என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி ஸ்டிரைக் எதிரொலி- சரக்குகளை மினிவேன் மூலம் கொண்டு வந்த வியாபாரிகள்
Byமாலை மலர்25 July 2018 12:20 PM GMT (Updated: 25 July 2018 12:20 PM GMT)
லாரிகள் வேலை நிறுத்தத்தால் புதுவை காய்கறி வியாபாரிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும், மினி வேன்களிலும் காய்கறிகளை எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் புதுவை மாநில லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளனர். இன்று 6-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தால் புதுவையில் இயங்கும் 3 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை. இவை அனைத்தும் மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரிலும், கோரிமேடு எல்லைப்பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுவைக்கு பெங்களூர், வேலூர், மேட்டுப்பாளையம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிகளவில் வரும். லாரி வேலை நிறுத்தத்தால் புதுவை காய்கறி வியாபாரிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும், மினி வேன்களிலும் காய்கறிகளை எடுத்து வருகின்றனர். இதனால் புதுவையில் காய்கறிகளுக்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை.
ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஒரு சில காய்கறிகளுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மினிவேன் மூலம் காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள், மளிகை பொருட்கள் ஆகியவையும் தடையின்றி கொண்டுவரப்படுகிறது. #tamilnews
பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் புதுவை மாநில லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளனர். இன்று 6-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தால் புதுவையில் இயங்கும் 3 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை. இவை அனைத்தும் மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரிலும், கோரிமேடு எல்லைப்பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுவைக்கு பெங்களூர், வேலூர், மேட்டுப்பாளையம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிகளவில் வரும். லாரி வேலை நிறுத்தத்தால் புதுவை காய்கறி வியாபாரிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும், மினி வேன்களிலும் காய்கறிகளை எடுத்து வருகின்றனர். இதனால் புதுவையில் காய்கறிகளுக்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை.
ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஒரு சில காய்கறிகளுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மினிவேன் மூலம் காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள், மளிகை பொருட்கள் ஆகியவையும் தடையின்றி கொண்டுவரப்படுகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X