search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊக்கத்தொகை"

    • 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவு.
    • போக்குவரத்து கழகத்தில் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும்.

    அரசு போக்குவரத்து கழகங்களின் ஊழியர்களுக்கு 2023ம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதில், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, 151 நாள் முதல் 199 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.195 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளவர்கள், சாதனை ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

    மேலும், போக்குவரத்து கழகத்தில் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.8 கோடிக்கான காசோலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.
    • முழுநேர பயிற்சி பெறும் 212 மாண வர்களும், பகுதிநேர பயிற்சி பெறும் 80 மாணவர்களும், என மொத்தம் 292 மாணவர்கள் பயன்பெறுவர்.

    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக ரூ.8 கோடிக்கான காசோலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுசீந்திரம் கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.

    இதே போல் ஒருகால பூஜைத் திட்ட கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன், மகள்களின் மேற்படிப்பிற்கான உயர் கல்வித் தொகையினை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை முறையே ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி 292 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இதன்மூலம் முழுநேர பயிற்சி பெறும் 212 மாண வர்களும், பகுதிநேர பயிற்சி பெறும் 80 மாணவர்களும், என மொத்தம் 292 மாணவர்கள் பயன்பெறுவர்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் திருமகள், ஹரிப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த மாதம் மைசூருவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்.
    • காங்கிரஸ் ஆட்சி அமைய அருள்பாலித்ததுடன், உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தவும் சாமுண்டீஸ்வரி அம்மன் உறுதுணையாக இருந்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசு பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டம், 200 யூனிட் இலவச மின்சார திட்டம், 10 கிலோ ரேஷன் அரிசி வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் என 5 திட்டங்களை அமல்படுத்துவதாக அறிவித்து, அமல்படுத்தியுள்ளது.

    இதில் கடந்த மாதம் மைசூருவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி மாநிலம் முழுவதும் 1 கோடியே 20 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்ட தொடக்க விழாவையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் சாமுண்டிமலைக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தலா ரூ.2 ஆயிரம் காணிக்கையாக வழங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் மைசூருவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.சி. தினேஷ் கூலிகவுடா சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி அமையவும், 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தவும் வேண்டி நீங்கள் இருவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். அதன்படி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அருள்பாலித்ததுடன், உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தவும் சாமுண்டீஸ்வரி அம்மன் உறுதுணையாக இருந்துள்ளார்.

    அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்ட தொடக்க விழாவின் போதும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நீங்கள் ரூ.2 ஆயிரம் வழங்கினீர்கள். எனவே கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அரசு சார்பில் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த கோரிக்கை கடிதத்தை படித்து பார்த்தவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், உடனே இந்த கோரிக்கையை நிறைவேற்றும்படி கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கருக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் 2023-24-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
    • இத்திட்டத்தின் பயனை ஒருமுறை மட்டுமே பயனாளி பெற முடியும்.

    ராமநாதபுரம்

    தமிழக அரசு 'வேளாண்மை துறையின் மூலம் பாரம்பரிய நெல் விதை வங்கி" பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் 2023-24-ம் ஆண்டில் செயல்ப டுத்தப்பட உள்ளது.

    மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

    ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபு சார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத்திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வயல்களில் உரிய அளவில் பாரம்பரிய முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வுக் குழு மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாநில தேர்வுக் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். இத்திட்டத்தின் பயனை ஒருமுறை மட்டுமே பயனாளி பெற முடியும்.

    கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும். பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகள், ஊக்கத்தொகை பெறு வதற்காக அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டாரத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், இதர வரியினங்களையும் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
    • 2023- 24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் 2023-24 ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கு.கனிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- காங்கயம் நகராட்சியில் வசிப்பவா்கள் 2023- 24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் சொத்து வரியை செலுத்திகொள்ளலாம்.

    இதேபோல நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், இதர வரியினங்களையும் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

    • இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
    • சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30-ந் தேதி வரையிலும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.

    இதில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.30-ந் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை அக்.30-ந் தேதிக்குள்ளும் செலுத்துவோருக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு முதல் நிதியாண்டில் ரூ. 769.62 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ரூ.321 கோடியை இணையதளம் மூலம் 4.77 லட்சம் சொத்து உரிமையாளர்கள் செலுத்தி உள்ளனர்.

    சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.

    இதுபோல் www.chennai corporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை கைப்பேசி செயலி, சொத்துவரி ரசீதில் உள்ள கியூ ஆர் குறியீடு மூலம் சொத்து வரியை செலுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      சேலம்:

      தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84-ன் படி 2023-2024-ம் ஆண்டின் 2-ம் அரையாண்டிற்கான சொத்துவரியினை அக்டோபர் 31-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ.5 ஆயிரம் வரை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

      அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வரி வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

      எனவே சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை அக்டோபர் 31-ந் தேதிக்குள் செலுத்தி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ. 5 ஆயிரம் வரை பெற்று பயன்பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

      • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
      • நெல்லுக்கு ஊக்கத்தொகை உள்பட தற்போது ரூ.1,970.50 விவசாயிகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது

      நாகர்கோவில் :

      முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      குமரி மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் குளத்து பாசனம் மற்றும் சானல் பாசனம் மூலம் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ என ஆண்டுக்கு இருமுறை நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.

