search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதிவு"

    • சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
    • சேதம் விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியா தீவு நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகர் வெவாக்கிலிருந்து 88 கிமீ தென்மேற்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேதம் விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    • வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.
    • குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்த வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.

    தமிழகத்தில் அதிக வெயிலின் தாக்கத்தில் முதல் மாவட்டமாக ஈரோடு மாவட்டம் உள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை உள்ளது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டில் மின்விசிறி இயங்கினாலும் வெப்ப காற்று புழுக்கத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதிய நேரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கரும்பு பால், குளிர்பானங்கள், இளநீர், மோர் போன்றவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.

    இதனால் இந்த வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்தபடி செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் முகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க ஈரோடு வனப்பகுதிகளான அந்தியூர் பர்கூர் வனப்பகுதி, கடம்பூர் வனப்பகுதிகளில் கடும் வெயிலால் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு உள்ளதால் குடிநீருக்காகவும், உணவுகளை தேடியும் யானைகள், வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    கோடை வெயில் ஆரம்பிக்கும் முன்பே தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு பகுதியில் தற்போது மண் பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

    • நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
    • எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளதாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

    வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை கன மழை பெய்தது. இன்று பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கலெக்டர்அலுவலகம் -66.4, புவனகிரி-64.0, வடகுத்து- 57.0, அண்ணா மலைநகர் - 53.4, சிதம்பரம் -52.4, குறிஞ்சிப்பாடி-52.0, லால்பேட்டை-49.4, கொத்தவாச்சேரி-48.0, வானமாதேவி-47.0, பரங்கிப்பேட்டை-46.7, கடலூர்-45.6, சேத்தியாதோப்பு-44.4, பண்ருட்டி-44.0, காட்டு மன்னார் கோவில் - 41.4, எஸ்ஆர்சி குடிதாங்கி-38.75, ஸ்ரீமுஷ்ணம்-28.2, விருத்தாசலம்-20.0, வேப்பூர்-15.0, பெல்லாந்துறை-14.6, தொழுதூர்-12.0, மீ-மாத்தூர் - 12.0, குப்பநத்தம்-11.8, காட்டுமயிலூர் - 10.0, கீழ்செருவாய் - 6.0, லக்கூர்- 3.0.கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 883.05 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    • பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய, ஆக., 10 முதல், 21 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
    • வருகிற, 10-ந்தேதிக்குள் (நாளை) திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு கட்டணம், 125 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    உடுமலை:

    பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய, ஆக., 10 முதல், 21 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் கடந்த 6-ந்தேதி முதல் வரும் 10-ந்தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப படிவம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தங்கள் விபரங்களை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, வருகிற, 10-ந்தேதிக்குள் (நாளை) திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு கட்டணம், 125 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுச்சீட்டு சமர்ப்பித்து, முன்னதாகவே 'ஹால் டிக்கெட்' பெற்று வருவோர் மட்டுமே, செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    • கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மொத்தம் - 270.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    கடலூர் :

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வானமாதேவி - 27.2, எஸ் ஆர் சி குடிதாங்கி - 25.5, அண்ணா மலைநகர் - 24.8,சிதம்பரம் - 24.0, காட்டு மன்னார் கோவில் - 22., லால்பேட்டை - 17.0, புவனகிரி - 15.0, 8. சேத்தியாதோப்பு - 15.0,காட்டுமயிலூர் - 15.0, வடக்குத்து - 14.0, கடலூர் - 13.2, கலெக்டர் அலுவலகம் - 11.6,கொத்தவாச்சேரி - 11.0, ஸ்ரீமுஷ்ணம் - 8.1, பண்ருட்டி - 7.0, பெல்லாந்துறை - 6.2, பரங்கிப்பேட்டை - 6.1, குறிஞ்சிப்பாடி - 3.0,குப்பநத்தம் - 3.0, விருத்தாசலம் - 1.3.மொத்தம் - 270.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வடசேரி காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
    • மாம்பழத்துறையாறு பகுதியிலும் மழை பெய்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் மாலை 5.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை வெளுத்து வாங்கியது. புத்தேரி, வடசேரி, பார்வதிபுரம் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வடசேரி காசிவிஸ்வநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

