search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில்  மாணவர்களின் வங்கி கணக்கு  விபரத்தை பதிவு செய்ய உத்தரவு
    X

    சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களின் வங்கி கணக்கு விபரத்தை பதிவு செய்ய உத்தரவு

    • தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை லட்சக்கணக்கான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
    • அரசு சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் உள்ளன. இங்கு தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை லட்சக்கணக்கான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க, அரசு சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 10, பிளஸ்-1 வகுப்புகளுக்கு தலா ரூ.1500, பிளஸ்-2 வகுப்புக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    அதனால் கடந்த கல்வி ஆண்டில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மாணவ- மாணவிகளின் வங்கி கணக்கு விபரங்களை, எமிஸ் தளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. கடந்த மாதத்துடன் அதற்கான கெடு முடிந்த பின்பும் பல மாவட்டங்களில் இந்த விபரங்கள் முழுமையாக பதிவு செய்யப்படாமல் உள்ளன. இதனால் அந்த விபரங்களை உடனே பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×