search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிகர்கள்"

    • மாநாட்டில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
    • சாமானிய வணிகர்கள் கடைகளை சிங்கிள் விண்டோ மூலமாக அகற்றக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    மதுரை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41-வது வணிகர் தினத்தையொட்டி, வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை விமான நிலையம் அருகேயுள்ள வலையங்குளம் பகுதியில் மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான கால் கோள் விழா இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார். நிகழ்ச்சியில் மதுரை மண்டல மாவட்ட தலைவர் செல்லமுத்துத்து, மாநில தலைமைச் செயலாளர் பேராசியர் ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் பெரிஸ் மகேந்திரவேல், கூடுதல் மாநில செயலாளர் வி.பி.மணி உள்பட பல முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாவட்டச் செயலாளர் அழகேசன், பொருளாளர் லட்சுமி காந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மே மாதம் 5-ந்தேதி 41-வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கு லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டுக்கு பின்பு அமையக்கூடிய புதிய மத்திய அரசு எந்த அரசாக இருந்தாலும் வணிகர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். மேலும் இந்த மாநாட்டில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    சாமானிய வணிகர்கள் கடைகளை சிங்கிள் விண்டோ மூலமாக அகற்றக் கூடிய சூழ்நிலை உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், மும்பை, கேரளாவை சேர்ந்த முதலாளிகள் தமிழகத்தின் வணிகத்தை ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும் வணிகர் மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாடு வணிகர்களின் பாதுகாக்கும் முயற்சியாக வணிகர் பாதுகாப்பு சட்டம் என்னும் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு முயற்சி எடுக்கும்.

    வணிகர் சங்க மாநாட்டில் அமைச்சர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு வேண்டிய பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வகையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட உள்ளது. அதற்காக தனிக்குழுவும் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இந்த கால்கோள் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு மாநாடு சிறப்பு பெற தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சி நிறைவில் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

    • வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும்.
    • வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடியேற்று விழா நடந்தது. நகரத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டுரங்கன், பொருளாளர் கனகராஜ், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், துணைச் செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவத் தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் சங்க கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கடைவீதி பகுதிக்கு மேள தாளங்கள் முழங்க நடை பயணமாக சென்று பேசினார்.

    ஆன்லைன் வர்த்தகம் வணிகர்களை பெரிதும் பாதிக்கிறது. உணவு பாதுகாப்பு துறை வியாபாரிகளை மிரட்டினால் அவர்களை வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும். காய்கறிகளின் விலைகள் ஏறாமல் தடுக்க குளிர் பதனக்கிடங்குகளை அரசு அமைத்து, காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அரசே விலை நிர்ணயம் செய்து மக்களுக்கு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிகர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • வணிகர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    சென்னை:

    தென் சென்னை கிழக்கு மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில், அரசின் சமாதான திட்டத்தின்படி வணிகர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான வரி நிலுவைத் தொகையை வட்டியுடன் தள்ளுபடி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதலமைச்சருக்கும் , இதற்கு உறுதுணையாக இருந்து எங்களை வழிநடத்தி செல்லும் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதில் தற்போது மின்சார கட்ட ணமும், சொத்து வரியும் கூடுதலாக இருப்பதால் சிறு குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வருமானமும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே, வணிகர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மணலி வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் சங்க நிதி குழு தலைவர் சந்தனா என். சேகர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வடசென்னை வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜா சங்கர், நிதிக்குழு செயலாளர் சமுத்திர பாண்டியன், பொருளாளர் எஸ். எஸ். காட்வின், செயலாளர்கள் கருணாமூர்த்தி, ராஜேஷ், வேதா, துணை தலைவர் ராதாகிருஷ்ணன், முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ. எம். விக்ரம ராஜாவின் கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 50 ஆயிரத்துக்குட்பட்ட நிலுவை வரிகளை அடியோடு ரத்து செய்தும் அதற்கு மேல் உள்ள நிலுவை வரியினை எந்தவித அபராதமும் இன்றி, 50 சதவீதம் கட்டினால் போதும் என்று ஆணை பிறப்பித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வணிகர் சங்க இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலை கணேஷ், கனிராஜன், வேல்முருகன், சூர்யா, சரவணன், தேவேந்திரன் மற்றும் மகளிர் அணி தலைவி சுபத்ரா, மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உரிமமின்றி பால் பொட்டலங்கள் விற்ற வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளில் பால் வியாபாரிகள் தரமற்ற எடை அளவைகளை உபயோகப்படுத்துவதாக தொழிலாளர் துறைக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிசெல்வி தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 21-ந் தேதி ராஜபாளையம் பகுதிகளில் உள்ள பஞ்சு மார்க்கெட், ரெயில்வே பீடர் ரோடு பகுதிகளிலும், 24-ந்தேதி சூலக்கரை, முத்துராம்பட்டி அல்லம்பட்டி, பாண்டியன் நகர், மல்லாங்கிணறு ரோடு பகுதிகளிலும் கூட்டாய்வு செய்தனர்.

