search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் வாகனங்களை பதிவு செய்ய வேண்டும் - உடுமலை நகராட்சி அறிவிப்பு
    X

    கோப்புபடம். 

    கழிவுநீர் வாகனங்களை பதிவு செய்ய வேண்டும் - உடுமலை நகராட்சி அறிவிப்பு

    • கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து உடுமலை நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    • உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    உடுமலை:

    கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உடுமலை நகராட்சி அறிவித்துள்ளது.

    இது குறித்து உடுமலை நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- உடுமலை நகராட்சியில் மனிதக்கழிவுகள் கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லும் வகையில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படுகிறது.

    எனவே கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து உடுமலை நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை பொது இடங்களில் கொட்ட கூடாது. நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் .உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×