என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பலத்த மழை: தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது மண்சரிவு- தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- குன்னூர் பகுதியில் பல இடங்களிலும் மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
- வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கிறார்கள்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே பரவலாக மழை பெய்து வருகிறது.
அவ்வப்போது மிதமானது முதல், கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, மண்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. சாலையில் விழும் மரங்களால் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள் பகுதிகளில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.
மழையால் குன்னூர் வண்ணாரப்பேட்ைட, கோத்தகிரி சாலை, ஊட்டி சாலை, பஸ் நிலைய பகுதி, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்களில் தண்ணீரும் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் அவதியடைந்தனர்.
குன்னூர் சந்திரா காலனியில் நடைபாதையை ஒட்டி தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் அதிகமானோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மழை பெய்தததால் தொழிலாளர்கள் பணியை நிறுத்தி விட்டு, அருகே உள்ள கட்டிடத்தில் சென்று ஒதுங்கி நின்றனர்.
அந்த சமயம் பெய்த மழைக்கு, பணி நடைபெற்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மண்சரிவு ஏற்பட்டு அருகே உள்ள வீடுகள் மீது விழுந்ததில், வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் வீட்டில் ஆட்கள் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
குன்னூர் பகுதியில் பல இடங்களிலும் மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அவை எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை காணப்படுகிறது.
எனவே அந்த மின்கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, தற்போது மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் மலை சரிவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. காலையில் தொடங்கி இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது.
அவ்வப்போது பெரிய மழையாகவும், பெரும்பாலான நேரங்களில் தூறி கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையுடன் குளிரும் வாட்டி வதைப்பதால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
குளிரில் இருந்து தப்பிக்க வீடுகளில் தீமூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள்.
இதுதவிர பகல் நேரங்களில் கடும் மேகமூட்டமும் நிலவுகிறது. இதனால் சாலைகள் எதுவும் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்