search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewage vehicles"

    • உரிமம் இன்றி இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
    • ஆணையாளர் எச்சரிக்கை

    சோளிங்கர்:

    சோளிங் கர் நகராட்சியில் அனுமதியின்றி கழிவுநீர் வாகனங்கள் இயக்கினால் உரிமையாளர் கள் மீது வழக்கு பதிவு செய் யப்படும் என்ற ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சோளிங்கர் நகராட்சியில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் உள்ள கழிவறைகளில் இருந்து கழிவுநீர் அகற்ற கழிவுநீர் வாகனங்கள் இயங்கி வருகின்றன.

    தனியார் மூலம் இயக்கப்படும் இந்த வாகனங்கள் உரிய அனுமதியின்றி இயக்கப்படுகிறது.

    இந்த வாகனங்கள் மோட்டார் வாகன ஆய்வாளரின் உரிய சான்றிதழ் பெற்று வரைமுறைகளுக்கு உட் பட்டு இயக்கப்பட வேண்டும்.

    சோளிங்கர் நகராட்சி பகுதிக ளில் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவ ணங்களுடன் விண்ணப்பம் செய்து கழிவுநீர் அகற்றும் வாக னத்திற்கான உரிமத்தை பெற்று கொள்ள வேண்டும்.

    உரிமம் இன்றி இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் முன்னறிவிப்பின்றி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    மேலும், வாகன உரிமையாளர்கள் மீது நீதிமன்றம் மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும்.

    எனவே பொதுமக்கள், தங்கள் இல் லங்களில் உள்ள கழிவுகளை அகற்ற நகராட்சியில் உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் லதா(பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

    • காயல்பட்டினம் நகரா ட்சியில் உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்கள் மட்டுமே கழிவுநீரை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • அனுமதி பெறாத கழிவுநீர் வாகனங்கள் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவு நீரை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்ப ட்டுள்ளன.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் குமார் சிங் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காயல்பட்டினம் நகரா ட்சியில் உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்கள் மட்டுமே கழிவுநீரை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாத கழிவுநீர் வாக னங்கள் கண்டறிய ப்பட்டால் பறிமுதல் செய்ய ப்படும். கழிவுநீர் வாகன ங்களுக்கு உரிமம் பெற ஒரு வாரம் கால அவ காசம் வழங்கப்பட்டுள்ளது.

    அதே போல் பொதுமக்கள் நகராட்சியால் உரிமம் வழ ங்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே தங்களது வீடு, வணிக நிறுவனங்களில் உள்ள கசடு கழிவு தொட்டிகளை சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.உரிமம் பெறாதவர்களை புறக்கணிக்க வேண்டும். உரிமம் பெற்றுள்ள கழிவுநீர் வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றி பணி செய்ய வேண்டும். காயல்பட்டினம் நகராட்சியில் கழிவு நீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கும் வரை திருச்செந்தூர் நகராட்சிக்கு சொந்தமான தோப்பூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவுகளை கொண்டு சேர்க்க வேண்டும். வேறு எங்கும் திறந்த வெளிகளில் நீர் நிலைகளில் கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்தக்கூ டாது. அவ்வாறு ஏற்படுத்து வது கண்டறியப்பட்டால் வாகன ங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமை யான நடவடிக்கை எடுக்க ப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது.

    • கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து உடுமலை நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    • உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    உடுமலை:

    கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உடுமலை நகராட்சி அறிவித்துள்ளது.

    இது குறித்து உடுமலை நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- உடுமலை நகராட்சியில் மனிதக்கழிவுகள் கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லும் வகையில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படுகிறது.

    எனவே கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து உடுமலை நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை பொது இடங்களில் கொட்ட கூடாது. நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் .உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    ×