search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seige"

    • அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்யக்கோரி ஆருணின் உறவினர்கள் அழகியபாண்டியபுரம் - சங்கரன்கோவில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
    • இன்று மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் கிராமத்தை சேர்ந்தவர் ஆருண் (வயது 21). கல்லூரி மாணவர். இவரது உறவினர் ஆபிரகாம் (19).

    அரிவாள் வெட்டு

    நேற்று முன்தினம் இவர்கள் ஊரின் வடக்கே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆருணை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது.

    தகவலறிந்து இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆருணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அரி வாளால் வெட்டிய கும்பலை கைது செய்யக்கோரி ஆருணின் உறவினர்கள் அழகியபாண்டியபுரம் - சங்கரன்கோவில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் தாழையூத்து டி.எஸ்.பி. ஆனந்தராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கொலை முயற்சி, தீண்டாமை பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், இளைஞரணி முத்துப்பாண்டி, தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் மற்றும் பலர் வந்தனர். பின்னர் அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இதுகுறித்து மாணவரின் உறவினர்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் எங்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மாணவனை அரிவாளால் வெட்டிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.

    புதுவை நகர பா.ஜனதா சார்பில் பொதுப்பணித்துறை கழிவுநீர் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    பாதாள சாக்கடையை வீடுகளுக்கு இணைப்பதற்கு நகராட்சிகள் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொகுதிக்கு தொகுதி தெருவுக்கு தெரு வேறுவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

    இது பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து புதுவை நகர பா.ஜனதா சார்பில் பொதுப்பணித்துறை கழிவுநீர் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு புதுவை நகர் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். நகர மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், ரவி அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    மாநில தலைவர் சாமிநாதன், மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் துணை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் நிர்வாகிககள் ஜெயக்குமார், கார்த்திகேயன், கீர்த்திவாசன், சிவராஜ் பிரான்சிஸ், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #BJP
    கடை வரியை குறைக்கக்கோரி இன்று வியாபாரிகள் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தாம்பரம்:

    தாம்பரத்தில் உள்ள துரைசாமி ரெட்டியார் மார்க்கெட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு கடைக்கும் ஆண்டுக்கு ரூ.3500 வரியாக நகராட்சி வசூலித்து வந்தது. இந்த நிலையில் வரி கட்டணத்தை ரூ.46.300 ஆக நகராட்சி உயர்த்தியது. இதை கட்டாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடை வரி பல மடங்கு உயத்தப்பட்டதால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    வரியை குறைக்கக்கோரி இன்று வியாபாரிகள் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது விக்கிரமராஜா கூறியதாவது, தாம்பரம் துரைசாமி ரெட்டியார் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வரியை 110 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இந்த வரி உயர்வை குறைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம், முதல்வரை சந்தித்தும் முறையிடுவோம் என்றார்.

    வரி உயர்வை குறைக்க கோரி கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திய வியாபாரிகள் பின்னர் கலைந்து சென்றனர்.
    ×