search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Log"

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை கன மழை பெய்தது. இன்று பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கலெக்டர்அலுவலகம் -66.4, புவனகிரி-64.0, வடகுத்து- 57.0, அண்ணா மலைநகர் - 53.4, சிதம்பரம் -52.4, குறிஞ்சிப்பாடி-52.0, லால்பேட்டை-49.4, கொத்தவாச்சேரி-48.0, வானமாதேவி-47.0, பரங்கிப்பேட்டை-46.7, கடலூர்-45.6, சேத்தியாதோப்பு-44.4, பண்ருட்டி-44.0, காட்டு மன்னார் கோவில் - 41.4, எஸ்ஆர்சி குடிதாங்கி-38.75, ஸ்ரீமுஷ்ணம்-28.2, விருத்தாசலம்-20.0, வேப்பூர்-15.0, பெல்லாந்துறை-14.6, தொழுதூர்-12.0, மீ-மாத்தூர் - 12.0, குப்பநத்தம்-11.8, காட்டுமயிலூர் - 10.0, கீழ்செருவாய் - 6.0, லக்கூர்- 3.0.கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 883.05 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மொத்தம் - 270.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    கடலூர் :

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வானமாதேவி - 27.2, எஸ் ஆர் சி குடிதாங்கி - 25.5, அண்ணா மலைநகர் - 24.8,சிதம்பரம் - 24.0, காட்டு மன்னார் கோவில் - 22., லால்பேட்டை - 17.0, புவனகிரி - 15.0, 8. சேத்தியாதோப்பு - 15.0,காட்டுமயிலூர் - 15.0, வடக்குத்து - 14.0, கடலூர் - 13.2, கலெக்டர் அலுவலகம் - 11.6,கொத்தவாச்சேரி - 11.0, ஸ்ரீமுஷ்ணம் - 8.1, பண்ருட்டி - 7.0, பெல்லாந்துறை - 6.2, பரங்கிப்பேட்டை - 6.1, குறிஞ்சிப்பாடி - 3.0,குப்பநத்தம் - 3.0, விருத்தாசலம் - 1.3.மொத்தம் - 270.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    • தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல், கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.
    • சேலத்தில் இன்று காலையில் வெயில் கொளுத்தியது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல், கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தொடக்கத்தில் வெயிலின் அளவு குறைவாக இருந்த நிலையில், கடந்த 1½ வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சேலத்தில் இன்று காலையில் வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்த காணப்பட்டது. நேற்று சேலத்தில் 103 பாரன்ஹீட்டாக வெயில் அளவு பதிவானது.

    இன்றும் அதே அளவு பதிவானது இதேபோல் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது.

    • ஜல்லிக்கட்டில் காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
    • பதிவு செய்த மாடுகளுக்கு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த திருக்கானூர்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வீரர்கள் காளைகளை அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்தது.

    முன்னதாக இந்த ஜல்லிக்கட்டில் 542 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. பதிவு செய்த மாடுகளுக்கு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

    இந்தப் பணிகளை தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில் ஏழும்பட்டி கால்நடை மருந்தக உதவி மருத்துவர் செரீப் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    கியூ ஆர் கோடு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

    இதேபோல் திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் வீரர்களை முட்டி காயம் ஏற்படாமல் இருப்பதற்காக மாடுகளின் கொம்புகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் ரப்பர் பொருத்தியிருந்தனர்.

    ×