search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனிசாமி"

    • இந்திய தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த முகவரியின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று முகவரியிட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
    • இந்த கடிதத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கோபம் அடைந்துவிட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அனுப்பிய கடிதம் இந்திய தேர்தல் கமிஷன் வழங்கிய முகவரியின் அடிப்படையில் தான் அனுப்பப்பட்டது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

    அ.தி.மு.க. இரு அணியாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வமும் அ.தி.மு.க.வை வழிநடத்துவதாக செயல்பட்டு வருகின்றனர்.

    தற்போதுவரை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் தலைமை கழகத்துக்கு தான் அனுப்பப்படுகிறது.

    அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்திருந்தது.

    இதற்கு ஓ.பன்னீர்செல்வம், தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சட்ட ஆணையத்துக்கு தங்களது ஆட்சேபனையும் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக 'ரிமோட்' வாக்குசாதனம் குறித்து விளக்குவதற்காக தேர்தல் கமிஷன் வரும் 16-ந்தேதி அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி உள்ளது. இதில் பங்கேற்கும் படி 2 பிரதிநிதிகளை அனுப்பும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

    அந்த கடிதம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த கடிதத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கோபம் அடைந்துவிட்டனர்.

    இதுபற்றி தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததும் அந்த கடிதத்தை வாங்க வேண்டாம் என்றும் அதை மீண்டும் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் கூறிவிட்டார். அதன்பேரில் தலைமை கழக நிர்வாகிகள் அந்த கடிதத்தை தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.

    இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கருத்து கேட்டபோது, 'இந்திய தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த முகவரியின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று முகவரியிட்டு கடிதம் அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் அரசியல் பின்னணி காரணமாக யாரையோ திருப்திபடுத்த இப்படி கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் என்றும் இல்லாத பதவியை குறிப்பிட்டு கடிதம் வந்தால் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அதை வாங்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.

    இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையை தமிழக தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து இருப்பது தெளிவாக உறுதியாகி இருக்கிறது.

    இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு தேர்தல் கமிஷன் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறினார்கள்.

    • கட்சியும், தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.
    • திருமங்கலம் தொகுதி கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் உள்ளிட்ட 6 பேர் திருவேடகம் அருகே உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றனர்.

    மதுரை

    திருமங்கலம் தொகுதி கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் வினோத்குமார் மற்றும் அன்பரசன் உள்ளிட்ட 6 பேர் திருவேடகம் அருகே உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றனர். இதில் வினோத்குமார், அன்பரசன் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் அன்பரசன் மட்டும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். காணாமல் போன வினோத்குமாரை தேடும் பணி நடந்து வருகிறது.

    அதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து தீயணைப்பு துறை அதிகாரி யிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அப்போது ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    மழைக் காலங்களில் ஆற்றில் குளிக்க கூடாது. ஆடுமாடுகளை குளிப்பாட்ட கூடாது.துணிமணிகள் துவைக்க கூடாது. இதைத்தான் கடந்த அ.தி.மு.க ஆட்சிக்கு ஏற்பட்ட அனுபவத்தை அரசுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    பொதுவாக தென்மேற்கு பருவமழை என்பது அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு வரும். ஆனால் வடகிழக்கு பருவமழை என்பது முழுக்க முழுக்க தமிழகத்துக்கு மட்டுமே வரும். இதில் பெய்யும் 49 சதவீதம் மழை குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும்.

    பேரிடர் காலங்களை 3 நிலையாக கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடைபிடிக்கப்பட்டது. குறிப்பாக வெள்ளம் வருவதற்கு முன்பாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை எடுக்க தி.மு.க. அரசு தவறியதால் தான் இன்றைக்கு மேட்டூரில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதே போன்ற சூழ்நிலை வைகை அணையில் உள்ளது.

    தி.மு.க. அரசு பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது. மதுரையில் சில நாட்களுக்கு முன்பு கனமழையால் 4 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுவரை அவர்களுக்கு எந்த நிவாரண உதவியும் கொடுக்கவில்லை.இது போன்ற காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் வரை உயிரிழந்த குடும்பங்களுக்கு கொடுத்தார். அதேபோல் மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கொடுத்தார். மேலும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்கள், காப்பீட்டு தொகைகள், இடுபொருள்கள் போன்றவற்றை உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி தற்போது பழனி, காங்கேயம், தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு செல்கிறார். போகும் வழியெல்லாம் மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். ஆனால் சிலர் தென் மாவட்டத்திற்கு வரும் போது அறிவிப்பு தருகின்றனர்.

    ஆனால் எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் அவர்களின் பயணம் தோல்வி அடைந்துள்ளது. ஆகவே இன்றைக்கு கட்சியும், தொண்டர்களும் எடப்பாடியார் பக்கம் தான் உள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. #NoMoreChildSexualAbuse #Cuddalore
    கடலூர்:

    சிதம்பரம் அருகே கடந்தாண்டு 2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனிசாமி என்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த ஓராண்டாக கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், பழனிசாமி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    குற்றத்துக்காக அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். 
    ×