search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்சரிவு"

    • இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    ஊட்டி:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ. இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் அடுத்த காந்தி நகரில் கடந்த 6 மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    தற்போது அங்கு தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக அருகே உள்ள நகராட்சி கழிப்பறையையொட்டி 30 அடிக்கு மண்ணை வெட்டி எடுத்தனர். இதனால் கழிப்பறை அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இதனை யாரும் பொருட்படுத்தவிலை.

    நேற்று இங்கு பெண்கள் உள்பட 17 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். காலையில் பணியாளர்கள் அனைவரும் பணி நடந்த இடத்தின் அருகிலேயே அமர்ந்து டீ குடித்தனர்.

    அப்போது அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த கழிப்பறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அத்துடன் மண்சரிவும் ஏற்பட்டது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர்.

    இருந்த போதிலும் 12 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் மேல்காந்தி நகரை சேர்ந்த சகீலா (வயது30), பாக்கியலட்சுமி(42), சங்கீதா(35), ராதா(38), மேல் தலையாட்டு மந்துவை சேர்ந்த உமா(35), முத்து லட்சுமி ஆகிய 6 பேர் பிணமாகவே மீட்கப்பட்டனர்.வண்ணாரப்பேட் டையை சேர்ந்த நந்தகுமார்(25), கவுதம்(24), மகேஷ்(23), தாமஸ் (25), ஜெயந்தி (55), சாந்தி (45) ஆகிய 6 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் திரண்டனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பவ இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஊட்டி லவ்டேல் போலீசார் கட்டி உரிமையாளர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேற்பார்வையாளர்கள் ஜாகீர் அகமது, ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது அவர்கள் 4 பேரையும் வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவி னர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டது.

    ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது.

    இதையடுத்து நள்ளிரவில் ஊட்டி தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. மகராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், தாசில்தார் சரவணன் ஆகியோர் இறந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையின் முடிவில் உறவினர்கள், இறந்த 6 பேரின் உடலை வாங்கி கொள்வதாக தெரிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று காலை இறந்த 6 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே இங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த அளவை மீறி கட்டப்பட்டுள்ளதும், அதிக சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    • திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் வெள்ளம்.
    • தடுப்புச் சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக படி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல மலைப்பாதையும் கோவில் நிர்வாக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த 4-ந்தேதி இரவு திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையின் ஒரு பகுதியில் திடீரென்று மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் 12 மீட்டர் நீளம், 8 மீட்டர் உயரத்துக்கு தடுப்பு சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீரமைப்பு பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை யொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு மலை ப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் இன்னும் ஒரு வாரம் அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
    • ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி தொடக்கம் வரை வெளுத்து வாங்குவது வழக்கம். அதன்படி அங்கு தற்போது கனமழை பெய்து வருகிறது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.

    இதுதவிர மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மேக கூட்டங்கள் தரைக்கு மிகவும் அருகே தவழ்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் பகல் நேரங்களில் கூட மேகமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். இதனால் குன்னூர் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    குன்னூர் பகுதியில் நேற்று முதல் மழைச்சாரலுடன் மேகமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.

    இதுதொடர்பாக குன்னூர் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    குன்னூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அடர்பனிமூட்டம் ஏற்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் வரலாறு காணாத அளவில் அதிகப்படியாக பனிமூட்டத்தை பார்க்க முடிகிறது. மேலும் அங்கு காலநிலை மாற்றமும் ஏற்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அங்கு ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. எனவே நாங்கள் அச்சத்துடன் வாகனங்களில் பயணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குன்னூரில் இன்று காலை 10 மணியை கடந்த பின்னரும் அடர் பனி மூட்டம் காணப்பட்து. இதனால் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்கள் குளிரை தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். குன்னூருக்கு வந்த சுற்றுலாபயணிகள் வெளியே செல்ல முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.

    • விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.
    • பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கே.என்.ஆர் பகுதியில் மரம் சரிந்து சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலைமையிலான குழு அந்த பகுதிக்கு சென்று சென்று சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பர்லியார் பகுதியில் விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.

    இது மட்டுமல்லாமல் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண் சரிவு ஏற்படுவதுடன் மரங்களும் முறிந்து விழுகிறது.

    மேலும் அவ்வப்போது பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென மலைச்சரிவிலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து சாலையில் விழுந்தது.

    அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கார் வேகமாக சென்று விட்டதால், காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குன்னூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கடப்பாரையைக் கொண்டு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பாறையை நடுரோட்டில் இருந்து அகற்றினர்.

    இதனிடையே குன்னூர்-கோத்தகிரி சாலையில் எடப்பள்ளி அருகே ராட்சத சாம்பிராணி மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மரத்தை வெட்டி அகற்றினர்.

    • அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
    • மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது.

    இதில் கடந்த 2 நாட்களில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்பி சாலைகளை மழை நீர் மூழ்கடித்து செல்கின்றன.

    குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டமும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

    நேற்றிரவு இரவு முதல் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 30க்கும் அதிகமான கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் பெய்த தொடர் மழையின் காரணமாக பர்லியாறு போலீஸ் சோதனை சாவடி அருகே மண்சரிவு ஏற்பட்டது.

