search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூசம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முருகப் பெருமான் நடனப் பிரியன். அவனே நடன சிகாமணி.
    • முருகன் குடையுடன் கூத்தாடி அசுரர்களை வென்றார்.

    ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் சூரியன் கிழக்கில் இருந்து தென்பக்கமாக உதிக்கும் காலம்.

    இக்காலத்தை தட்சிணாயன புண்ணிய காலம் என்பர்.

    தை முதல் ஆனி வரையான 6 மாத காலம் சூரியன் கிழக்கில் இருந்து வடக்குப் பக்கமாக உதிக்கும்.

    இதை உத்திராயண புண்ணிய காலம் என்பர்.

    வடதிசை இறைவனுக்குரிய திசை.

    இறைவன் வடதிசையில் வீற்றிருக்கிறான்.

    தை முதல் ஆனி வரை தேவர்களுக்கு ஒரு பகல் பொழுது, ஆடி முதல் மார்கழி வரை ஒரு இரவு.

    இந்த இரண்டும் சேர்ந்த பகலிரவு அவர்களுக்கு ஒரு நாள் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

    இவ் வகையில் மார்கழி வைகறைப் பொழுதாகவும், தை மாதம் இளங்காலைப் பொழுதாகவும் கொள்ளப்படுகிறது.

    இறைவனைத் தொழ அவனுடைய அருளைப் பெற மிகச் சிறப்பான நேரம் வைகறைப் பொழுதும் இளங்காலைப் பொழுதுமாகும்.

    சூரியன் மகர ராசியில் பிரவேசித்து உதிக்கும் நாளன்று நாம் மகர சங்கராந்தி என்று தைப் பொங்கல் நாளாகக் கொண்டாடுகிறோம்.

    இந்த பிரபஞ்சத்தையும், உயிர்களையும் படைத்த இறைவன், தன் கருணையினால்,

    கருவறையில் அசைவற்றுக் கிடந்த உயிர்களுக்கு, உடல் கொடுத்து, அவன் படைத்த இந்த உலகத்தையும்

    அதன் பொருட்டான இயற்கையையும் நாம் அனுபவிக்கச் செய்து,

    இந்த பிரபஞ்சத்தை இடையறாது இயக்கி வரும் பொருட்டு,

    திருநடனம் புரிந்த தினமாகத் தைப்பூச நன்னாளை ஆன்றோர் வகுத்துள்ளனர்.

    இறைவன் உயிர்கள் பொருட்டு நடனம் புரிந்த தினம் தைப்பூச தினம்.

    இந்த பிரபஞ்சம் முழுவதும் அவன் திருநடனத்தால் தான் இயங்குகின்றன.

    எனவே இறைவன் ஆனந்த நடனம் புரிந்த நாளாகத் தைப்பூச நன்னாளைக் கொண்டாடி வருகிறோம்.

    முருகப் பெருமான் நடனப் பிரியன்.

    அவனே நடன சிகாமணி.

    முருகன் "குடை", "துடை", "பவுரி" என் னும் பலவகைக் கூத்துக்களை ஆடினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முருகன் குடையுடன் கூத்தாடி அசுரர்களை வென்றார்.

    அதனால் அவருக்கு "சத்ரநடன மூர்த்தி" என்று பெயர்.

    சிலப்பதிகாரம் முருகப் பெருமானின் கூத்தை விளக்குகிறது.

    சிதம்பரத்தில் எல்லாவித இசைக் கருவிகளும் ஒலிக்க முருகன் நடனமாடினான் என்பார்கள்.

    பல கோவில் சிற்பங்களில் முருகப்பெருமான் நடனம் புரியும் சிற்பங்கள் உள்ளன.

    முருகப் பெருமான் நடனமூர்த்தி என்பதற்கு இவைகள் சிறந்த எடுத்து காட்டாக விளங்குகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது.
    • திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது.

    தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது.

    உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது.

    அதிலிருந்தே அண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோவில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது.

    அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தி கோவில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோவிலின் வாயிலில் ஒரு பிரம்மஹத்தி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவபெருமான் பார்வதியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.

    வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த் தொலியும் ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை,

    வியாக்கிர பாதமுனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரம் தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் தரிசித்து ஆனந்தமடைந்தார்கள்.

    பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக

    சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.

    சிதம்பரத்திற்கு வந்து அரும் பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, ரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது தைப்பூசப்புண்ணிய தினத்தன்று தான்.

    அதன் காரணமாகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 12ம் நாள் தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறும்.
    • இக்குளம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய கணபதிதான் முக்குறுணிப் பிள்ளையார்.

    * பஞ்ச சபைகளில் ஒன்றான ஞானசபையில் சிவபெருமான், உமாதேவியோடு சேர்ந்து ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் தைப்பூசத் திருநாள்.

    * தாமிரபரணியில் தைப்பூசத்தன்று பராசக்தி நீராடி இறைவன் அருளைப் பெற்றாள்.

    * மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 12ம் நாள் தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறும்.

    சொக்கன், மீனாட்சியுடன் எழுந்தருளி உலாவருவார்கள்.

    இக்குளம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய கணபதிதான் முக்குறுணிப் பிள்ளையார்.

    * தைப்பூசம் வியாழக்கிழமையன்று வந்தால், அன்று மட்டும் திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் உள்ள காசிபநாதர் ஆலய நடராசருக்கு புனுகுசார்த்தி பூஜை செய்வார்கள்.

    அதனால் இவருக்கு புனுகுசபாபதி என்றே பெயர்.

    * செல்வம் வேண்டுபவர்கள் வியாழனன்று வரும் பூசத்துன்று மகாலட்சுமி பூஜையை ஆரம்பிப்பார்கள்.

    தைப்பூசத்தன்று சிவன், முருகன், மகாலட்சுமி கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதைக் காணலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1871ல் பிரஜோபதி வருடத்தில் வள்ளலார் ராமலிங்க அடிகள் முதல் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார்.
    • இங்கு தென்கிழக்கே ஒரு பாம்புப் புற்று பெரிதாக உள்ளது. இது ஒரு அதிசயப்புற்று.

    * பாபநாசம் பாபநாகர் ஆலயத்தில் தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்பிடை நின்று ஆடிக்காட்டியதால், அன்றைய தினம் நந்திக்கு சந்தனக் காப்பிடுவார்கள்.

    * தைப்பூசத்தன்று வடலூரில் ஜோதி தரிசனம் காணலாம்.

    இதை சத்ய ஞான சபையில் மாதந்தோறும் பூசத்தன்று 6 திரைகளை விலக்கி பாதி தரிசனம் காண வைப்பர்.

    ஆனால் தைப்பூசத்தன்று மட்டும் 7 திரைகளை முழுவதும் விலக்கி முழுமையான ஜோதி தரிசனத்தை கண்ணாடியில் காட்டுவார்கள்.

    1871ல் பிரஜோபதி வருடத்தில் வள்ளலார் ராமலிங்க அடிகள் முதல் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார்.

    அது இன்றளவும் நடைபெறுகிறது. அவர் ஏற்றிய அடுப்பு அணையா அடுப்பாக பக்தர்களுக்கு இடைவிடாது அன்னதானமளித்து வருகிறது.

    * கதித்தமலை முருகன் கோவிலில் தைப்பூசம் கழித்த 4ம் நாளன்று காலை மலைமீது தேரோட்டம் நடைபெறும்.

    இவ்வாலயம் மலைமீது அமைந்துள்ளதால் இங்கு தென்கிழக்கே ஒரு பாம்புப் புற்று பெரிதாக உள்ளது.

    இது ஒரு அதிசயப்புற்று.