    மேலும் வடசேரி பகுதி களில் உள்ள தெருக்களில் தண்ணீர் சாலைகளில் கரை புரண்டு ஆறாக ஓடியது. மின்னல்கள் கண்ணை பறிக்கும் வகையிலும், இடிச் சத்தம் காதை பிளக்கும் வகையிலும் இருந்தது. மாம்பழத்துறையாறு பகுதியிலும் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 72 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குளச்சல், இரணியல், சுருளோடு, குருந்தன் கோடு, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப் பகுதியிலும் மழை நீடித்ததை யடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. தொடர் மழையின் காரணமாக கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு களின் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.56 அடியாக இருந்தது. அணைக்கு 422 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.35 அடியாக உள்ளது. அணைக்கு 498 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.18 அடியாக உள்ளது. அணைக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 22.4, பூதப்பாண்டி 65.4, களியல் 16, கன்னிமார் 11.4, நாகர்கோ வில் 10.2, சுருளோடு 58.4, தக்கலை 24, குளச்சல் 28.6, இரணியல் 59.4, பாலமோர் 27.2, மாம்பழத்துறையாறு 72, திற்பரப்பு 17.2, ஆரல்வாய்மொழி 2, கோழிப் போர்விளை 8.2, அடையாமடை 26, குருந்தன்கோடு 70, முள்ளங்கினாவிளை 4.8, ஆணைக்கிடங்கு 70.4, முக்கடல் 15.2.

    • குமரி மாவட்டம் முழு வதும் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    நாகர்கோவில்,செப்.29-

    குமரி மாவட்டம் முழு வதும் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விட்டு விட்டு பெய்து வந்த மழை நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அதன்பிறகு மழை பெய்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குடை பிடித்தவாறு சென்றனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், குழித்துறை, தக்கலை, குளச்சல், இரணியல், கோழிப்போர்விளை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைப் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. சிற்றாறு 1-ல் அதிகபட்சமாக 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டுகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக சானல்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பாசன குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. பாசன குளங்களிலும், அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதை யடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 21.75 அடியாக உள்ளது. அணைக்கு 596 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 586 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது.

    அணைக்கு 237 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வந்த பிறகும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாகவே இருந்து வருகிறது.

    அணை நீர்மட்டம் இன்று காலை மைனஸ் 16.20 அடியாக இருந்தது. நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க புத்தன் அணை தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை மில்லி மீட்ட ரில் வருமாறு:-பேச்சிப் பாறை 16.8, பெருஞ்சாணி 11.2, சிற்றார் 1-30, சிற்றார் 2-10.4, பூதப்பாண்டி 13.4, களியல் 12, கன்னிமார் 9.4, கொட்டாரம் 11.6, குழித்துறை 15.6, மயிலாடி 16.2, நாகர்கோவில் 8.2, புத்தன் அணை 9, சுருளோடு 17.2, தக்கலை 19, குளச்சல் 16, இரணியல் 12.4, பாலமோர் 23.4, மாம்பழத்துறையாறு 24, திற்பரப்பு 21.5, கோழிப்போர்விளை 15.2, அடையாமடை 10.2, குருந்தன்கோடு 20, முள்ளங்கினாவிளை 12.8, ஆணைக்கிடங்கு 21.4.

