search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்  அரசு ஆவணங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்
    X

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் ஆதார் கார்டு ,வாக்காளர் அட்டை போன்ற அரசு ஆவணங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஆவணங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்

    • நாங்கள் மலை குறவன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சாலை ஓரத்தில் வசித்து வந்தோம்.
    • ஆனால் அங்குள்ள மக்கள் வீடு கட்ட அனுமதிக்கவில்லை.

    கடலூர்:

    நெய்வேலி மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகரை சேர்ந்த மலை குறவன் பழங்குடி மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களது இலவச வீட்டு மனை பட்டா, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு ஆவணங்களை ஒப்படைப்பதாக அறிவித்தனர் பின்னர் அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் மலை குறவன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சாலை ஓரத்தில் வசித்து வந்தோம். மேலும் எங்கள் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளி வசதி இல்லாமல் 40 குடும்பம் தவித்து வந்தோம்.

    இந்த நிலையில் சிதம்பரம் தாலுகா கூடு வெளிசாவடியில் வீட்டுமனை பட்டா அளித்தார்கள். இதைத் தொடர்ந்து அங்கு வாழ்வதற்கு சென்றோம். ஆனால் அங்குள்ள மக்கள் வீடு கட்ட அனுமதிக்கவில்லை. மேலும் ஊருக்குள் விடாமல் தாக்கினார்கள். ஆகையால் நாங்கள் வசித்து வந்த தாலுகாவில் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

    Next Story
    ×