search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "L Murugan"

    • வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
    • பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூரில் 1936-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி பிறந்தவர் பத்ரப்பன். வள்ளி கும்மியாட்ட கலைஞராக உள்ளார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள பத்ரப்பன், சிறுவயது முதலே கிராமிய கலைகள் மீது ஆர்வம் கொண்டு இருந்தார். அதன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்க ளில் வள்ளி கும்மி என்னும் கிராமிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

    இதுதவிர 20 ஆண்டுகளில் தாசனூரில் உள்ள மாணவ, மாணவிகள் 170 பேருக்கு இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்தார். மேட்டுப்பாளையம் நகராட்சி ராஜபுரத்தில் உள்ள மகளிர் குழுவிற்கும் இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்துள்ளார்.

    வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.

    கிராமிய கலையான வள்ளி கும்மி கலையில் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஈடுபட்டு வந்த நிலையில், அதை மாற்றி பெண்களும் அதிகளவில் பங்கேற்கவும், அவர்களுக்கு பயிற்சியும் அளித்த பெருமைக்குரியவர் பத்ரப்பன்.

    அந்த கலையின் வாயிலாக தேசப்பற்று, வரலாறு ஆகியவற்றையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    தொடர்ந்து வள்ளி கும்மி கலைக்கு சேவையாற்றி வரும் இவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது.

    இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும், நக்கீரன் என்ற மகனும், முத்தம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவியும், மகனும் இறந்துவிட்டதால் தனது மகள் முத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்து விவசாயம் பார்த்து வருகிறார். முத்தம்மாளின் கணவர் ரங்கசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.


    பத்மஸ்ரீவிருது குறித்து பத்ரப்பன் கூறியதாவது:-

    நாட்டுப்புற கலை என்பது இயல்பாகவே நம் மண்ணில் உருவானது. இந்த கலைவடிவம் மூலம் தான் மற்ற தகவல்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும். நான் 20 வயதில் இருந்தே வள்ளி கும்மி நடனம் ஆடி வருகிறேன்.

    இக்கலை என்னோடு அழிந்து விடாமல் இருப்பதற்காக மேட்டு ப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்டோருக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்.

    அவர்கள் தற்போது பல பேருக்கு கற்றுக்கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய கலைகளுக்கு எல்லாம் முன்னோடியாக வள்ளி கும்மி கலை உள்ளது. இதன்மூலம் உடலில் நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். பாரம்பரிய கலை, பண்பாடு, பழக்க வழக்கம், ஒழுக்கத்தை தர முடியும்.

    பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும். 87 வயதில் எனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் வள்ளி கும்மி மட்டுமல்லாமல் மற்ற கலைத்துறைகளிலும் உள்ளவர்கள் ஊக்கத்துடன் செயல்பட இந்த விருது துணை புரியும். எனக்கு விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறனே். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை நான் எனக்காக கருதாமல் ஒட்டுமொத்த கிராமிய கலைஞர்களுக்கு கிடை க்கும் பரிசாகவும், அங்கீகாரமாகவும் கருதுகிறேன்.

    நான் ஏற்கனவே தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைமுதுமணி விருதுகளை பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    பத்மஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ள பத்ரப்பனை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து எல் முருகன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதவாது

    ஒயிலாட்ட நாட்டுப்புற கலைகளின் முன்னோடியான, அய்யா பத்ரப்பன் அவர்களுக்கு, மத்திய அரசு "பத்மஶ்ரீ" விருது அறிவித்ததை அடுத்து உடனடியாக அவர்களது இல்லதிற்கு சென்று ஐயா அவர்களை நேரில் சந்தி்த்து மிகுந்த மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டேன்.

    வள்ளிக்கும்மி எனும் நாட்டுப்புற நடனத்தில் இடம்பெறும் பாடல்கள் மூலம், தெய்வங்களின் வரலாறு, தேச வரலாறு மற்றும் சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து பேசுபவர்.

    ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கலையில், பெண்களுக்கும் சமமான அதிகாரமளித்து பயிற்சி கொடுத்த முன்னோடி.

    தொடர்ந்து 66 ஆண்டு காலமாக தான் நேசித்து செய்யும் இக்கலையின் மூலம், 150-க்கும் மேற்பட்ட தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி, குருவாக்கியுள்ளார். 300-க்கும் அதிகமான "கும்மி" நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தமிழர்கள் இத்தினத்தை திருவிழாவாக கொண்டாடி வருவதாக, திருஞானசம்பந்தரின் "தேவாரப்" பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
    • கடந்த ஆட்சியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட தைப்பூசத் திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம்.

    சென்னை :

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "முருகனைக் கூப்பிட்டு

    முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே!

    உடல் பற்றிய பிணி ஆறுமே!"

    தமிழர் பெருங்கடவுள், அய்யன் முருகனுக்கு உகந்த நாளான "தைப்பூசம்" தினமான இன்று, தமிழகம் கடந்து முருகனை வழிபடும் அனைத்து மக்களுக்கும் "தைப்பூசத் திருநாள்" வாழ்த்துகள். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தமிழர்கள் இத்தினத்தை திருவிழாவாக கொண்டாடி வருவதாக, திருஞானசம்பந்தரின் "தேவாரப்" பாடல்களில் குறிப்புகள் உள்ளன.

    இத்தனை வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தை, தமிழக அரசு "அரசு விடுமுறையாக" அறிவிக்க வேண்டும் என்று, நாம் மேற்கொண்ட "வேல் யாத்திரையின்" போது வைத்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆட்சியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட தைப்பூசத் திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம் என கூறியுள்ளார்.

    • மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.
    • படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் அதுபோல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

    இதனால் மகரவிளக்கு தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சபரிமலை மகரவிளக்கு வழிபாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.


    இந்நிலையில் மகரவிளக்கு வழிபாட்டுக்கு பிறகு சபரிமலையில் சிறப்பு படிபூஜை தொடங்கியது. தினமும் நடைபெறும் படிபூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    வருகிற 20-ந்தேதி வரை படிபூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவச ம்போர்டு செய்து வருகிறது. 

    • தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர்.
    • ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.

    சென்னை :

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர்."

    தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர். ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.

    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற அவரது பாடல் போல இன்னும் மக்கள் மனதில் ஆழமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தலைவர். எளிய மக்கள் அனைவராலும் "புரட்சித் தலைவர்" என்று அன்போடு அழைக்கப்பட்டவர், அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்காக பணி செய்தவர்.

    தமிழக முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, தெய்வத்திரு டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றி வணங்குவோம்! என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் இருந்து முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

    சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    வருகிற 14-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் தமிழகத்தில் இருந்து முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நடத்திய விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வருகின்ற 22-ஆம் தேதி அயோத்தியா புண்ணிய பூமியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்படுகிறது.
    • இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்ற வேண்டும்.

    சென்னை:

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வருகின்ற 22-ஆம் தேதி அயோத்தியா புண்ணிய பூமியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்படுகிறது.

    இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தாழ்மையுடன் பாரத பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை நாம் அனைவரும் செய்வோம் என்று உறுதி அளிப்போம்.

    ஜெய் ஸ்ரீ ராம் ...! என கூறியுள்ளார்.

    • கடந்த 20-ஆம் தேதி முதல் மத்திய குழு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு வருகிறது.
    • தென் மாவட்ட பாதிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டதற்கும் அது குறித்த துரித நடவடிக்கை எடுத்தற்கும் நன்றிகள்.

    சென்னை :

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றிகள்..!

    தமிழக தென் மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கும் கனமழை பெருவெள்ளம் குறித்து ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் மத்திய குழு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு வருகிறது.

