search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Negotiating"

    • 25 வருடங்களுக்கு முன்பாக பஸ்களுக்கு வழித்தட உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
    • புகார் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    சூலூர்,

    சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் நிறுத்துவதில்லை என பொதுமக்கள் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையம், சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் கோவை தெற்கு ஆர்.டி.ஓ பாலமுருகன், சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகசுந்தரம், கோவை தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சண்முகவேல் மற்றும் தனசேகரன் முன்னிலை வகித்தனர்.

    இதில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், பா.ஜனதா கட்சியினர், பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அப்போது பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் பேசும் போது,25 வருடங்களுக்கு முன்பாக பஸ்களுக்கு வழித்தட உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    அப்போது நெருக்கடி அற்ற போக்குவரத்து இருந்தது. தற்போது மிகவும் நெருக்கடியாக அதிக அளவில் போக்குவரத்து உள்ளது.இதனையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.

    அதற்கு கோவை தெற்கு ஆர்.டி.ஓ, இனி வரும் காலங்களில் பொது–மக்களு–க்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.

    அப்போது பஸ் உரிமையாளர்கள் சங்க கோவை தலைவர் மணி கூறியதாவது:-

    இனி வரும் கா லங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களி–டம் கருமத்தம்பட்டி நிறுத்தம் பற்றி அறிவுறுத்தப்படும்.

    மேலும் இது சம்பந்தமாக பஸ்களில், அவிநாசி மற்றும் கருமத்தம்பட்டி நிறுத்தம் பற்றி எழுதப்படும். மேலும் கருமத்தம்பட்டியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுமக்களிடம் கோவை தெற்கு ஆர்டிஓ தனது செல்போன் என்னை கொடுத்து ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    இதில் பா.ஜ.கவை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ரேவதி தலைமையில் கருமத்தம்பட்டி மண்டல தலைவர் மோகன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலைகளில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர்.
    • இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்பட வில்லை என கூறப்படுகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில்

    ஆலைகளில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டி ருந்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யச்சொல்லி தாசில்தார் சண்முகவேலுவிடம் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி குமாரபா ளையம் தாலுகா அலுவல கத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து நேற்று தாசில்தார் மற்றும் நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர் நந்தன் தலைமையில் 2-ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, தொழிற்சங்க நிர்வாகிகள் பாலுசாமி, பாலசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் விசைத்தறி உரிமையா ளர்கள் பங்கேற்கவில்லை. செயற்குழு கூட்டம் நடத்தி, நாளை மறுநாள் (10-ந்தேதி ) தகவல் தெரிவிப்பதாக உரிமையாளர்கள் கடிதம் அனுப்பினர். இதனால் 2-ம் கட்ட முத்தரப்பு கூட்டம் ேதால்வியில் முடிந்தது. 

    • நாங்கள் மலை குறவன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சாலை ஓரத்தில் வசித்து வந்தோம்.
    • ஆனால் அங்குள்ள மக்கள் வீடு கட்ட அனுமதிக்கவில்லை.

    கடலூர்:

    நெய்வேலி மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகரை சேர்ந்த மலை குறவன் பழங்குடி மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களது இலவச வீட்டு மனை பட்டா, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு ஆவணங்களை ஒப்படைப்பதாக அறிவித்தனர் பின்னர் அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் மலை குறவன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சாலை ஓரத்தில் வசித்து வந்தோம். மேலும் எங்கள் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளி வசதி இல்லாமல் 40 குடும்பம் தவித்து வந்தோம்.

    இந்த நிலையில் சிதம்பரம் தாலுகா கூடு வெளிசாவடியில் வீட்டுமனை பட்டா அளித்தார்கள். இதைத் தொடர்ந்து அங்கு வாழ்வதற்கு சென்றோம். ஆனால் அங்குள்ள மக்கள் வீடு கட்ட அனுமதிக்கவில்லை. மேலும் ஊருக்குள் விடாமல் தாக்கினார்கள். ஆகையால் நாங்கள் வசித்து வந்த தாலுகாவில் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

    ×