கழிவுநீர் வாகனங்களை அனுமதியின்றி இயக்கினால் வழக்கு

உரிமம் இன்றி இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் ஆணையாளர் எச்சரிக்கை
கழிவுநீர் வாகனங்களை அனுமதியின்றி இயக்கினால் வழக்கு
Published on

சோளிங்கர்:

சோளிங் கர் நகராட்சியில் அனுமதியின்றி கழிவுநீர் வாகனங்கள் இயக்கினால் உரிமையாளர் கள் மீது வழக்கு பதிவு செய் யப்படும் என்ற ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சோளிங்கர் நகராட்சியில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் உள்ள கழிவறைகளில் இருந்து கழிவுநீர் அகற்ற கழிவுநீர் வாகனங்கள் இயங்கி வருகின்றன.

தனியார் மூலம் இயக்கப்படும் இந்த வாகனங்கள் உரிய அனுமதியின்றி இயக்கப்படுகிறது.

இந்த வாகனங்கள் மோட்டார் வாகன ஆய்வாளரின் உரிய சான்றிதழ் பெற்று வரைமுறைகளுக்கு உட் பட்டு இயக்கப்பட வேண்டும்.

சோளிங்கர் நகராட்சி பகுதிக ளில் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவ ணங்களுடன் விண்ணப்பம் செய்து கழிவுநீர் அகற்றும் வாக னத்திற்கான உரிமத்தை பெற்று கொள்ள வேண்டும்.

உரிமம் இன்றி இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் முன்னறிவிப்பின்றி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், வாகன உரிமையாளர்கள் மீது நீதிமன்றம் மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும்.

எனவே பொதுமக்கள், தங்கள் இல் லங்களில் உள்ள கழிவுகளை அகற்ற நகராட்சியில் உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் லதா(பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com