என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டி-கூடலூர் சாலையில் மண்சரிவு
மரங்கள், பாறை உள்ளிட்ட இடிபாடுகளை அகற்றினா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம், டி.ஆா்.பஜாருக்கு இடையே உள்ள சாலையில் செவ்வாய்க்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.
இதனால், அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டு கொட்டும் மழை மற்றும் கடும் குளிரில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் காத்து நின்றன. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்கள், பாறை உள்ளிட்ட இடிபாடுகளை அகற்றினா். பின்னா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
Next Story






