search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி சாகுபடி"

    • சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பங்கேற்கலாம்.
    • தோட்டக்கலை அலுவலகங்களில் வருகின்ற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி, செப்.21-

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில், தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விள ங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பங்கேற்கலாம்.

    அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளிடம் பாரம் பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், முறை யான மண்வள மேம்பாடு அங்கக முறையில் விதை களை மீட்டெடுத்தல் போன்ற காரணங்களின் அடிப்படை யில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெ டுக்கப்படுவார்கள். மேலும், இதற்கான விண்ணப்பம் மற்றும் வழிகாட்டு நெறி முறைகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்ப ட்டுள்ளது. விருது பெறுப வர்களுக்கு முதல் பரிசாக ரூ15,000 2-ம் பரிசாக ரூ.10,000 வரைவோலை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க இத்திட்ட த்தின்கீழ் தோட்டக் கலை த்துறை இணைய தளத்தில் விண்ண ப்பிக்கலாம் அல்லது விண்ண ப்பங்களை பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் வருகின்ற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும், கூடுதல் தகவலுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களான உமா கள்ளக்குறிச்சி- 8098327732, முருகன் சின்னசேலம்- 9787863135, சத்தியராஜ் சங்கராபுரம்- 9524737498, முருகன் ரிஷிவந்தியம்- 9688940083, சக்திவேல் திருக்கோவிலூர்- 7811967632, முரளி திருநா வலூர்- 9976196911, சொர்ணம் தியாகதுருகம்- 8903555527, விஜயலட்சுமி உளுந்தூர்பேட்டை- 9894142635, வாமலை வெள்ளி மலை- 9787237797 ஆகியோர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டும் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கங்களை நேரில் அணுகியும் தகவல் பெற்று பயன்பெற லாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மழை இல்லாததால் காய்கறி சாகுபடி பாதிப்பு அடைந்துள்ளது
    • தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், பாசனத்துக்கு கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லை

    கரூர்:

    கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளான நஞ்சைகாளகுறிச்சி, புஞ்சைகாளகுறிச்சி, எலவனுார், ராஜபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் காய்கறி சாகுபடி நடக்கிறது. பெரும்பாலும் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் நடக்கும். இங்கு தக்காளி, வெண்டைக்காய், சுரக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகிறது. தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், பாசனத்துக்கு கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் காய்கறிகளை விதைக்க முடியாத நிலையில் விவசாயிகள் கவலையில் தவிக்கின்றனர். ஒரு சிலர் குறைந்த பரப்பளவில் காய்கறி விவசாயம் செய்துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


    • மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. அதனை ஒட்டிய, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நிமிட்டிபாளையம், சின்னமல்லான்பாளையம் போன்ற வருவாய் கிராமங்களில் தக்காளி, கத்தரி, அவரை, வெண்டை, கீரை, பீர்க்கன், புடலை, பாகல் போன்ற காய்கறி பயிர்களும், மா, வாழை, கொய்யா, நெல்லி போன்ற பழ வகைகளும், 1,200 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர்.

    பெருந்துறை உழவர் சந்தையிலும், அதனை ஒட்டிய வருவாய் கிராமங்களிலும் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து, 'இப்பகுதி விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை, உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.

    பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தவும், காய்கறி வரத்தை அதிகரிக்க மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

    ×