    உத்தராயன புண்ணிய காலமாகிய தை முதல் ஆனி வரை வளர்ந்தும், தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி முதல் மார்கழி வரை தேய்ந்தும் வருவது சிறப்பாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பைஞ்சீலி சிவாலய குடைவரை சந்நிதியில் சிவனும் அம்பாளும் முருகருடன் காட்சி தருகின்றனர்.
    • இவ்விழா தில்லையில் பத்து நாட்கள் நடைபெறும்.

    * தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூச நட்சத்திரம் சேரும் நாளே தைப்பூசத் திருநாளாகும்.

    உலகில் முதலில் நீரும், அதிலிருந்து உயிர்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    இவை நடைபெற்ற நாள்தான் தைப்பூச நாள்.

    இத்திருநாள் முருகன் அருளும் எல்லா திருத்தலங்களிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    தைப்பூசத்தன்றுதான் வள்ளியை முருகன் மணம் புரிந்து கொண்டார்.

    * ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கை தீர்த்தக்கரையில் தீர்த்தவாரியும், நடன தரிசனமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    இவ்விழா தில்லையில் பத்து நாட்கள் நடைபெறும்.

    இந்த தாண்டவம் காண வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமுனி ஆகிய மூன்று முனிவர்களின் சிலைகளை ஒரே பீடத்தில் எழுந்தருளச் செய்து சிவகங்கை கரைக்கு கொண்டு வருவர்.

    * திருப்பைஞ்சீலி சிவாலய குடைவரை சந்நிதியில் சிவனும் அம்பாளும் முருகருடன் காட்சி தருகின்றனர்.

    அவர்கள் காலடியின் கீழ் குழந்தை வடிவ எமனைக் காணலாம்.

    இங்கு தைப்பூசத்தன்று சிவன் எமனுக்கு பதவி அருளும் விழா நடைபெறும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள்.
    • இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது.

    1. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை.

    வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப்படுகிறது.

    அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

    2. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம்.

    இங்கு காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள்.

    அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார்.

    அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

    3. இலங்கையில் நல்லூர் என்னும் திருத்தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடுகிறார்கள்.

    வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள்.

    இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.

    4. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம்.

    இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார்.

    இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது.

    கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழிவார்கள்.

    இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    5.திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம்.

    எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.

    6. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது.

    வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம்.

    இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.

    7. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான்.

    இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.

    8. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும்.

    இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும்.

    தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர்.

    பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது.

    'பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது' என்பது பழமொழி.

    9.சனி பகவான் தொடாத கடவுள் முருகனே.

    சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர்.

    வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.

    10. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர்.

    இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.

    தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத்துறைக்கு வந்து, தீர்த்தவாரி கண்டு வீதிவழி ஆலயம் வருவார்கள்.

    இக்காட்சி காணக்கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக் கூத்து நடத்துவார்கள்.

    ஆலயத்தில் அன்று விசேஷ பூஜை நடைபெறும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுவது மலேசியாவில் மட்டுமே
    • சப்த கன்னியருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.

    1. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது.

    இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும்

    தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.

    2. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.

    சப்த கன்னியருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.

    3. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது.

    இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.

    4. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.

    5. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார்.

    உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுவது மலேசியாவில் மட்டுமே.

    6. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார்.

    இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

    7. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார்.

    தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.

    8. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும்.

    அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர்.

    தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.

    9. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

    தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம்.

    உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.

    மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    10. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில்,

    முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும்

    அதனைத் தரிசிப்பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள்.

    மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு,

    கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து

    வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.
    • தைப்பூசம் அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டார்.

    1. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

    2. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.

    3. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.

    4. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

    பிரியாத வரத்தைப் பெறலாம்.

    5. தைப்பூசம் முருகனுக்கு செய்யும் சிறப்பு விழாவாகும்.

    அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டார்.

    6. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்த சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம்.

    இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

    7. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    8. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார்.

    இதையொட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும், அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

    9. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும்.

    மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

    10. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார்.

    இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது.

    இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான்.
    • தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

    2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.

    3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

    4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.

    5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான்.

    அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.

    6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.

    7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும்.

    எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

    அந்த பாடல்கள் 'காவடி சிந்து' என்று அழைக்கப்பட்டன.

    9. தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள்.

    10. முருகப் பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மருதமலை ஒரு மருந்து மலையாக இருந்தது என்றும் சில கதைகள் உண்டு.
    • கொங்கு நாட்டில் ஒரு கூறாகிய ஆறை நாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது.

    1. மருதமலை-கோவை நகரத்திற்கு வடமேற்கு எல்லையாக அமைந்துள்ளது.

    இதைச்சுற்றிலும் காடுகளே அமைந்துள்ளது.

    2. கொங்கு மண்டலம் ஆதிகாலத்தில் இருபத்து நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

    அதில் கொங்கு நாட்டில் ஒரு கூறாகிய ஆறை நாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது.

    3. மருதமலை மிகப் பழம்பெருமையுள்ளது என்பதற்கு நிறைய ஆதாரங்களும், கல்வெட்டுக்கள், புராணங்கள் ஆகியவையும் சான்றாக உள்ளது.

    4. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு மருதமலையான், மருதாசலம், மருதன் போன்ற பெயர்கள் கோவை மாவட்டத்தில் அதிலும் மருதமலை அமைந்துள்ள அடிவாரப்பகுதி நாடாகிய ஆறை நாட்டில் வழங்கி வந்திருக்கிறது.

    5. கச்சியப்ப முனிவரால் கூறப்பட்ட மருதமலைக்கும் இன்றைக்கு நாம் பார்க்கும் மருதமலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

    அதனுடைய வளமும் உயர்வும் இன்று சிதைந்து விட்டது.

    6. விஷ்ணு முதல் இந்திராதி தேவர்களும் ஒரு காலத்திலே மருதமலைக்கு வந்து முருகனிடம் வரம் வேண்டி காத்திருந்தார்கள் என்பதற்கான கதையும் புராணச்சான்றும் இருக்கிறது.

    7. தவயோகிகளும், ஞானிகளும், தவத்திற்காகவும்-சாகாத ஜீவ சக்தி பெற்ற கல்ப மூலிகைகளுக்காகவும் மருதமலையில் வந்து தங்கியிருந்தனர்.

    8. காமதேனு வந்து உலாவி பசியாற மேய்ந்து மருத மரத்து அடியிலே இருந்து மருத தீர்த்தம் பருகியிருக்கிறது.

    9. மருதமலை பல்வேறு தீர்த்த மகிமை கொண்டது. மருத தீர்த்தம், அர்ச்சுன தீர்த்தம், கந்த தீர்த்தம், அனுமன் தீர்த்தம் சரவணப் பொய்கை ஆகியவைகள் மருதமலையிலே இருந்ததற்கான சான்றுகள் இருக்கிறது.

    10. சரவணப்பொய்கையென்பது மருதமலை முருகன் சந்நிதியில் நேர் மேற்கு இரண்டு மைல் தூரம் நடந்தால் இன்றும் இருக்கிறது.

    11. அனுமன் தீர்த்தம் என்பது முருகப் பெருமான் கோவிலில் இருந்து வடமேற்கே மூன்று மைல் தூரம் சென்று உச்சிப் பிள்ளையார் கோவிலின் கீழ் சரிவில் உள்ளது.

    12. மருதமலையில் தீர்த்தங்கள் மட்டுமின்றி ஆங்காங்கே நிறைய ஊற்றுகளும் இருந்திருக்கின்றன.

    இப்பொழுது இருக்கிற இடும்பன் கோவிலின் நேர் தெற்கே வக்கன் ஊற்று ஒன்று இருந்திருக்கிறது.

    இன்னும் பெயர் தெரியாத ஊற்றுக்கள் ஆங்காங்கே இருந்திருக்கிறது.