    • ராமச்சந்திரன் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார்.
    • சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32) டிரைவர். இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள கார், வேன் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் ராஜா (27), பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (27), மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கல்வராயன் மகன் ருத்திரன் (25) உள்ளிட்ட மற்றும் சிலர் அங்கு வந்து ஏற்கனவே மதியம் எங்களிடம் ஏன் பிரச்சனை செய்தாய் எனக் கூறி ராமச்சந்திரனை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

    இதே போல் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரில் நானும் எனது நண்பர் ராஜாவும் தனியார் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை பார்த்து வருவதாகவும், வேலை முடித்துவிட்டு தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பின்புறம் உள்ள காலி மனையில் உணவு அருந்திய போது அங்கே வந்த வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (47), அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (43) மற்றும் மடம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (40) உள்ளிட்ட சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து இரு தரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ராஜா, தமிழ்ச்செல்வன், ருத்திரன் மற்றும் சுதாகர், சக்திவேல், ரஞ்சித் குமார் ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • 77 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.
    • சைபர் கிரைம் குறித்த புகார்களை அவசர உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்

    கோவை.

    கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் ஈடுபடுவர்களை கண்டுபிடித்து தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறன்னர்.

    இதன் ஒரு பகுதியாக சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். பேஸ்புக், டிவிட்டர், வேலை வாங்கி தருவதாக மோசடி, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து அதில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவை மாவட்ட சைபர் கிரைமில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் வரையிலான 7 மாத காலத்தில் மட்டும் 3,013 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 886 வழக்குகளில் குற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்கு தீர்வும் காணப்பட்டுள்ளது. 77 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. மேலும் சைபர் குற்ற வழக்குகள் தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும் இதுவரை ரூ.81 லட்சத்து 25 ஆயிரத்து 969 பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவில் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் சைபர் கிரைம் புகார்கள் பெறப்படுகின்றன.

    சைபர் கிரைம் குறித்த புகார்களை அவசர உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
    • டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.

     காங்கயம்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 24.7.2023 முதல் 4.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் முதற்கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று சுமார் 3,88,687 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    அந்த வகையில் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் தொடங்கப்பட்டு 31,509 விண்ணப்பங்கள் பெறப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் 24.7.2023 முதல் 5.8.2023 வரை 4,20,196 கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து இன்று 6.8.2023 முதல் 16.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30வார்டுகளிலும், 6 நகராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் உள்ள அரசுஅலுவலக கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் விண்ணப்பபதிவு முகாம்கள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக நடைபெறும் முகாம்களுக்கு 1.8.2023 முதல் 4. 8.2023 வரை ஆகிய நான்கு நாட்கள் விண்ணப்பப்படிவம் மற்றும் டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.

    இந்த டோக்கன்களில் டோக்கன் நம்பர், நாள் மற்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மையத்திற்கு வர வேண்டும் எந்த நாளில் வரவேண்டும் என்று டோக்கன்களில் எழுதப்பட்டு வழங்கப்படும். குறிப்பிடப்பட்ட அந்த மையத்திற்கு அந்த நாள் அந்த நேரத்திற்கு வந்தால் போதுமானது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பழனியப்பா திருமண மண்டபம், ராஜாஜி வீதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் பதிவு மையத்தினை அமைச்சர் ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் வட்டாட்சியர் புவனேஸ்வரி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொது ஏலம் வருகிற 31-ந்தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது.
    • பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மண்டல துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அம்பாசிட்டர் கார் (வாகன எண்.TN64G0159)பொது ஏலம் வருகிற 31-ந்தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மதுரை மண்டல துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகத்தில் தங்களது ஆதார், ரேஷன், பேன் கார்டு நகலுடன் காப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தி நாளை (28-ந்தேதி) மாலை 6 மணிக்குள் பெயரை பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    வாகனம் ஏலம் எடுக்கவில்லையெனில் காப்புத்தொகை திருப்பி அளிக்கப்படும். ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு கோரும் நபருக்கு வாகனம் விற்பனை செய்யப்படும். மேலும் உறுதி செய்யப்பட்ட வாகன ஏலத்தொகையினை அரசு நிர்ணயம் செய்துள்ள 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம், மதுரை மண்டல ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிடம், டி.என்.ஏ.யு. நகர், ராஜகம்பீரம், ஒத்தக்கடை, திருமோகூர் சாலை, மதுரை என்ற முகவரியிலோ அல்லது 0452 2422517 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    ×