    இந்தக் கூட்டாய்வில் விருதுநகர் தொழிலாளர் துணை ஆய்வர் சதாசிவம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் உதவி ஆய்வர்கள் தயாநிதி, துர்கா, பிச்சைக் கனி ஆகியோர் ஈடுபட்டனர். இதில் எடையளவுகளை

    உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி வந்த ஒரு வணிகர் மீதும், எடை அளவுகள் மறுமுத்திரையிடப்பட்ட தற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வண்ணம் வெளிக்காட்டி வைக்காத 1 வணிகர் மீதும், 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் சட்டமுறை எடையளவு. (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் உரிமம் பெறாமல் பால் பொருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்ததாக ஒரு வணிகர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    மேலும் மறுமுத்திரையிடப்படாத 18 ஊற்றல் அளவைகள் பொதுப் பறிமுதல் செய்யப்பட்டது. ஊற்றல் அளவைகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை முத்திரையிடப்பட வேண்டும். எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு, 2009ஆம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதலாம். குற்றச்சாட்டிற்கு ரூ.25,000/-வரை அபராதமும், இரண்டாம் மற்றும் அதற்கு அடுத்த சூற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார்களை 04562-225130 என்ற தொலைபேசி எண்ணிலோ, தொழிலாளர் உதவி ஆணையர், 1/13 சி, ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக கட்டிடம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

    இந்தத் தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • இந்து வியாபாரிகள் நலச்சங்க துவக்க விழா மற்றும் அறிமுக கூட்டம் உடுமலையில் நடைபெற்றது.
    • மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் வரவேற்று பேசினார்.

    உடுமலை:

    இந்து வியாபாரிகள் நலச்சங்க துவக்க விழா மற்றும் அறிமுக கூட்டம் உடுமலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார்.மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஜெகன் சிறப்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் வரவேற்று பேசினார்.

    மாவட்ட தலைவர் யு.கே.பி.பிரதீப் உள்ளிட்ட நிர்வாகிகள், இந்து வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரமணி நன்றி கூறினார்.

    • மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதனை ரத்து செய்யக்கோரி கையெழுத்து பெறும் நிகழ்ச்சி வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வணிகர்களிடம் அவர்கள் கையெழுத்து வாங்கினர்.

    நெல்லை:

    தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதனை ரத்து செய்யக்கோரி வணிகர்களிடமிருந்து கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட பா.ஜனதா வர்த்தகப்பிரிவு துணை தலைவர் குரு மகராஜன் தலைமையில் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக வர்த்தகப்பிரிவு மாநில செயலாளர் அசோக் குமார், மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வணிகர்களிடம் அவர்கள் கையெழுத்து வாங்கினர். அதனைத் தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நெல்லை வடக்கு, தெற்கு, தூத்துக்குடி தெற்கு, வடக்கு , தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விக்கிரமராஜா குற்றச்சாட்டு
    • மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா மார்த்தாண்டத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழகம் முழுவதும் 'செஸ்' வரி புதிதாக விதிக்க ப்பட்டதால் வியா பாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை ரத்து செய்வதற்காக விரைவில் தமிழக முதல் வரை சந்திக்க உள்ளோம். வணிக வரித்துறை சார்பில் 'டெஸ்ட் பர்ச்சஸ்' என்ற பெய ரில் உணவுப் பொரு ட்கள் கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.

    வியாபாரிகள் ஏற்கனவே வரிகளை சரியாக முறை யாக செலுத்தி வருகின்றனர் இதனால் தமிழகம் அதிக வரி வசூல் செய்யும் மாநில ங்களின் வரிசையில் முன்னி லையில் உள்ளது. பரிசோதனை செய்து 'டெஸ்ட் பர்ச்சஸ்' என்ற பெயரில் அபராதம் விதிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.

    மார்த்தாண்டத்தைப் பொறுத்தவரை போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக செல்வதால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. மேலும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளது. எனவே மார்த்தாண்டம் வளர்ச்சி பாதையில் மீண்டும் கொண்டு செல்வதற்காக டவுன் பஸ், விரைவு பஸ் உட்பட அனைத்து பஸ்க ளும் மார்த்தாண்டம் மேம்பா லத்தின் கீழ்பகுதி வழியாக வந்து செல்ல வேண்டும்.

    அப்போது தான் பொது மக்களுக்கும் முழுமையாக பயன்படும். மேம்பாலத்தின் கீழ்பகுதி வருவதற்கு ஒரே ஒரு இடத்தில் அதாவது பம்மத்தில் மட்டுமே குறுகலான ரோடு உள்ளது.

