search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய நெல் ரகம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    பாரம்பரிய நெல் ரகம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பாரம்பரிய நெல் ரகம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

    • பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் அதன் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
    • நெல் பயிரில் மஞ்சள் நோய் மற்றும் அதன் மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படும் அட்மா திட்டத்தில் எழிலூர் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள் பற்றியும், பாரம்பரிய நெல் ரகம் அதன் மதிப்பு கூட்டுதல் பற்றியும், தற்போது நிலவி வரும் காலநிலையில் நெல் பயிரில் ஏற்படக்கூடிய பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் மற்றும் அதன் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் மண்வள மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் இயற்கை பூச்சி விரட்டிகள் பற்றியும் நெல் பயிரில் மஞ்சள் நோய் மற்றும் அதன் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை பெரும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், கைபேசி எண் இ.கே.ஒய்.சி. இணைக்கவும், மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து பேசினார்.

    முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதரன் நன்றி கூறினார். பயிற்சியில் எழிலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் இளமதி சிவகுமார் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் முன்னோடி விவசாயிகள் மணிமொழி, சுபத்ரா என 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×