search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "incentives"

    • தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை லட்சக்கணக்கான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
    • அரசு சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் உள்ளன. இங்கு தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை லட்சக்கணக்கான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க, அரசு சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 10, பிளஸ்-1 வகுப்புகளுக்கு தலா ரூ.1500, பிளஸ்-2 வகுப்புக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    அதனால் கடந்த கல்வி ஆண்டில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மாணவ- மாணவிகளின் வங்கி கணக்கு விபரங்களை, எமிஸ் தளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. கடந்த மாதத்துடன் அதற்கான கெடு முடிந்த பின்பும் பல மாவட்டங்களில் இந்த விபரங்கள் முழுமையாக பதிவு செய்யப்படாமல் உள்ளன. இதனால் அந்த விபரங்களை உடனே பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்- பழங்குடி மாணவர்களுக்கு ரூ. 2 கோடி ஊக்கத்தொகை என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சேர்ந்த 12,420 மாணவியர்களுக்கு தலா ரூ.500வீதம் 2.07 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 43.64 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், மாணவியர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.43.64 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், 7 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 7333 மாணவியர்களுக்கு தலா ரூ.1,500 வீதம் ரூ.1,09,99,500/- மதிப்பீட்டில் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார குறைவான பணிசெய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தூய்மைப்பணியாளர்களாக பணிபுரிவோரின் குழந்தைகள் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பல்வேறு வகையான பள்ளிகளில் சேர்ந்து விடுதியில் தங்கி மற்றும் விடுதியில் தங்காது கல்வி பயிலும் 454 மாணாக்கர்களுக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டில் ரூ.13.67 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி ஊக்கத்தொகையாக பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பயிலும் 995 மாணாக்கர்களுக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டில் ரூ.78.40 லட்சம் உதவித்தொகையாவும் வழங்கப்பட்டுள்ளது.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 60 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,20,000 மதிப்பீட்டிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 125 ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 60 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டிலான முதலுதவிப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்கள் 10 பேருக்கு ரூ.3,50,000 மதிப்பீட்டில் இலவச கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களில் 4 பேருக்கு ரூ.68,000/-மதிப்பீட்டில் ஈமச்சடங்கு/இயற்கை மரண உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளது. பழங்குடியின இளைஞர்கள் 25 பேருக்கு ரூ.1.50 லட்சம் செலவில் இலவச ஓட்டுநர் பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின விவசாயிகள் 5 நபர்களுக்கு ரூ. 9,00,000/-மதிப்பீட்டிலான இலவச பவர் டிரில்லர் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 17 நபர்களுக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் ரூ.51,00,000/-மதிப்பீட்டிலான கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    • திருப்பூர் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு ) சின்னசாமி கூறியதாவது:- பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் விதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வேளாண்மை இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இதுவரை பதிவு செய்த தேதியின் அடிப்படையில், 11 தவணை வரை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது 12வது தவணை தொகை பெறுவதற்கு ஆதார் ஆவணங்களை பதிவேற்றம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 524 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 55 ஆயிரத்து 251 விவசாயிகள் ஜூலை 31 ந் தேதிக்குள் 'இ-கே.ஒய்.சி.,' முறையில் ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.பெரும்பாலான விவசாயிகள் புதுப்பிக்காத காரணத்தால், மத்திய அரசு, ஆகஸ்டு 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது.ஆதார் விவரங்களை இ-சேவை மையத்தில், கிராம தபால் நிலையத்தில் அல்லது ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.எனவே தவறாமல் 31ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து, புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும். இதுகுறித்து, கூடுதல் தகவல் பெற அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
    • நில விபரம் 'அப்டேட்' செய்யப்படுகிறது.

    அவினாசி

    பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் வழங்கி பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் அவர்களின் நில விபரம் 'அப்டேட்' செய்யப்படுகிறது. தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே வரும் நாட்களில் கவுரவ ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற நிலையில் அவிநாசி வட்டாரத்தில் 67 சதவீத விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை அப்டேட் செய்துள்ளனர்.அடுத்த ஊக்கத்தொகை பெற விரைவில் தங்கள் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்க தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
    • பி.எம். கிசான் இணையத்தில் இ.கே.ஒய்.சி. மூலம் தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும்.

    தென்திருப்பேரை:

    பி. எம். கிசான் திட்டத்தில் ஊக்கத் தொகையாக ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் விபரங்களை இணையத்தில் சரி பார்த்திட ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி கேட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்க தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பி.எம். கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து 11 தவணை வரை தொகைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தொடர்ந்து தவணைத் தொகை பெறுவதற்கு தங்கள் ஆதார் விபரங்களை பி.எம். கிசான் இணையத்தில் இ.கே.ஒய்.சி. மூலம் தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். தாங்கள் அருகாமையில் உள்ள பொது இ- சேவை மையங்களில் அல்லது அஞ்சல் அலுவலகத்தை அணுகி சரி பார்த்துக் கொள்ளலாம்.