    இந்த நிலையில் தங்களின் கடுமையான பணிச்சுமைக்கு மத்தியில் தென் மாவட்டங்கள் பாதிப்பு குறித்து, தமிழக பாஜக

    இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் இணைந்து தென் மாவட்ட பாதிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டதற்கும் அது குறித்த துரித நடவடிக்கை எடுத்தற்கும் நன்றிகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோவை-பொள்ளாச்சி இடையே தினமும் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • கோவையில் இருந்து போத்தனூா், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு மாலை 4.05 மணிக்கு சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோவை-பொள்ளாச்சி இடையே தினமும் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரெயில் சேவையை மத்திய மந்திரி எல்.முருகன் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளாா்.

    கோவையில் இருந்து போத்தனூா், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு மாலை 4.05 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக பொள்ளாச்சியில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு கோவை சென்றடையும்.

    தொடா்ந்து திங்கள் கிழமை முதல் பொதுமக்கள் பயணிக்கும் வகையில் வழக்கமான சேவை இயக்கப்படும். இதில் கோவையில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06421) போத்தனூருக்கு காலை 5.35 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு காலை 5.54 மணிக்கும், பொள்ளாச்சிக்கு காலை 6.25 மணிக்கும் சென்றடையும்.

    மறுமாா்க்கமாக பொள்ளாச்சியில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06422) கிணத்துக்கடவுக்கு இரவு 9.18 மணிக்கும், போத்தனூருக்கு இரவு 9.44 மணிக்கும் கோவைக்கு இரவு 10.15 மணிக்கும் வந்தடையும்.

    இதுபோல் ஏற்கனவே கோவை-பொள்ளாச்சி இடையே வாரத்தின் 6 நாட்கள் (சனிக்கிழமை தவிர) இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06419/06420) திங்கள்கிழமை முதல் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
    • மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது.

    இதில் கடந்த 2 நாட்களில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்பி சாலைகளை மழை நீர் மூழ்கடித்து செல்கின்றன.

    குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டமும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

    நேற்றிரவு இரவு முதல் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 30க்கும் அதிகமான கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் பெய்த தொடர் மழையின் காரணமாக பர்லியாறு போலீஸ் சோதனை சாவடி அருகே மண்சரிவு ஏற்பட்டது.

    ஆங்காங்கே சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலை காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகள் மற்றும் அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    இதனால் இப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார். பர்லியார் அருகே மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதில் மத்திய மந்திரி எல்.முருகனின் காரும் மாட்டி கொண்டது. 1½ மணி நேரத்துக்கும் மேலாக அவரது காரும் சாலையிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, மண்சரிவினை ஒருபுறமாக அகற்றி, மத்திய மந்திரியின் கார் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

    அதன்பின்னர் அவரது கார் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு சென்றது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குன்னூர் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் கோத்தகிரி சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

    • கவனர்னருக்கு என சில அதிகாரங்கள் உள்ளன. அதற்கு ஏற்ப அவர்கள் செயல்படுகின்றனர்.
    • தமிழக அரசு தொழில்துறை ஊக்குவிக்க தவறி வருகிறது. தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும்.

    கோவை:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் இன்று காலை விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது இந்த பகுதிகளில் ஜவுளி தொழிலானது நலிவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தி.மு.க கொண்டு வந்த மின் கட்டண உயர்வு தான்.

    தொழில்களுக்கு மட்டுமின்றி, வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

    தொழில்துறையினர் மின்கட்டண உயர்வை குறைக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே அரசு இதில் கவனம் செலுத்தி, ஜவுளி துறையினர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    நெல்லையில் பட்டியலின மாணவர் மீது வன்கொடுமை தாக்குதல் நடந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேங்கைவயல் விவகாரத்தின் போதே அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், தற்போது நெல்லையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது.

