search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் தகவல்"

    • மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது.
    • முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில், அஞ்சலில் அல்லது மின்னஞ்சலில் 24-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது. 

    கடலூர் மாவட்டத்தி லுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடை பெற உள்ளன. அப்போட்டி களில் கலந்துகொண்டு வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும், பள்ளி மாண வர்களுக்கென நடத்தப் பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் களுள் அரசுப் பள்ளி மாண வர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொரு வருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000 வீதம் வழங்கப்பெறவும் உள்ளன.

    பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்ட அளவி லான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும், கல்லூரிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில், அஞ்சலில் அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் 24-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

    பள்ளி களுக்கான பேச்சுப் போட்டி தலைப்பு கள் கலைத் தாயின் தவப்புதல்வன், முத்தமிழறி ஞர், சங்கத் தமிழ், செம்மொழி, பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகடூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி. கல்லூரி களுக்கான பேச்சு ப்போட்டி தலைப்பு கள் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் சூரியனே, பூம்புகார், நட்பு, குறளோ வியம், கலைஞரின் எழுது கோல், அரசியல் வித் தகர் கலைஞர், சமூக நீதி காவலர் கலைஞர்.பள்ளிப் போட்டி காலை 9.30 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்கும். இப்போ ட்டிகளில் கட லூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவி கள் கலந்து கொண்டு பயன்பெ றலாம். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    • ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 1000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
    • 1 முதல் 2 ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

    விழுப்புரம்:

    தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 12.06.2023 (திங்கள்கிழமை) காலை 9மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மற்றும் ஆவின் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 1000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.

    ஐ.டி.ஐ முடித்தவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். மேலும் ஐ.டி.ஐ சேர்ந்து பயிற்சி பெற முடியாத 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வி தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற் சாலைகளில் பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்ஸாக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், 1 முதல் 2 ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 8500 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    ×