search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்யபிரதா சாகு"

    • வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
    • தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை வெளியிட்டது.

    சென்னை:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    இந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் அன்றைய தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்கு பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 75.67 சதவீதமும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அதற்கு மறுநாள் வாக்கு சதவீதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.94 சதவீதம் பதிவானதாக அறிவித்தது. இது மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது.

    வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை நேற்று வெளியிட்டது.

    அதில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் மாறி மாறி வாக்குப் பதிவு சதவீதத்தை தெரிவித்து வந்ததால் ஏன் இந்த குளறுபடி என்று மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.


    இதுகுறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    செல்போன், செயலி வருவதற்கு முன்பு வாக்குச் சாவடி வாரியாக 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவாகும் வாக்கு விவரம் மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த வாக்குச்சாவடி அலுவலர்களும் மண்டல அளவில் உள்ள அதிகாரிகளும் சரியான புள்ளி விவரங்களை மேலிடத்துக்கு தெரிவிக்காமல் குத்து மதிப்பாக வாக்கு சதவீதத்தை பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    இதனால் தான் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடைசியாக அனுப்பிய செய்தி குறிப்பில், அனைத்து தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவு விவரம் பெற முடியாத நிலையில், மாதிரி விவரம் தோராயமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக கூறி இருந்தார்.


    இதுபற்றி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு சதவீத மாறுபாடு என்பது வழக்கமாக நடக்க கூடியதுதான். 2019-ம் ஆண்டு தேர்தலில் பெரிய அளவில் நாடு முழுவதும் இதே போல் வாக்கு சதவீத வித்தியாசம் ஏற்பட்டது.

    தமிழ்நாட்டில் அதே போல் இப்போதும் குளறு படி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதீத ஆர்வம் தான். ஒவ்வொரு மணிக்கும் எத்தனை ஓட்டு போட்டுள்ளார்கள் என்று கேட்பதால் வரும் பிரச்சனை. ஏனென்றால் ஒவ்வொரு பூத்திலும் உள்ள அலுவலர்கள் அங்கு உள்ள பணியை டென்ஷனுக்கு மத்தியில் பார்க்கும் போது மேலிடத்துக்கு தகவல் சொல்லும்போது பதற்றத்தில் தவறுதலாக புள்ளி விவரங்கள் சொல்வது உண்டு. எனவே இந்த முறையை முதலில் ஒழிக்க வேண்டும்.

    அதற்கு பதிலாக மதியம் 12 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஓட்டுப்பதிவு விவரங்களை சேகரித்தாலே போதுமானது. தேவையில்லாத டென்ஷன் குறையும்.


    வாக்காளர் பட்டியலில் இருந்து நிறைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வரும் குற்றச்சாட்டுகள் கவலை அளிக்கிறது. இதை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும்.

    அதற்கு ஒவ்வொரு வாக்காளரின் ஆதார் கார்டையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஆனால் இதை செய்ய முற்பட்ட போது தேர்தல் ஆணையத்துக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் இதை கட்டாய மாக்காமல் விட்டு விட்டனர். இதனாலேயே பாதி பிரச்சனை நடக்கிறது.

    வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் நீக்கப்பட்டால் அந்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டும்.

    ஒரு தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என்றெல்லாம் செய்தி வருகிறது. அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகிறது என்றால் அது அவர்களின் தவறு என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அதுவும் 6 மாதத்துக்கு முன்பே கொடுக்கிறார்கள்.

    அதை அரசியல் கட்சிகள் சரிபார்க்காமல் இருந்து விட்டு இப்போது குற்றம் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலையான கண்காணிப்புக் குழுக்களை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில் கலைக்க இருக்கிறோம்.
    • வீடியோ குழுக்களின் கண்காணிப்பு, மறு வாக்குப்பதிவு இருந்தால் அதுவரை நீடிக்கும்.

    சென்னை:

    தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் முடிந்துவிட்டதால், தேர்தல் சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில் கலைக்க இருக்கிறோம். இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் நடக்கும்வரை, அந்த மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பாட்டில் இருக்கும்.

    பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் அப்படியே உள்ளன. எனவே கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் என்ற உச்சவரம்பில் மாற்றம் கிடையாது. வீடியோ குழுக்களின் கண்காணிப்பு, மறு வாக்குப்பதிவு இருந்தால் அதுவரை நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களவை தேர்தல் 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
    • தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 69.46 சதவீத வாக்குகள் பதிவு.

    18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல்நடந்து முடிந்தது.

    நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்ற தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தனர்.

    தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று நண்பகலில் இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    • குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
    • வெயில் அதிகமாக இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பந்தல், நாற்காலி போட்டுள்ளோம். வீல்சேர் கைவசம் உள்ளது.

    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காலை 9 மணி வரை 12.55 சதவீத வாக்குப்பதிவும், 11 மணி வரை 24.37 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 வாக்குகளும் பதிவாகி இருந்தன.

