search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Chief Electoral Officer"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பறக்கும் படையினரால் நடத்தப்படும் வாகன சோதனைகள் வியாபாரிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தல் நேரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் யாரும் பணம் கொண்டுபோனால் வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    பறக்கும் படையினரால் வாகன சோதனை நடத்தப்படும் நிகழ்வுகள் பொதுமக்களுக்கும் குறிப்பாக, வியாபாரிகளுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. அதில் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், ரூ.50,000 பணம் எடுத்துச்செல்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும். விரைவில் ரொக்கப் பணம் கொண்டுசெல்வது குறித்த புதிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிவித்தார்.

    • வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கம்.
    • வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    மாவட்டங்களில் உள்ள  வாக்காளர் பட்டியலில் விவரம் வெளியீடு:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 87 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 41 ஆயிரத்து 827 பெண் வாக்காளர்களும், 166 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20 லட்சத்து 29 ஆயிரத்து 471 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 10,45,551 ஆண் வாக்காளர்களும், 10,77,438 பெண் வாக்காளர்களும், 287 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 21 லட்சத்து 23 ஆயிரத்து 276 வாக்காளர்கள் உள்ளனர். இதில் வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15,09,906 ஆண்கள், 15,710,93 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 595 என மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 91 ஆயிரத்து 890 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 11 ஆயிரத்து 573, பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 79 ஆயிரத்து 985-யும், பிற வாக்காளர்கள் 332 பேரும் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கமும், குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக லால்குடியும் உள்ளது.

    • 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

    சென்னை :

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம், ஜனவரி 1-ந் தேதி மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகியவற்றை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்து வருகிறது.

    அந்த அடிப்படையில், ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அதன்படி 1 லட்சத்து 39 ஆயிரத்து 108 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    27 ஆயிரத்து 332 வாக்காளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்து உள்ளனர். 3 லட்சத்து 42 ஆயிரத்து 185 வாக்காளர்களின் பெயர்கள் இடமாறுதல், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டு உள்ளன.

    மேலும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    ஜூலை 10-ந் தேதி வரையிலான கணக்குப்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 29 ஆயிரத்து 237 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 10 லட்சத்து 2 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 981 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுரை.
    • இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 23-ம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    அக்கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக இந்தியத் தேர்தல் கமிஷனிடம் இருந்து பெறப்பட்ட அறிவுரைகள் அலுவலர்களிடம் பகிர்கொள்ளப்பட்டன.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஆகஸ்டு 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 23-ம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி வாக்காளர் பதிவு விதிகளில் 26 பி என்ற சிறப்பு விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பதிவு செய்து, வக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு அலுவலரிடம் 6பி விண்ணப்பத்தின் மூலம் அளிக்கலாம்.

    இந்த திட்டத்தின் நோக்கம் தற்போது சட்டமாக்கப்பட்டு இருப்பதால், ஆதார் எண்ணை வாக்காளர்கள் தானாக முன்வந்து அளிக்க வேண்டும். நேரடியாக ஆதார் எண்ணை அளிப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை 1.4.2023 தேதிக்குள் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். #TamilNaduVoterList
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு இன்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி, பூத் ஏஜெண்ட் நியமனம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.



    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய தலைமை தேர்தல் அதிகாரி, நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்.

    சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7, 14 போன்ற தேதிகளின் நடைபெறும். இந்த ஆண்டு இதுவரை 5.72 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

    வாக்குச்சாவடி எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு முகவர்களை நியமனம் செய்யும்படியும் அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். #TamilNaduVoterList
    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு தெரிவித்தார். #Thiruparankundramconstituency
    சென்னை:

    இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள்(கலெக்டர்கள்) மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குபதிவு எந்திரத்தையும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தையும் இயக்குவது குறித்த பயிற்சி கருத்தரங்கு சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

    கருத்தரங்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு தொடங்கி வைத்தார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணைச் செயலாளர் சவுமியா ஜித் கோஷ் கலந்து கொண்டார். தேசிய அளவிலான தலைமை பயிற்சியாளர் என்.டி.பர்மர் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி அளித்தார். பெங்களூரு பாரத மின்னணு நிறுவன தொழில் நுட்ப வல்லுனர்கள் உடன் இருந்து தொழில் நுட்ப ரீதியிலான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகளும், வாக்குபதிவு எந்திரத்திற்கான ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து முழுவதும் சொல்லித் தரப்படும். இந்த கூட்டத்தை தொடர்ந்தும் அவர்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து பயிற்சியும் அளிக்கப்படும்.



    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து உள்ளோம் அங்கு இடைத்தேர்தல் நடத்த தயார் ஆக இருக்கிறோம். தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தவுடன் அந்த தேதியில் தேர்தல் நடத்துவோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குசாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும். இந்த எந்திரங்களில் தவறு எதுவும் நடக்காது.

    யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்படும். தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் விடுபட்ட மற்றும் தகுதி உள்ள வாக்காளர்களை சேர்த்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #Thiruparankundramconstituency
    ×