    ஆங்காங்கே சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலை காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகள் மற்றும் அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    இதனால் இப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார். பர்லியார் அருகே மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதில் மத்திய மந்திரி எல்.முருகனின் காரும் மாட்டி கொண்டது. 1½ மணி நேரத்துக்கும் மேலாக அவரது காரும் சாலையிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, மண்சரிவினை ஒருபுறமாக அகற்றி, மத்திய மந்திரியின் கார் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

    அதன்பின்னர் அவரது கார் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு சென்றது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குன்னூர் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் கோத்தகிரி சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

    • போக்குவரத்து பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அருவங்காடு,

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழையும், பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அவ்வப்போது கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், பர்லியாறு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது குன்னூரில் இருந்து கோவைக்கு ஒரு சுற்றுலா காரில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் உதவியுடன் சாலையில் கிடந்த மண் குவியல், கற்களை அகற்றி சீர்படுத்தினர். இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    • தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கால நிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரங்களாக மழை பெய்து வருகிறது.

    இந்த மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    நேற்றிரவும் கோத்தகிரி, குன்னூர், அருவங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை, விடிய, விடிய பெய்தது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், கோத்தகிரி-மேட்டுப்பாளையம், சாலை, குன்னூர் சாலை, ஊட்டி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இந்த மழைக்கு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை என்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

    மண் திட்டுகள், பாறைகள் உருண்டு நடுரோட்டில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்திட்டுக்கள், பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜே.சி.பி.எந்திரம் கொண்டு ராட்சதபாறைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் மண்திட்டுகளை ஒழுங்குபடுத்தி சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட 4 தாலூக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

    • குன்னூர் பகுதியில் பல இடங்களிலும் மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
    • வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கிறார்கள்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே பரவலாக மழை பெய்து வருகிறது.

    அவ்வப்போது மிதமானது முதல், கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, மண்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. சாலையில் விழும் மரங்களால் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

    குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள் பகுதிகளில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.

    மழையால் குன்னூர் வண்ணாரப்பேட்ைட, கோத்தகிரி சாலை, ஊட்டி சாலை, பஸ் நிலைய பகுதி, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீரும் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் அவதியடைந்தனர்.

    குன்னூர் சந்திரா காலனியில் நடைபாதையை ஒட்டி தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் அதிகமானோர் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மழை பெய்தததால் தொழிலாளர்கள் பணியை நிறுத்தி விட்டு, அருகே உள்ள கட்டிடத்தில் சென்று ஒதுங்கி நின்றனர்.

    அந்த சமயம் பெய்த மழைக்கு, பணி நடைபெற்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    மண்சரிவு ஏற்பட்டு அருகே உள்ள வீடுகள் மீது விழுந்ததில், வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் வீட்டில் ஆட்கள் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    குன்னூர் பகுதியில் பல இடங்களிலும் மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அவை எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை காணப்படுகிறது.

    எனவே அந்த மின்கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, தற்போது மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர் மழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் மலை சரிவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. காலையில் தொடங்கி இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது.

    அவ்வப்போது பெரிய மழையாகவும், பெரும்பாலான நேரங்களில் தூறி கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையுடன் குளிரும் வாட்டி வதைப்பதால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    குளிரில் இருந்து தப்பிக்க வீடுகளில் தீமூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள்.

    இதுதவிர பகல் நேரங்களில் கடும் மேகமூட்டமும் நிலவுகிறது. இதனால் சாலைகள் எதுவும் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன.
    • ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது.

    விடிய, விடிய பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் தண்டவாளம் முழுவதும் மூடியபடி கிடந்தது.

    கல்லாறு-அடர்லி பாதையிலும் மண்சரிவும், மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன. இந்நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட தயாராக இருந்தது.

    தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்ட தகவல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று மலைரெயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் மலைரெயிலில் பயணிக்கலாம் என ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் போக்குவரத்து இன்றும், நாளையும் என 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ரெயில் பாதை சீரமைக்கும் பணி முழுவதும் முடிந்த பின்னர் மலைரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • கரோலினா பகுதியில் 150 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
    • அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள ஒரு சில இடங்களில் லேசான மண்சரிவு, மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் குன்னூர் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட கரோலினா பகுதியில் 150 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது.இதனால் அந்த வழியாக செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. அங்கு கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இன்று காலை முதல் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி நடந்து வருகிறது.
    • பந்தலூர் அடுத்த சேரம்பாடி காபிகாடு பகுதியில் பலத்த மழை பெய்தது.

    அரவேணு:

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும் சாலைகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் தொடர்ச்சியாக 3 இடங்களில் ராட்சத மரங்கள் முறிந்து சாலையின் நடுரோட்டில் விழுந்தது.

    இதேபோல் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலை த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை முதல் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    மரங்கள் முறிவு, மண்சரிவு காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பந்தலூர் அடுத்த சேரம்பாடி காபிகாடு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. மழைக்கு சாலையோரம் நின்ற ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நீலகிரியில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து நீலகிரிக்கும் வாகன போக்குவரத்து முடங்கியது.

    இதையடுத்து தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர். 

    • சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை
    • மழுக்குப்பாறை சோதனை சாவடியின் இருபுறமும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல கேரள மாநிலம் சாலக்குடி பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் வால்பாறை நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாகனத்தை இயக்கி சென்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    இந்த நிலையில் மழுக்குப்பாறை எஸ்டேட்டில் இருந்து அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள அம்பலப்பாறை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியிலான போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து சாலக்குடியில் இருந்து வரும் வழியில் உள்ள வாளச்சால் என்ற பகுதியிலும், வால்பாறையில் இருந்து செல்லும் வழியில் மழுக்குப்பாறை என்ற இடத்திலும் சோதனை சாவடிகளில் இருபுறங்களிலும் இருந்து வரும் வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன.

    மறு அறிவிப்பு வரும் வரை இந்த வழியில் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிப்பதாக திருச்சூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×