search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்  ஆதிதிராவிடர்- பழங்குடி மாணவர்களுக்கு  ரூ. 2 கோடி  ஊக்கத்தொகை:  கலெக்டர் தகவல்
    X

    கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்- பழங்குடி மாணவர்களுக்கு ரூ. 2 கோடி ஊக்கத்தொகை: கலெக்டர் தகவல்

    கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்- பழங்குடி மாணவர்களுக்கு ரூ. 2 கோடி ஊக்கத்தொகை என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சேர்ந்த 12,420 மாணவியர்களுக்கு தலா ரூ.500வீதம் 2.07 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 43.64 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், மாணவியர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.43.64 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், 7 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 7333 மாணவியர்களுக்கு தலா ரூ.1,500 வீதம் ரூ.1,09,99,500/- மதிப்பீட்டில் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார குறைவான பணிசெய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தூய்மைப்பணியாளர்களாக பணிபுரிவோரின் குழந்தைகள் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பல்வேறு வகையான பள்ளிகளில் சேர்ந்து விடுதியில் தங்கி மற்றும் விடுதியில் தங்காது கல்வி பயிலும் 454 மாணாக்கர்களுக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டில் ரூ.13.67 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி ஊக்கத்தொகையாக பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பயிலும் 995 மாணாக்கர்களுக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டில் ரூ.78.40 லட்சம் உதவித்தொகையாவும் வழங்கப்பட்டுள்ளது.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 60 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,20,000 மதிப்பீட்டிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 125 ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 60 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டிலான முதலுதவிப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்கள் 10 பேருக்கு ரூ.3,50,000 மதிப்பீட்டில் இலவச கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களில் 4 பேருக்கு ரூ.68,000/-மதிப்பீட்டில் ஈமச்சடங்கு/இயற்கை மரண உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளது. பழங்குடியின இளைஞர்கள் 25 பேருக்கு ரூ.1.50 லட்சம் செலவில் இலவச ஓட்டுநர் பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின விவசாயிகள் 5 நபர்களுக்கு ரூ. 9,00,000/-மதிப்பீட்டிலான இலவச பவர் டிரில்லர் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 17 நபர்களுக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் ரூ.51,00,000/-மதிப்பீட்டிலான கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×