் நடைபெறாமல் இருப்ப தனால் கடுமையாக பாதிக்க பட்டு வருகிறோம். மேலும் வாடகை கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    எனவே அந்தியூர் பகுதி யில் நடக்கும் பணி களை விரைவில் முடிக்க வேண்டும் என அந்த பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டு கொண்டனர்.

    மேலும் கடைகளுக்கு வரும் பொது மக்களும் கடைகளுக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

    இதே போல் அத்தாணி சாலை பொறிக்கடை கார்னர் பகுதியில் மழைநீர் வடிகால் பணி தொடங்க பள்ளங்கள் தோண்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் அங்கு பணிகள் தொடங்கப்படாத நிலையே இருந்து வருகிறது.

    இந்த பள்ளங்களால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் அந்த பள்ளத்தில் விழும் நிலையும் உள்ளது. இது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

    எனவே பண்டிகை காலம் வருவதற்குள் அந்த பணிகளை விரைவில் முடி த்து தர வேண்டும் என்று வியாபாரிகளும் பொது மக்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களும் தன்னார்வ லர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    • தார் ரோடு போடு வதற்காக ரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.
    • இதுவரை தார் ரோடு போடப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் எக்கட்டாம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுவலசு மற்றும் தட்டாரவலசு.

    இந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி களுக்கு செல்வதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தார் ரோடு போடு வதற்காக ரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.

    ஆனால் இதுவரை தார் ரோடு போடப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர். இதனால் அந்த வழியே செல்லும் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இது குறித்து புதுவலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் தார் ரோடு போடுவதற்காக கடந்த 70 நாட்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.

    ஆனால் இதுவரை தார் ரோடு போடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை சேதம் அடைந்து வருகிறது.

    மேலும் புழுதி பறந்து புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. மேலும் இந்த வழியாக பள்ளி வேன்களில் செல்லும் குழந்தைகளும் புழுதியால் மிகவும் பாதிக்கின்றனர்.

    எனவே இந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக தார் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஈரோட்டில் இன்று காலை கடும் பனி பொழிவு இருந்தது.
    • வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மாவட்ட த்தின் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டியது. தொட ர்ந்து மழை குறைந்தது. ஆனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது.

    மாவடடத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வரு கிறது. மேலும் பனி மூட்ட மாக காணப்பட்டு வருகிறது. இதனால் கடும் குளிர் வாட்டி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள வனப்பகுதிகளான தாள வாடி, கேர்மாளம், ஆசனூர், பண்ணாரி, தலமலை உள்பட பல்வேறு கடும் பனி மூட்டமாக இருந்து வருகிறது.

    இதனால் தாளவாடி வனப்பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வருகிறது.

    இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடி யாமல் கடும் அவதி அடைந்து வருகிறா ர்கள். அதிகாலையி ல் வேலைக்கு செல்லும் கிராம மக்கள் கடும் குளிரால் வெளியே வர தயக்கம் காட்டி வரு கிறார்கள்.

    மேலும் பலர் ஸ்சுவட்டர், குல்லா அணிந்த படியே வருகிறார்கள். மேலும் வனப்பகுதி களில் கடும் பனி பொழிவு பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டப்படியே செல்கிறார்கள்.

    மேலும் கோபிசெட்டி பாளையம், நம்பியூர், சென்னிமலை, பெருந்துறை, கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இன்று காலை வரை கடும் பனி பொழிவு பொழிந்து வருகிறது.

    அதே போல் அந்தியூர் அடுத்த பர்கூர், தாமரை க்கரை, தட்டக்கரை போன்ற மலைப்பகுதியில் இன்று காலை பனி பொழிவு காரண மாக கடும் குளிர் வாட்டியது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    ஈரோட்டில் இன்று காலை கடும் பனி பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். மேலும் பனியால் குளிர் வாட்டியது.

    இதனால் பெரும்பாலான பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் குளிரால் குல்லா அணிந்தபடியே வந்தனர்.

    சென்னிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் வழக்கத்தை விட கடந்த 2 நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

    காலை சூரிய உதயத்தை கடந்தும் 8 மணி வரை பனிப்பொழிவு தொடர்வதால் காலை நேரத்தில் வேலைக்கு, தொழிற்சாலைக்கும், கைத்தறிநெசவுத் தொழிலுக்கும், விசைத்தறி குடோனுக்கு, நெசவு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், அதிகாலை நடைப்பயிற்சி செய்வோர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    அதனால் வெளியில் செல்லும் பெரும்பாலானோர் குல்லா, ஸ்வெட்டர் அணியும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றும் அதிகாலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவும், குளிர் நடுக்கம் இருந்தது.

    • கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி மாவட்டம் முழுவதும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
    • மலைப்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

    மழை நின்றதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவுடன் கடும் குளிரும் நிலவியது. இந்த நிலையில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி மாவட்டம் முழுவதும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    இதனால் காலை நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்படுகிறது. மலைப்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    ×