search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெட்டியார்பட்டியில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
    X

    பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவனுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.

    ரெட்டியார்பட்டியில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

    • காமராஜர் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • விழாவையொட்டி ரெட்டியார்பட்டி கு.ரா. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நாற்காலிகள் மற்றும் மேஜை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனையொட்டி ரெட்டியார்பட்டி கு.ரா. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நாற்காலிகள் மற்றும் மேஜை வழங்கப்பட்டது. மேலும் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சரவணவேல், செல்வக்குமார் சார்பில் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, ரெட்டியார்பட்டி முன்னாள் ஊராட்சி செயலாளர் மணி பிள்ளை, பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிராம், மளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் பிரபாகர், முன்னாள் ஆசிரியர் ஆவரைகுளம் செல்வராஜ், மூலக்கரைப்பட்டி நகர துணை செயலாளர் எடுப்பல் காளிமுத்து, பாளையங்கோட்டை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மாயா ரகுராம், முத்தூர் முன்னாள் ஊராட்சி செயலாளர் நயினார், தருவை எம்.ஜி.ஆர். நகர் முன்னாள் கிளை செயலாளர் தருவை செல்லத்துரை, ரமேஷ், செல்வகுமார், முத்தூர் ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கொடிக்குளம் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×