search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian game"

    • 3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
    • டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.

    சென்னை:

    சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 43 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    தமிழக வீரர், வீராங்கனைகள் ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்று முத்திரை பதித்து வருகின்றனர். இதுவரை 12 பேர் பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    நேற்று நடந்த தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், வித்யா ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் பெற்றார். 22 வயதான அவர் திருவாரூர் மாவட்டம், செட்டிசத்திரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆவார்.

    பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வித்யா ராம்ராஜ் 55.68 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். 25 வயதான அவர் கோவையை சேர்ந்தவர் ஆவார்.

    டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.

    ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பள்ளிகல் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் குமார் இடம் பெற்றிருந்தார்.

    இதேபோல 3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் பெண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி, கஸ்தூரி ராஜ் மற்றும் கார்த்திகா ஜெகதீஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றனர்.

    துப்பாக்கி சுடும் போட்டியில் ஆண்கள் டிராப் அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்த அணியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிருதிவிராஜ் தொண்டைமான் இடம் பெற்றார்.

    தடகள போட்டியின் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சுபா வெங்கடேசன், வித்யா, ராஜேஷ் ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர்.

    • துப்பாக்கி சுடுதலில் 7 தங்கமும், தடகளத்தில் 4 தங்கமும், டென்னிஸ், குதிரையேற்றம், ஸ்குவாஷ், பெண்கள் கிரிக்கெட் ஆகியவற்றில் தலா ஒரு தங்கமும் கிடைத்து இருந்தது.
    • வில்வித்தை போட்டியில் பெற்ற தங்கப் பதக்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.

    ஹாங்சோவ்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 330 வீரர்களும், 328 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 661 பேர் கலந்து கொண்டுள்ளனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    நேற்றைய 11-வது நாள் போட்டி முடிவில் இந்திய அணி 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் ஆக மொத்தம் 69 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    போட்டியின் 12-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு முதலில் வெண்கலம் பதக்கம் கிடைத்தது. 35 கி.மீ. தூர கலப்பு இரட்டையர் நடைப்பந்தயத்தில் இந்திய ஜோடிக்கு பதக்கம் கிடைத்தது.

    ஆசிய விளையாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் மஞ்சு ராணி, ராம் பாபு ஜோடி 5 மணி 51 நிமிடத்தில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது.

    இந்த பிரிவில் சீனாவுக்கு தங்கமும், ஜப்பானுக்கு வெள்ளியும் கிடைத்தது.

    அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 16-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. வில்வித்தை போட்டி மூலம் இந்த தங்கம் கிடைத்தது.

    ஓஜாஸ் தியோடேல்-ஜோதிசுரேகா ஜோடி வில்வித்தை காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முத்திரை பதித்தது. இந்த ஜோடி இறுதிப்போட்டியில் 159-158 என்ற கணக்கில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தியது.

    துப்பாக்கி சுடுதலில் 7 தங்கமும், தடகளத்தில் 4 தங்கமும், டென்னிஸ், குதிரையேற்றம், ஸ்குவாஷ், பெண்கள் கிரிக்கெட் ஆகியவற்றில் தலா ஒரு தங்கமும் கிடைத்து இருந்தது.

    வில்வித்தை போட்டியில் பெற்ற தங்கப் பதக்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை குவித்து புதிய சாதனை படைத்தது.

    16 தங்கம், 26 வெள்ளி, 31 வெண்கலம், ஆக மொத்தம் 73 பதக்கங்களை இதுவரை இந்தியா பெற்றுள்ளது. 8-ந் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2018-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 70 பதக்கம் பெற்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.

    அந்த போட்டியில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் ஆக மொத்தம் 70 பதக்கங்களை பெற்று இருந்தது.

    • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.
    • மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    5-வது நாளாக இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.

    25 மீட்டர் பிஸ்டல் ரேபிட் பிரிவில் இந்திய மகளிர் அணியினர் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். மேலும் இதே பிரிவில் மூன்று பேரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

    50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் சாம்ரா, ஆஷி சௌக்ஷி மற்றும் மனினி கௌசிக் ஆகிய மூவரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். சிஃப்ட் சாம்ரா - ஆஷி சௌக்ஷி ஆகியோர் 50 மீ ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளனர்.

    ஆசிய விளையாட்டில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளருக்கு ரூ.1¼ கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGame #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2-வது கட்டமாக மேலும் சில வீரர்களுக்கும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆசிய விளையாட்டில் கலப்பு தொடர் ஓட்டம் மற்றும் ஆண்கள் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கங்கள் கைப்பற்றிய ஆரோக்ய ராஜீவுக்கு ரூ.60 லட்சம், பெண்களுக்கான ஸ்குவாஷ் அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுனைனா குருவில்லாவுக்கு ரூ.30 லட்சம், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம், மேலும் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்களான அஞ்சன் சின்னப்பா, டிம்பிள் மதிவாணன் மற்றும் அமிஷ்வேத் ஆகியோருக்கு ரூ.18 லட்சம் என்று மொத்தம் ரூ.1 கோடியே 28 லட்சத்திற்கான காசோலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×