      நெல் மணிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்வதற்காக பல பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

      அந்த கொள்முதல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல் மணிகளை 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்வோம் என்றும் மற்றும் பல காரணங்களை கூறி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை காத்திருக்க வைக்கின்றனர். இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் அரிசி ஆலைகளில் தங்களுடைய நெல்மணிகளை விற்பனை செய்யப்படுகின்ற அவலநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

      குறிப்பாக அரசு ஒரு கோட்டை நெல்லுக்கு ஊக்கத்தொகை உள்பட தற்போது ரூ.1,970.50 விவசாயிகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் ஒரு கிலோ ரூ.22.65 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் கொள்முதல் செய்கின்ற அதிகாரிகள் மறைமுகமாக விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு கோட்டை நெல்லுக்கு 5 கிலோ சாவி என கழித்து விடுகின்றனர். மேலும் ஒரு சாக்கு மூட்டையில் 40 கிலோ எடைக்கு பதிலாக 41.5 கிலோ எடை எடுத்து கொள்கின்றனர். ஆனால் கணக்கில் வைப்பது 40 கிலோ மட்டுமே ஆகும்.

      மேலும் அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்ற நெல்லுக்கு அதற்கான தொகையினை குறைந்தது 15 முதல் 20 நாட்கள் வரை காலம் தாழ்த்தி கொடுக்கின்றனர். எனவே நெல் கொள்முதல் செய்வதில் உள்ள குளறுப்படிகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு, தனியார் துறையாக அறிவிக்க வேண்டும்.
      • மகளிர் உரிமை திட்டத்து க்காக, களப்பணியில் ஈடுபட்ட ரேஷன் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

      திருப்பூர்:

      திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகிகள் கூட்டம், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார்.

      கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு, தனியார் துறையாக அறிவிக்க வேண்டும். ரேஷன் பணியாளர் அனைவரையும் பி.எப்., திட்டத்தில் சேர்க்க வேண்டும். பல கூட்டுறவு சங்கங்களில் தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்குகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

      மகளிர் உரிமை திட்டத்து க்காக, களப்பணியில் ஈடுபட்ட ரேஷன் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். காலாவதியாகாத தரமான மளிகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

      அனைத்து பொருட்களும் 10-ந்தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

      • தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது.
      • எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      நாமக்கல்:

      நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      2023-–24ம் ஆண்டிற்கு, நெல்லுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,183 எனவும், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ, 2,203 என மத்திய அரசு கொள்முதல் விலை நிர்ணயம் செய்துள்ளது.

      தமிழக அரசு தமிழகத்தில் தற்போது திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு உண்டான ஆதரவு விலையுடன், தமிழக அரசின் ஊக்கத்தொகையாக, சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ. 82 கூடுதலாகவும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 107 கூடுதலாகவும் அறிவித்து விலை நிர்ணயம் செய்துள்ளது.

      தமிழக அரசு அறிவித்த விலைப்படி, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,265, சன்னரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,310 என, செப். 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

      2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் நலன் கருதி, நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

      தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டு நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நெல்லுக்கு உண்டான விலை அறிவிக்காதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

      கடந்த 3 ஆண்டுகளாக நெல் உற்பத்தி செலவை ஒப்பிடும்போது, வேலை ஆட்கள் கூலி மிகவும் அதிகப்படியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு அதிகரித்துள்து. மேலும், உரம், மருந்து அதன் மூலப்பொருட்கள் ஏற்றிவரும் வாகன வாடகையும், பல மடங்கு உயர்ந்துள்ளது.

      தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

      • ஒரு மாத பயிற்சி பெற மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
      • மாணவா்களுக்கு ஒரு மாத காலத்துக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும்.

      தஞ்சாவூர்:

      தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தியாக ராஜன் தெரிவித்துள்ளா.

      இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:-

      தமிழக அரசு நிதியுதவியின் கீழ் நடைபெறும் தமிழ் மண்ணின் பாரம்பரிய கைவினைக் கலைகளை மீட்டெடுத்தல் திட்டத்தில் நெட்டி வேலைப்பாடு மற்றும் தலையாட்டி பொம்மை செய்தல் தொடா்பாக ஒரு மாத காலப் பயிற்சி பெற மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

      இதில், மாணவா்களுக்கு ஒரு மாத காலத்துக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும்.

      மேலும் விவரங்களை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் காணலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • சீராய்வு கூட்டத்தில் தீர்மானம்
      • குமரி மாவட்ட கோவில்களுக்கு சொந்தமானது

      நாகர்கோவில் :

      சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் தலைமை அலுவலகத்தில் திருக்கோவில் அலுவலக கண்காணிப்பாளர்கள், மேலாளர்கள், ஸ்ரீகாரி யங்கள், கோவில் பணியா ளர்களுக்கான சீராய்வு கூட்டம் நேற்று நடந்தது.

      இதற்கு குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      இதில் திருக்கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் திருமண மண்டபங்களை கட்டுதல், வழிபாடு மற்றும் திருமண கட்டணத்தை உயர்த்துவது, புதிய வணிக வளாகம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்து தல், தனி நபரிடம் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை கோவில் பணியாளர்கள் யார் அதிக அளவில் மீட்டு தரு கின்றார்களோ அவர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை பரிசாக தமிழக இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் வழங்கப்படும்.

      ஆக்கிரமிப்பு இடங்களில் வீடு, கடைகள் வைத்திருப்ப வர்களுக்கு உரிய கட்டண முறை வசூல் செய்வது, தொகுப்பூதியத்தில் கூடு தலாக அடிப்படை பணி யாளர்களை நியமனம் செய்வது, சிதல மடைந்த திருக்கோவில்களில் திருப் பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

      கூட்டத்தில் திருக்கோவில் நிர்வாக பொறியாளர்கள் ராஜ்குமார், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

      ×