    எனவே இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மக்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

    மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு 1000-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் தொழில்துறையினருக்கு ஆதரவாக பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தமிழக அரசு பா.ஜ.கவினரை தேடி பிடித்து வழக்கு போட்டு வருகிறது. வழக்குகளுக்கு எல்லாம் பா.ஜ.க அஞ்சுவது கிடையாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்தித்து, இன்னும் வேகத்துடன் வேலை செய்பவர்கள் தான் பா.ஜ.கவினர். எனவே வழக்கு போட்டு எங்களை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம்.

    அரசு அனுப்ப கூடிய கோப்புகளில் எல்லாம் கண்ணை மூடி கொண்டு கையெழுத்து போடுவது கவர்னரின் வேலை அல்ல. அதனை படித்து பார்த்து, அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் செய்வார்.

    இவர்களுக்கு தாங்கள் அனுப்பும் கோப்புகளில் எதுவும் கேட்காமல் கையெழுத்து போட்டால் கவர்னர்கள் நல்லவர்கள். இல்லையென்றால் கெட்டவர்கள் போன்று சித்தரிப்பார்கள். இதுதான் வழக்கமாக உள்ளது.

    கவர்னர் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்தும், அதில் கைதான நபரின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும்.

    தமிழகத்தில் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொழில்துறை ஊக்குவிக்க தவறி வருகிறது. தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும்.

    கவர்னர்களை எதிர்த்து தமிழக, கேரள அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இப்படி எல்லாம் அவர்களை மிரட்டி ஒன்று செய்ய முடியாது. கவனர்னருக்கு என சில அதிகாரங்கள் உள்ளன. அதற்கு ஏற்ப அவர்கள் செயல்படுகின்றனர். மேலும் கவர்னர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கவர்னர் மாளிகை முன்பு தாக்குதல் என்பது அரசியல் அமைப்பின் மீது நடத்திய தாக்குதல்.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தாலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாட்டோம்.

    நெல்லை:

    நெல்லை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோது கூறியதாவது:-

    தமிழக கவர்னர் இல்லம் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்பவரை தி.மு.க. வழக்கறிஞர்கள் 2 பேர் தான் ஜாமின் எடுத்துள்ளனர். ஜாமின் எடுத்த இசக்கி பாண்டியன் மற்றும் நிசிந்த் 2 பேரும் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது.

    தமிழக ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகி உள்ளது. ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசுவதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெட்ரோல் குண்டு வீசியவனுக்கு பின்னணியில் யார்? இருக்கிறார்கள். அந்த குற்றவாளியின் பின்புலம் என்ன என்பதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் முழுமையாக உண்மை நிலவரம் தெரியவரும்.

    கோவையில் பாலஸ்தீன கொடியை ஏற்றுகிறார்கள். தமிழக காவல்துறை இதையெல்லாம் வேடிக்கை பார்க்காமல் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் மாளிகை முன்பு தாக்குதல் என்பது அரசியல் அமைப்பின் மீது நடத்திய தாக்குதல். தி.மு.க.வினருக்கு அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கிடையாது.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தாலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாட்டோம். கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை எந்த மாநில அரசுகள் மீதும் கை வைத்ததில்லை. 356 பிரிவை பயன்படுத்தும் எண்ணம் இந்த அரசுக்கு கிடையாது. தமிழகத்தில் இன்று அரசியல் அமைப்பு சட்டம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    தமிழக கவர்னர் மாளிகை வெளியே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு காவல்துறையை பொறுப்பில் வைத்துள்ள தமிழக முதலமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெட்ரோ பள்ளியில் தொடங்கும் பயணம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு முடிவடைகிறது.
    • அண்ணாமலை நடை பயணத்தையொட்டி அவினாசியில் பா.ஜ.க.,கொடி, தோரணங்களுடன் தொண்டர்கள் உற்சாக நடனமாடினர்.

    அவினாசி:

    தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டும், மத்திய பா.ஜ.க., அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேசுவரத்தில் அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லையில் நடை பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். தனது 2-ம் கட்ட நடைபயணத்தை செப்டம்பர் 3-ந்தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கி னார். தேனி, திண்டுக்கல், நீலகிரியில் நடைபயணம் மேற்கொண்டு, கோவையில் தனது 2-ம் கட்ட நடை பயணத்தை செப்டம்பர் 27-ந்தேதி நிறைவு செய்தார்.