    சென்னை அண்ணாநகர் உள்பட சில பூத்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அறிந்ததும் என்ஜினீயர்கள் விரைந்து சென்று அதை சரி செய்தனர்.

    சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் வெயில் காரணமாக உயிரிழந்தனர் என்ற தகவல் வந்தது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விவரம் கேட்டுள்ளோம்.

    வெயில் அதிகமாக இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பந்தல், நாற்காலி போட்டுள்ளோம். வீல்சேர் கைவசம் உள்ளது. எனவே வாக்காளர்கள் முழுமையாக வந்து ஓட்டு போடலாம். ஒரு சில பிரச்சனைக்காக சில இடங்களில் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக தகவல் வந்தது. அவர்களிடம் மாவட்ட அதிகாரி பேசி வருகிறார். ஓட்டு போடுமாறு அவர்களை கேட்டுக்கொண்டு உள்ளோம். இதுவரை தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்குச்சாவடிகளில் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • தனது ஓட்டை யாராவது கள்ள ஓட்டு போட்டு விட்டால் அதுபற்றியும் தலைமை அதிகாரியிடம் முறையிடலாம்.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    இந்த தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிக்கும் இன்று வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் அடையாள மை உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    அதேபோல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உரிய போலீசாரும், துணை ராணுவ படையினரும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வாக்குச்சாவடிகளில் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    அதன் மூலம் இங்கு நடைபெறும் வாக்குப்பதிவுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.

    வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக 10 வாக்குச்சாவடிக்கு ஒரு மண்டல குழு என்ற வீதத்தில் 6 ஆயிரத்து 137 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் உடனடியாக சென்று பழுது பார்த்து கொடுப்பார்கள். பழுது பார்க்க முடியாத எந்திரங்களாக இருந்தால் புதிய எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

    வாக்குப்பதிவின்போது விவிபேட் எந்திரத்தில் தவறான ஓட்டு காண்பிக்கப்படுவதாக இருந்தால், அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியிடம் யார் வேண்டுமானாலும் முறையிடலாம். புகாரில் உண்மை இருந்தால் அந்த எந்திரம் மாற்றப்படும்.

    புகார் தவறாக இருந்தால் புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

    தனது ஓட்டை யாராவது கள்ள ஓட்டு போட்டு விட்டால் அதுபற்றியும் தலைமை அதிகாரியிடம் முறையிடலாம். அவரிடம் ஓட்டளிப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த பின்னர் வாக்குச்சீட்டில் டெண்டர் ஓட்டு போடலாம். அந்த சீட்டை கவரில் போட்டு தனியாக வைப்பார்கள். ஓட்டு எண்ணிக்கையின்போது வெற்றி தோல்விக்கு ஓரிரு வாக்கு வித்தியாசம் வந்தால் இந்த டெண்டர் ஓட்டு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளது.

    முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்காக சாய்வு தளம் செய்து தரப்பட்டு உள்ளது. அவர்கள் வரிசையில் காத்திருக்க தேவை இல்லை.

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடும்போது முதலில் சட்டசபைக்காக விரலில் மை வைக்கப்படும். அடுத்ததாக பாராளுமன்ற ஓட்டுக்காக இன்னொரு விரலில் மை வைக்கப்படும்.

    இந்த தேர்தலில் அதிக வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக விழிப்புணர்வு பிரசாரம் நிறைய செய்து உள்ளோம். வாக்காளர்கள் அனைவரும் தங்களது கடமையை நிறைவேற்றும் வகையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து நாளை வாக்களிக்க வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது.
    • அமைதியாக, நேர்மையாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை மறுதினம் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். வாக்கு எண்ணும் நாள் வரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியாக, நேர்மையாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
    • தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது.

    தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது.

    தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும்.

    வாக்காளர் அல்லாதவர்கள் நாளை மாலை 6 மணிக்குள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.

    தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

    • எம்.எல்.ஏ. மரணம் காரணமாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது.
    • அமைதி பிரசாரம் உள்பட எந்த வகையான பிரசாரத்துக்கும் அனுமதி இல்லை.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    குறைவான எண்ணிக்கையில் அரசு அலுவலர்கள் உள்ள மாவட்டங்களில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 2 அலுவலர்களை மட்டும் பணி அமர்த்த தேர்தல் கமிஷன் சிறப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

    அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 2 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். கூடுதல் எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள் இருக்கும் மற்ற மாவட்டங்களில் கூடுதலாக ஒரு அலுவலர் பணியாற்றுவார்.

    வாக்குப்பதிவு அன்று ஏதாவது தனியார் நிறுவனம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவில்லை என்றால் அந்தந்த மாவட்ட எஸ்.டி.டி. 'கோடை' சேர்த்து 1950 என்ற எண்ணுக்கு போன் செய்து புகார் அளிக்கலாம்.