    அந்தப் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கட்டிடத்தை மாற்ற வேண்டும். அப்பொழுது அனைத்து வாகனங்களும் கீழ் பகுதி வழியாக வந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அல் அமீன், தென்காசி மாவட்ட தலைவர் வைகுண்ட ராஜா, பொருளா ளர் கலை வாணன், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் சின்னத்துரை, குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பலமுறை நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.
    • ஏமாற்றமடைந்த வணிகர்களும் மற்றும் பொதுமக்களும் தங்களது பணத்தை பெற்றுத்தருமாறு சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்நிதி நிறுவனத்தில் சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள மான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

    குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு தங்களது முதலீட்டை திருப்பி தருமாறு பணம் கட்டியவர்கள் கேட்ட போது நிதி நிறுவனம் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தியுள்ளது.

    பலமுறை நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நிதி நிறுவனம் அறிவிப்பு எதுவும் இன்றி மூடப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத் தலைவர் ஞானமணி தலைமையில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த வணிகர்களும் மற்றும் பொதுமக்களும் தங்களது பணத்தை திருப்பி பெற்றுத்தருமாறு சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பொது மக்களின் முதலீட்டை திருப்பி கொடுக்கா மல் நிதி நிறுவன ம்மூட ப்பட்ட சம்பவம் சீர்காழி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் கிலோ அரிசி ரூ.3 வரை உயரும்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் திருப்பூர், பல்லடம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சி.எம்.துரைசாமி, தலைமையில் திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பண்டல் செய்யப்பட்ட அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் கே.சி.எம்.துரைசாமி கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு என அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு பெற்ற பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி மூடைக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் கிலோ அரிசி ரூ.3 வரை உயரும்.

    நடுத்தர குடும்பம் மட்டுமில்லாமல் தினமும் வேலைக்கு செல்லும் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கடந்த முறை ஜி.எஸ்.டி. வரி விதித்தபோது தமிழக அரசிடம் எடுத்துக்கூறியதால் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு உடனடியாக வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி அகில இந்திய அரிசி ஆலை சம்மேளனம், அகில இந்திய அனைத்து உணவு தானியங்களின் அமைப்புகள் இணைந்து நாளை (சனிக்கிழமை) அனைத்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த வணிகர்கள், அரிசி சில்லறை வணிகர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் ஒருநாள் அடையாள கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் காங்கயத்தில் 125 அரிசி ஆலைகள், தாராபுரத்தில் 40 அரிசி ஆலைகள், திருப்பூரில் 20, அவினாசி, ஊத்துக்குளியில் தலா 10 உள்பட மொத்தம் 205 அரிசி ஆலைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மொத்த வணிகர்கள், சில்லறை வணிகர்கள் நாளை (சனிக்கிழமை) நடக்கும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள். நாளொன்றுக்கு அரிசி ஆலையில் 25 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. கடைகளில் 30 ஆயிரம் டன் அரிசி விற்பனையாகும். அவை வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் கல்லுரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நகர் நல அதிகாரி நமச்சிவாயம் ,போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன், மருத்துவர் ராதிகா மைக்கேல், சமூக ஆர்வலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மாணவர்களிடம் விழிப்பு ணர்வு உரையாற்றினர்.

    பின்னர் மாணவ -மாணவிகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மணிமண்டபம்வரை பேரணியாக சென்றனர். அப்போது வரும்வழிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இதைப்போல் பொதுமக்க ளும் வணிக ர்களும் நமது குப்பையை நாமே அகற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • கஞ்சா ரவுடி கும்பல் கடைவீதியில் உள்ள ஒவ்வொரு கடையாக சென்று அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரிகளிடம் பணம் பறித்தனர்.
    • வணிகர் செந்தில்வேல் தாக்கப்பட்டதை கண்டித்தும், மிரட்டி பணம் பறித்ததை கண்டித்தும், சம்பந்தபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் கரந்தையில் 200-க்கும் மேற்ப்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் கரந்தை கடைவீதியில் கடை வைத்துள்ளார். இவர் வர்த்தக சங்க பொரு ளாளராகவும் உள்ளார்.

    நேற்று மாலை இவரது கடைக்கு கஞ்சா, குடி போதையில் கும்பலாக சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து பணம் கொடுக்குமாறு மிரட்டினர். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாது என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் செந்தில்வேலை அரிவாளால் வெட்டி விட்டு பணத்தை பறித்து கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த செந்தில்வேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிசிக்சைக்காக மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கஞ்சா ரவுடி கும்பல் கடைவீதியில் உள்ள ஒவ்வொரு கடையாக சென்று அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரிகளிடம் பணம் பறித்தனர். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 29), தினேஷ் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சிலரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று வணிகர் செந்தில்வேல் தாக்கப்பட்டதை கண்டித்தும், மிரட்டி பணம் பறித்ததை கண்டித்தும், சம்பந்தபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் கரந்தையில் 200-க்கும் மேற்ப்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்தனர்.

    இதையடுத்து வர்த்தக சங்க தலைவர் முருகானந்தம், செயலாளர் ரங்கராஜன் தலைமையில் ஏராளமான வியாபாரிகள் கடைவீதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தகவல் அறிந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×