    13. மருதமலையில் சாகாத மூலிகைகளும் கல்ப விருட்சங்களும் வளர்ந்து சஞ்சீவிகளின் காற்றுப் பட்டு அதில் உள்ள தீர்த்தங்களும் அமிர்தம் பொருந்தியதாகவும், உடல் பிணி மனப் பிணி கர்மப்பிணி இவைகளைத் தீர்ப்பதாகவும் இருந்தது.

    14. இரவிலே மின்னலெனப் பிரகாசித்து இரவை ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்த ஜோதி விருட்சங்களும் அடர்ந்த இருளிளே பொன்னிறமாக ஒளிரும் ஜோதிப்புற்களும், நாகநந்தா, நாகதாளி போன்றவைகளும் மருதமலையில் ஒரு காலத்தில் செழித்து வளர்ந்து கிடந்தன.

    நாகதாளியின் கனிகள் பாம்புபோல படமெடுத்த வண்ணம் காய்த்து, கனிந்து நீண்டிருப்பதைக்கண்டு மயிலினங்கள் நாகப்பாம்புக் குட்டிகள் படமெடுத்து நிற்கிற தென்று நினைத்து ஓடிவந்து கொத்துமாம்.

    15. மருதமலை ஒரு மருந்து மலையாக இருந்தது என்றும் சில கதைகள் உண்டு.

    உடல் நோயைத் தீர்ப்பதற்கான தீர்த்த வளமும், மூலிகை வளமும் தன்னகத்தே கொண்டிருந்தது.

    16. மருதமலை தல விருட்சமான மருத மரத்தின் அடியிலே ஊற்றெடுக்கும் தீர்த்தத்திற்கு உடல் பிணி தீர்க்கும் சக்தியும் இதில் மூழ்கி எழுவோருக்கு உடல் சோர்வு நீங்கி சித்த சுத்தியும், நினைத்த காரியங்களை சித்திக்க வைக்கும் சக்தியும் இருந்ததால் மருத தீர்த்தம் மருதாசலம் மருதாசல மூர்த்தி என்றெல்லாம் பெயர் பெற்றது.

    17. மருதமலையில் பல இடங்களில் சோலைகள் உள்ளன. இங்கு குறிஞ்சி செடிகளும், சிறியா நங்கை, பெரியா நங்கை செடிகளும், ஊதுபாலை, நத்தைச் சூரி, முப்பிரண்டை, கல் தாமரை போன்ற அற்புத மூலிகைகளை இன்றும் காணலாம்.

    18. மருதமலை மீது வீற்றிருக்கும் முருகக் கடவுளை தரிசிக்க எண்ணூற்று முப்பத்தேழு படிகளை நாம் கடந்து செல்ல வேண்டும்.

    19. முருக தரிசனத்திற்காக நாம் பஸ்சை விட்டு இறங்கியதும் நேரே முருகனின் சந்நிதிக்குச் செல்லும் முன் வள்ளியம்மன் திண்டு என்கிற வள்ளியம்மன் ஆலயத்திற்குச் சென்று முருகனுடைய நாயகியான வள்ளியம்மனை வழிபட்டு செல்ல வேண்டியது அவசியம்.

    20. பாம்பட்டிச் சித்தர் என்பவர் சித்தர்களில் முக்கியமானவர்.

    மருதமலை வளமும் பெயரும் நிலைக்க இவர் சமாதி கொண்டது ஒரு காரணமாகும்.

    இவர் சன்னதிக்கு இன்றும் நாள்தோறும் ஒரு பெரும் வயது முதிர்ந்த பாம்பு வந்து பாலும் பழமும் சாப்பிட்டு செல்கிறது.

    இக்கோவிலை வழிபடுபவர்கள் சித்தசுத்தி மன அமைதி எதிலும் பூரணத்துவம் பெறுகின்றனர்.

    பில்லி சூனியம், ஏவல் இவைகளால் கவலைப் படுவோர் இவரிடம் முறையிட்டுக் கொண்டால் இவைகளில் இருந்து நிரந்தர விடை காண முடியும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print