    எம்.எல்.ஏ. மரணம் காரணமாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது. அங்கு ஜூன் 4-ந்தேதிக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்த முடியுமா? என்றால், தேர்தல் கமிஷன்தான் அதில் முடிவெடுக்கும். ஒருவேளை விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், அதை எதிர்கொள்ள தேவையான வாக்கு எந்திரங்கள் தயாராக உள்ளன. நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறோம்.

    பாராளுமன்ற தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதியிலும் வரும் 19-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு அமைதி பிரசாரம் உள்பட எந்த வகையான பிரசாரத்துக்கும் அனுமதி இல்லை. எனவே தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் 17-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக 61 ஆயிரத்து 135 போலீசாா் விண்ணப்பித்துள்ளனா்.
    • நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரா்கள் 71 ஆயிரம் போ், ஆன்லைன் மூலம் தபால் வாக்குகளை செலுத்த விண்ணப்பித்துள்ளனா்.

    சென்னை:

    தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தலை அமைதியாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சோ்ந்த துணை ராணுவப் படையினா் வந்துள்ளனா். மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தோ்தல் ஆணையம் முடிவெடுக்கும். கூடுதல் பாதுகாப்பு தேவைக்கு அண்டை மாநிலங்களில் உள்ள போலீசாரை அவா்களுக்குரிய செலவினங்களை ஏற்று, பயன்படுத்திக் கொள்வதற்கு அனைத்து மாநில காவல் துறை இயக்குநா்களுக்கும் தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக 61 ஆயிரத்து 135 போலீசாா் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 26 ஆயிரத்து 247 போ் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா். தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் தோ்தல் ஆணையம் தெளிவாக உள்ளது. யாருக்கெல்லாம் தபால் வாக்குகள் வந்து சேரவில்லையோ அவா்களுக்கு தபால் வாக்குகள் விரைந்து கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை தங்க க்கு பணி ஒதுக்கப்பட்டு உள்ள மையங்களில் பதிவு செய்யலாம். 17-ந்தேதி (புதன்கிழமை) அந்தந்த மையங்களில் இருந்து, பிற தொகுதிகளுக்கு உரிய தபால் வாக்குகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள ஒருங்கிணைந்த தபால் வாக்கு மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

    நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரா்கள் 71 ஆயிரம் போ், ஆன்லைன் மூலம் தபால் வாக்குகளை செலுத்த விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் மட்டுமே ஜூன் 4-ந்தேதி காலை 8 மணிக்கு (வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம்) முன்பு வரை தபால் வாக்குகளை அனுப்ப அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது.
    • நீலகிரி உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை.

    தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது.

    நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

    நீலகிரியில் வேட்பாளரின் செலவு கணக்கை குறைத்து காட்ட சொன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பார்வையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

    ஆனால், நீலகிரி உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.

    • பேச்சுவார்த்தையையும் மீறி தேர்தலை புறக்கணித்தால், ஜனநாயக நாடு என்பதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.
    • தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    தாம்பரத்தில் நெல்லை ரெயிலில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

    அதுபற்றிய விசாரணை, வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தகவல்கள் மட்டுமே என்னிடம் கூறப்பட்டது. வருமான வரித்துறையும், தேர்தல் செலவின பார்வையாளரும் சேர்ந்து சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. அதுபற்றிய தகவல்களை அவர்கள் இந்திய தேர்தல் கமிஷனிடம் நேரடியாக தெரிவிப்பார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் (பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக) ஒரு பகுதியில் உள்ள சிலர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர். அவர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்துவார். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துச் சொல்லி, அவர்களை கண்டிப்பாக வாக்களிக்க வலியுறுத்தப்படும். பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடிந்தால் அதையும் செய்வார்கள். பேச்சுவார்த்தையையும் மீறி தேர்தலை புறக்கணித்தால், ஜனநாயக நாடு என்பதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.

    'சுகி, சுமோட்டா' மற்றும் பல இணையதளங்களிலும் தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். அனுமதி பெறாமல் விளம்பரம் செய்தால் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகிறார்கள். இதையொட்டி தமிழகத்திற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று, அங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

    தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியபடி நடக்காமல் பணியில் மெத்தனமாக இருக்கும் பறக்கும் படை அதிகாரிகள் சிலர் மீது இடைக்கால பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு பணியில் தொடருவது குறித்து, இந்திய தேர்தல் கமிஷன் அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்.
    • தமிழகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் நடைமுறை ஜூன் 4-ந்தேதி வரை அமலில் இருக்கும். ஏப்ரல் 19-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகும் வாகன சோதனை தொடரும். எனவே உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஜூன் 4-ந்தேதி வரை தொடரும்.

    தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.208 கோடி பணம், பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டவை ஆகும்.

    இவற்றில் தமிழகம் முழுவதும் ரொக்கப் பணம் மட்டும் ரூ.88.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்.

    அதன் பிறகு இதில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். இந்த பணம் யாருடையது யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்கிற விவரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×