search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruparankundram constituency by election"

    ஆர்.கே.நகரைப் போன்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹவாலா வேலை ஈடுபடாது என்று இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். #BJP #LaGanesan
    அலங்காநல்லூர்:

    பாலமேட்டில் பா.ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சோழவந்தான் தொகுதி அமைப்பாளார் கோவிந்த மூர்த்தி தலைமை தாங்கினார். பொறுப்பாளர் சந்திரபோஸ் , நகர் தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயாலளர் சீனிவாசன்,மாவட்ட தலைவர் சுசீந்திரன், தேனி பாராளுமன்ற பொறுப்பாளர்கள் ராஜபாண்டியன், கர்னல்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழி முறைகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட இல. கணேசன் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல்,டீசல் விலை மட்டுமே காரணம் இல்லை. மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் எரிபொருள் விற்பனையை கொண்டு வந்தால் 25 சதவீதம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது.

    வரவுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்றம் இடைத்தேர்தலில் ஆர்.கே. நகரில் ஒரு கட்சி வெற்றி பெற்றது. அதைபோல் இங்கும் அவர்களது ஹவாலா வேலை எடுபடாது.

    பாரதிய ஜனதாவின் கூட்டணி வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். பா.ஜ.க. சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு வகையில் நலதிட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan
    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு தெரிவித்தார். #Thiruparankundramconstituency
    சென்னை:

    இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள்(கலெக்டர்கள்) மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குபதிவு எந்திரத்தையும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தையும் இயக்குவது குறித்த பயிற்சி கருத்தரங்கு சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

    கருத்தரங்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு தொடங்கி வைத்தார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணைச் செயலாளர் சவுமியா ஜித் கோஷ் கலந்து கொண்டார். தேசிய அளவிலான தலைமை பயிற்சியாளர் என்.டி.பர்மர் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி அளித்தார். பெங்களூரு பாரத மின்னணு நிறுவன தொழில் நுட்ப வல்லுனர்கள் உடன் இருந்து தொழில் நுட்ப ரீதியிலான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகளும், வாக்குபதிவு எந்திரத்திற்கான ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து முழுவதும் சொல்லித் தரப்படும். இந்த கூட்டத்தை தொடர்ந்தும் அவர்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து பயிற்சியும் அளிக்கப்படும்.



    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து உள்ளோம் அங்கு இடைத்தேர்தல் நடத்த தயார் ஆக இருக்கிறோம். தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தவுடன் அந்த தேதியில் தேர்தல் நடத்துவோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குசாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும். இந்த எந்திரங்களில் தவறு எதுவும் நடக்காது.

    யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்படும். தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் விடுபட்ட மற்றும் தகுதி உள்ள வாக்காளர்களை சேர்த்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #Thiruparankundramconstituency
    ×