    2 கட்ட நடைபயணத்தை முடித்த அவர் 3-ம் கட்ட நடைபயணத்தை கடந்த 6-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்க இருந்தார். ஆனால் மிலாடி நபி காரணமாக மேட்டுப்பாளையத்தில் நடக்க இருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.

    தொடர்ந்து அவரது டெல்லி பயணம், உடல்நலக்குறைவு காரணமாக அவரது நடைபயணம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டு, இன்று 16-ந்தேதி அவினாசியில் இருந்து தொடங்கும் என தமிழக பா.ஜனதா தலைமை அறிவித்தது. அதன்படி இன்று காலை 11மணிக்கு நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதியில் இருந்து தனது 3-ம் கட்ட நடை பயணத்தை அண்ணாமலை தொடங்கினார். மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மந்திரி பியூஸ்கோயல், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர்.

    அவிநாசி சேவூர் ரோட்டில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை , அவிநாசி தாலுகா அலுவலகம், வடக்கு ரதவீதி, கிழக்கு ரத வீதி , பி.எஸ். சுந்தரம் வீதி வழியாக சுமார் 2 கி.மீ., தூரம் வரை நடந்து சென்று அவினாசி புதிய பஸ் நிலையத்தை அடைந்தார். அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் அண்ணாமலை பேசினார்.

    அவிநாசியில் நடை பயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் திரளான பா.ஜனதா கட்சியினரும் ஊர்வலமாக நடந்து வந்தனர். வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து அண்ணாமலை உற்சாகமாக கையசைத்தும், கும்பிட்ட வாறும் நடந்து சென்றார்.

    அப்போது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை புகார் பெட்டியில் அளித்தனர். வியாபாரிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நேரிடையாக கேட்டறிந்ததுடன் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அண்ணாமலை நடை பயணத்தையொட்டி அவினாசியில் பா.ஜ.க.,கொடி, தோரணங்களுடன் தொண்டர்கள் உற்சாக நடனமாடினர்.

    அண்ணாமலையை வரவேற்று அவிநாசியின் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் வரவேற்பு வளையங்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. கொங்குநாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி நடனம் ஆடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணாமலை நடைபயணத்தால் அவிநாசி பகுதியானது களை கட்டியது. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவினாசியில் நடைபயணத்தை முடித்து கொண்டு காரில் மேட்டுப்பாளையத்திற்கு அண்ணாமலை செல்கிறார்.

    பின்னர் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் மெட்ரோ பள்ளி முன்பு அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.அவருக்கு மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பா.ஜ.க.வினர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு முடிந்ததும், அங்கிருந்து பல்வேறு வீதிகள் வழியாக 2 அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்கிறார்.மெட்ரோ பள்ளியில் தொடங்கும் பயணம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு முடிவடைகிறது. அதனை தொடர்ந்து அங்கு பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    அந்த கூட்டத்தில் பங்கேற்று அண்ணாமலை பேசுகிறார். அவினாசி மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் நடைபயணத்தில் மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

     அவினாசி, மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, நாளை 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூரிலும், 18-ந்தேதி பவானிசாகர், கோபி செட்டிபாளையத்திலும் நடைபயணம் மேற்கொள்கிறார்.19-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம், சூலூரிலும், 20-ந்தேதி திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, 25-ந் தேதி பெருந்துறை, மொடக்குறிச்சி யிலும் நடைபயணம் செல்கிறார்.26-ந்தேதி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கிலும், 27-ந்தேதி சங்ககிரி, குமாரபாளையம், 28-ந்தேதி நாமக்கல், திருச்செங்கோட்டிலும் நடை பயணம் மேற் கொள்கிறார். அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு அண்ணாமலை இன்று முதல் மேற்கொள்ளும் 3-ம் கட்ட நடைபயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×