என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி பால் விநியோக நிறுத்த போராட்டம்
- ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி வருகிற 11-ந்தேதி பால் விநியோக நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.
- மதுரை மாவட்ட உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மதுரை
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் மதுரை மாவட்ட கிளை சார்பில் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் பொது மேலாளர் மற்றும் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கடந்த 20 .10. 2022 அன்று சென்னை கோட்டையில் பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் சங்கப் பிரதிகளை அழைத்து பால் விலை உயர்வு சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தியது .பின்னர் விலை அறிவிக்கும் போது சங்கப்பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் மிகவும் சொற்ப விலையான லிட்டருக்கு ரூ.3 மட்டுமே விலை உயர்வு செய்து அறிவித்தார்கள் .
மேற்கண்ட விலை மூலம் உற்பத்தியாளர்களுக்கு ரூ.31 வரை பால்பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஆனால் தனியார் பால் நிறுவனங்களில் ரூ.38 முதல் 46 வரை கொடுத்து பால் கொள்முதல் செய்கிறார்கள் .தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களை நேரடியாக சந்தித்து பாலை கொள்முதல் செய்கிறார்கள் .தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக விலை கொடுக்க முடியாததால் பிரதம சங்கங்களால் அதிக அளவில் பால் கொள்முதல் செய்து ஒன்றியத்திற்கு அனுப்ப முடியவில்லை .இதனால் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் படிப்படியாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
எனவே மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு லிட்டருக்கு ரூ.7 ஊக்கதொகையாக உடனடியாக வழங்கினால் மட்டுமே பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் . வருகிற 10-ந் தேதிக்குள் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 11-ந் தேதி முதல் மதுரை மாவட்டத்தை தொடர்ந்து ஒன்றியத்துக்கு பால் வழங்குவது நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்பாக தங்கு நிர்வாகிகள் வெண்மணி சந்திரன்,சுப்பிரமணி ஆகியோர் கூறும்போது, மாட்டு தீவனங்களின் விலை அதிகரித்து விட்டது. இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் லிட்டருக்கு ரூ .42 தருவதாக கூறிவிட்டு ரூ. 32 தான் தருகிறது. எனவே ஊக்க தொகையாக லிட்டர் ரூ.7 தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி பால் விநியோக நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்