    மேலும் தங்களது ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி. எம். கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி. எண் மூலம் சரிபார்ப்பு செய்து கொண்டு விவசாயிகள் உடனடியாக தவணைகள் பெறுவதை உறுதி செய்யவும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.எம்.,கிசான் ஐ.டி.,யில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
    • வங்கிக்கணக்கு புத்தக முன்பக்க நகல் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.விவசாயிகள் விண்ணப்பம் அளித்ததன் அடிப்படையில் சில ஆண்டுகளாக கவுரவ ஊக்கத்தொகை, 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.அவசரகதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதால், விவசாய நிலம் இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்களும் இத்திட்டத்தில் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் பயனாளிகள் பட்டியல், மீண்டும் சரிபார்த்து, ஊக்கத்தொகை விடுவிக்கப்படுகிறது.

    இந்தாண்டும் விவசாயிகள் விபரம் சரிபார்க்கப்படுவதால் விவசாயிகள் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டுமென, வேளாண்துறை அறிவித்துள்ளது.

    சிட்டா, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோ போன்ற ஆவணங்களை வேளாண்துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிப்பு செய்யப் பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களைச்சேர்ந்த விவசாயிகளும், தங்கள் நில ஆவணம் தொடர்பான சான்றிதழ்களை, வேளாண் அலுவலர்களிடம் வழங்கி அடுத்த தவணை ஊக்கத்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அவிநாசி வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அவிநாசி வட்டாரத்தில், பிரதமரின் கவுரவ ஊக்கத் தொகையாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் பெறும் விவசாயிகள், தங்களது நில உரிமைச் சான்றிதழ்களை, அவிநாசி வேளாண்மை துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து தங்களை, பி.எம்.,கிசான் ஐ.டி.,யில் இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இணைத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே, கவுரவ ஊக்கத்தொகை வழங்கப்படும்.போலி பயனாளிகள், விவசாய நிலம் இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் என திட்டத்தில் இணைந்துள்ள தகுதியற்றவர்களை நீக்க இப்பணி நடக்கிறது. விவசாயிகள், நிலத்தின் சிட்டா, ஆதார் அட்டை நகல், போட்டோ, வங்கிக்கணக்கு புத்தக முன்பக்க நகல் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காமராஜர் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • விழாவையொட்டி ரெட்டியார்பட்டி கு.ரா. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நாற்காலிகள் மற்றும் மேஜை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனையொட்டி ரெட்டியார்பட்டி கு.ரா. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நாற்காலிகள் மற்றும் மேஜை வழங்கப்பட்டது. மேலும் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சரவணவேல், செல்வக்குமார் சார்பில் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, ரெட்டியார்பட்டி முன்னாள் ஊராட்சி செயலாளர் மணி பிள்ளை, பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிராம், மளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் பிரபாகர், முன்னாள் ஆசிரியர் ஆவரைகுளம் செல்வராஜ், மூலக்கரைப்பட்டி நகர துணை செயலாளர் எடுப்பல் காளிமுத்து, பாளையங்கோட்டை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மாயா ரகுராம், முத்தூர் முன்னாள் ஊராட்சி செயலாளர் நயினார், தருவை எம்.ஜி.ஆர். நகர் முன்னாள் கிளை செயலாளர் தருவை செல்லத்துரை, ரமேஷ், செல்வகுமார், முத்தூர் ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கொடிக்குளம் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உதவித்தொகை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.
    • தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் இந்த படிவத்தை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்கள் இந்த ஆண்டுக்கான சுய உறுதிமொழி ஆவணத்தை செப்டம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ.2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டு மே மாதம் வரை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் : 

    விவசாயிகள் ஊக்கத்தொகை பெற நில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து வெள்ளகோவில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி கூறியிருப்பதாவது:-

    பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ.2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் வட்டாரத்தில் இத்திட்டத்தில் 3,920 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு மே மாதம் வரை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது.இனி வரும் காலங்களில் அடுத்த தவணை வழங்க பயனாளிகளின் நில உடைமைகளை சரிபார்க்க அரசு அறிவிக்கப்பட்டு அதற்குண்டான விவசாயிகளின் பட்டியலை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு பணிகள் முடிந்த பின்னரே அடுத்த தவணை வழங்கப்பட உள்ளது.

    ஆகவே விவசாயிகள் தங்களின் நில உடமைக்கான பட்டா, சிட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களை தங்களின் கிராமத்திற்கு சரிபார்ப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களை ஆவணங்களுடன் சந்தித்து சரிபார்ப்பு பணியினை பதிவேற்றம் செய்த வேண்டும்.

