search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர் விபத்து"

    • மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு அருகில் உஸ்கூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு, பிரசித்தி பெற்ற மத்தூரம்மா என்ற கிராம தேவதை கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    திருவிழாவில் அதிக உயரத்தில் மிக பிரம்மாண்டமான தேர் அமைக்கப்பட்டு அதில் அம்மனை வைத்து ஊர்வலமாக இழுத்துச் செல்வது வழக்கம். மேலும் டிராக்டர் மற்றும் எருதுகளை கட்டி தேரை இழுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழாவில் 25-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டும், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றும் மத்துரம்மாவை வழிபட்டு செல்வார்கள்.

    அந்த வகையில், மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான 127 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து இழுத்துச் சென்ற போது, ஹிலல்லிகே என்ற கிராமத்தில், எதிர்பாராதவிதமாக தேர் சரிந்து கீழே விழுந்தது. அப்போது அந்த பகுதியில் பக்தர்கள், பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
    • தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    கொண்டையம்பாளையம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வீதியில் உலா வந்த தேர் வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    தேர் கவிழ்வதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி பக்தர்கள் உயிர் தப்பினர். இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து நேற்று முன்தினம் அப்பணியில் இருந்து மாற்றப்பட்டார்.
    • பிரகதாம்பாள் கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேரோட்டம் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. தேர் புறப்பட தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பக்கமாக கவிழ்ந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்களில் அரிமளத்தை சேர்ந்த ராஜகுமாரி (வயது 64) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தேர் விபத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் காரணம் என பக்தர்கள் தரப்பிலும், பா.ஜ.க.வினரும் கூறி வந்தனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் எதிரொலியாக கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து நேற்று முன்தினம் அப்பணியில் இருந்து மாற்றப்பட்டார்.

    இந்தநிலையில் பிரகதாம்பாள் கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

    • கோவில் பணியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
    • தேர் விபத்து நடந்த கோவிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதியான திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள திருக்கோகர்ணேஸ்வரர் உடனுறை பிரகதாம்பாள் கோவிலில் கடந்த 31-ந்தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடிக்க இழுத்தனர். நிலையத்தில் இருந்து நகர்ந்த ஒரு சில விநாடிகளில் தேர் சரிந்தது. இந்த விபத்தில் அரிமளத்தை சேர்ந்த ராஜகுமாரி (வயது 64) மற்றும் 2 பெண்கள் உள்பட 8 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    மேலும் தேர் விபத்து நடந்த கோவிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார்.

    அத்துடன் தேர் விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தும் பொருட்டு ஒரு குழுவையும் அமைத்து ஆணை பிறப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் பணியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. விசாரணை முடிவில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுமாரி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தேர் விபத்தில் சிக்கிய அவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் உயிரிழந்தது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×