search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Satya Pradha Sahoo"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பறக்கும் படையினரால் நடத்தப்படும் வாகன சோதனைகள் வியாபாரிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தல் நேரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் யாரும் பணம் கொண்டுபோனால் வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    பறக்கும் படையினரால் வாகன சோதனை நடத்தப்படும் நிகழ்வுகள் பொதுமக்களுக்கும் குறிப்பாக, வியாபாரிகளுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. அதில் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், ரூ.50,000 பணம் எடுத்துச்செல்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும். விரைவில் ரொக்கப் பணம் கொண்டுசெல்வது குறித்த புதிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிவித்தார்.

    ×