    வெள்ளகோவில் வருவாய் கிராமத்திற்கு கார்த்தி, முத்தூர் மற்றும் வள்ளியரச்சல் வருவாய் கிராமங்களுக்கு சத்திய நாராயணன், சேனாபதிபாளையம் மற்றும் உத்தமபாளையம் கிராமங்களுக்கு லோகநாதன், புதுப்பை மற்றும் கம்பளியம்பட்டி கிராமங்களுக்கு சுரேஷ்பாபு, இலக்கமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு கிருபானந்தன், சின்னமுத்தூர் மற்றும் ஊடையும் கிராமங்களுக்கு தீனா, வீரசோழபுரம் மற்றும் பச்சாபாளையம் கிராமங்களுக்கு ஹரிதாஸ், மங்களப்பட்டி, மேட்டுப்பாளையம், பூமாண்டன்வலசு கிராமங்களுக்கு அனுசபர்மதி, ராசாத்தா வலசு, வேலம்பாளையம் கிராமங்களுக்கு கார்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆகவே அந்தந்த கிராம விவசாயிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களை சந்தித்து ஆவணங்கள் சரிபார்ப்பு பணியை 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. அதனை ஒட்டிய, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நிமிட்டிபாளையம், சின்னமல்லான்பாளையம் போன்ற வருவாய் கிராமங்களில் தக்காளி, கத்தரி, அவரை, வெண்டை, கீரை, பீர்க்கன், புடலை, பாகல் போன்ற காய்கறி பயிர்களும், மா, வாழை, கொய்யா, நெல்லி போன்ற பழ வகைகளும், 1,200 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர்.

    பெருந்துறை உழவர் சந்தையிலும், அதனை ஒட்டிய வருவாய் கிராமங்களிலும் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து, 'இப்பகுதி விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை, உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.

    பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தவும், காய்கறி வரத்தை அதிகரிக்க மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் செயல்படுகிறது என அமைச்சர் மூர்த்தி ெபருமிதம் கொண்டார்.
    • அரசு பள்ளிகளில் 12-ம் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேலூர்

    மேலூர் டைமண்ட் ஜூபிலி கிளப் சார்பில் மேலூர் தாலுகா அளவில் அரசு பள்ளிகளில் 12-ம் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், தனியார் பள்ளிக்கு இணையாக தமிழக அரசு பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன.

    50 சதவீதத்திற்கு மேல் அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவல கங்களிலும் பெண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் 60 சதவீதத்திற்கும் மேல் படித்துவிட்டு தங்களது குடும்பத்தை பாதுகாத்து வருகின்றனர்.கிராமப்புற மாணவ-மாணவிகள் 12 -ம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்வி பயில முடியாமல் இருந்து வந்தனர். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மேல் படிப்பு படிப்பதற்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றார்.

    அதனைத் தொடர்ந்து மேலூர் டைமண்ட் ஜுபிலி கிளப் சார்பில் மேலூர் அரசு கலைக் கல்லூரி சாலை சந்திப்பில், சிவகங்கை சாலை உள்ள 4 வழிச்சாலை பாலம் அருகில், மேலூர் - மதுரை 4 வழிச்சாலை ஆகிய இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை அமைச்சர் மூர்த்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் மணிவாசகம் தலைமை தாங்கினார்.

    டைமண்ட் ஜுபிலி கிளப் செயலாளரும், மேலூர் முன்னாள் யூனியன் சேர்மனுமான செல்வராஜ் வரவேற்றார். நகராட்சி தலைவர் முகமது யாசின், நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டு ராஜன், தலைமை ஆசிரியர்கள் கொட்டாம்பட்டி சித்ரா ஹெலன், மேலூர் செந்தில் நாயகி, செம்மிணிபட்டி சுகுணா கலாமதி, திருவாதவூர் சிவக்குமார், கருங்காலக்குடி கண்மணி மாதா, தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் துரை மகேந்திரன், பொருளாளர் ரவி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வேலாயுதம், முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், மலம்பட்டி முருகன், மார்க்கெட் ராஜேந்திரன், விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளப் பொருளாளர் வெங்கடேச பெருமாள் நன்றி கூறினார்.

    ஆசிய விளையாட்டில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளருக்கு ரூ.1¼ கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGame #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2-வது கட்டமாக மேலும் சில வீரர்களுக்கும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆசிய விளையாட்டில் கலப்பு தொடர் ஓட்டம் மற்றும் ஆண்கள் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கங்கள் கைப்பற்றிய ஆரோக்ய ராஜீவுக்கு ரூ.60 லட்சம், பெண்களுக்கான ஸ்குவாஷ் அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுனைனா குருவில்லாவுக்கு ரூ.30 லட்சம், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம், மேலும் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்களான அஞ்சன் சின்னப்பா, டிம்பிள் மதிவாணன் மற்றும் அமிஷ்வேத் ஆகியோருக்கு ரூ.18 லட்சம் என்று மொத்தம் ரூ.1 கோடியே 28 லட்சத்திற்கான காசோலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×