search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garden"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மான்ய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
    • தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் -1,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகிய ஆவ–ணங்களை கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கொடுத்து பெற்று கொள்ளலாம்.

    பரமத்தி வேலூர்:

    கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகம் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மான்ய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

    இடுபொருட்கள் விபரம் தலா ஒரு நபருக்கு 10 வகையான மூலிகைச் செடிகள் ,செடி வளர்ப்பு பைகள்-10,

    தென்னை நார்க்கட்டி-10கிலோ ,மண்புழு உரம் -4 கிலோ வழங்கப்படுகிறது.

    தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் -1,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகிய ஆவ–ணங்களை கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கொடுத்து பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தோட்டக்–கலைத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • தோட்டத்தில் மேற்பார்வையாளராக அஜித்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
    • திருட்டு குறித்து அஜித்குமார் பத்தமடை போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடையில் கருப்பங்குளம் பகுதியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது தோட்டம் உள்ளது. இங்கு குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ராம் அஜித்குமார்(வயது 31) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ந்தேதி இவர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 மின்மோட்டார்கள், தண்ணீருக்காக வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது.

    இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    • நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.

    அதில் அவர்கள் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். தற்போது அவை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதும் அனைக்கப்பட்டது. எனினும் அவர்களது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஜெயக்குமார் கயத்தாறு போலீசில் புகார் செய்தார். அதில், தனக்கு வேண்டாத சிலர் தோட்டத்தில் உள்ள மக்காச்சோள பயிர்களுக்கு தீவைத்து சென்றுள்ளனர். எனவே இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    • வெங்கடேசுக்கு சொந்தமான விவசாய தோட்டம் நவரைபத்து பகுதியில் உள்ளது.
    • தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஷ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் அருகே உள்ள நவரைபத்து பகுதியில் உள்ளது. இன்று காலை வெங்கடேஷ் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி வாலிபர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு பணகுடியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

    • நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.
    • அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கத்திரிப்பட்டி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள், நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    தகவல் அறிந்து, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் வனத்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. சதாசிவம் கூறும்போது, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு மற்றும் வனத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார். அப்போது, கொளத்தூர் ஒன்றியக் குழு துணை தலைவர் மாரப்பன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
    • 6 போ் அமா்ந்து பயணிக்கக் கூடிய பேட்டரி காா் ஒன்று வாங்கியுள்ளனா்.

    ஊட்டி:

    சா்வதேச புகழ்பெற்ற ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் காலங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும், இரண்டாவது சீசன் காலமான செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகன் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

    அதேபோல, மற்ற மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கும். சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 60 ரகங்களிலான பல்வேறு வகையான லட்சக்கணக்கான மலா்கள் பூந்தொட்டிகளிலும், மலா் பாத்திகளிலும் தயாா்படுத்த ப்படுகின்றன.தற்போது, ஊட்டியில் இரண்டாவது சீசன் தொடங்கி உள்ள சூழலில் ஓணம் பண்டிகைக்கான தொடா் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பூங்காவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் பூங்காவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மலா்களை ரசிக்க சிரமப்பட்டு வந்தனா். இதனால் பூங்கா நிா்வாகம் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி 6 போ் அமா்ந்து பயணிக்கக் கூடிய பேட்டரி காா் ஒன்று வாங்கியுள்ளனா். இதன் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதைத்தொடா்ந்து இந்த பேட்டரி காா் விரைவில் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு வருமென பூங்கா நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

    • மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது.
    • வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

    உடுமலை,

    உடுமலை நகரில் சிலர் தங்களது குடியிருப்பு ஒட்டிய நிலப்பகுதிகளில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர். அங்கு மூலிகைச்செடிகள், குரோட்டன்ஸ் வகைகள், துளசி உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை வளர்க்கின்றனர்.

    அதேநேரம் இடவசதி இல்லாத சிலர் மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.அவ்வகையில், ஐஸ்வர்யா நகரில் சிலர் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி மற்றும் மூலிகைத்தோட்டம் அமைத்துள்ளனர். வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

    இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது:-

    மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைகளையும், தோட்டத்தை பராமரிக்கச்செய்வதன் வாயிலாகஅவர்களும் உற்சாகம் அடைகின்றனர். தவிர மருத்துவ குணம் கொண்ட மூலிகைச்செடிகள் வளர்ப்பில் அதன் முழு விபரத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, உரமிடுவது போன்ற பணிகள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றி விடுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காவை கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்.
    • புதிய செடிகளின் பெயர்களையும், இலைகளையும் பார்த்து பல்வேறு விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பூங்காவை கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி சப்பானிமுத்து,

    ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், தர்மலிங்கம், மற்றும் நிர்வாகிகள்உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அவர், பூங்காவை சுற்றிப்பார்த்தார். அங்கு இருந்த புதிய செடிகளின் பெயர்களையும், இலைகளையும் பார்த்து பல்வேறு விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டார்.

    பின்னர் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் மரக்கன்று–களை பராமரிக்கப்படும் முறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

    தொடர்ந்து அங்கு கனிமொழி எம்.பி.மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜன்,

    கூட்டுடன்காடு ஹரி பாலகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் இளையராஜா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலர் ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ஓமலூர் அருகே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த விவசாயை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சக்கர செட்டியப்பட்டி  ஊராட்சி கோபிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன் (எ) சேட்டு (வயது 44). விவசாயி. இன்று காலை இவரது மஞ்சள் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். இவரது மஞ்சள் தோட்டத்தில் உள்ள மின்சார கம்பத்தில் இருந்து மின்வயர் அறுந்து தண்ணீரில் விழுந்தது. தண்ணீர் பாய்ச்சும் போது மின்சாரம் தாக்கி சேட்டு சம்பவ இடத்தில் மயங்கி கிடந்தார். தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது மனைவி தோட்டத்தில் சென்று பார்த்தார் அங்கு அவர் மயங்கி கிடந்தார்.  

    இதைபார்த்த அவர் மனைவி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து டிரான்ஸ் பார்மரை ஆப் செய்து விட்டு, அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சேட்டு இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, மின் கம்பத்தில் உள்ள கம்பிகள் பழுதாகியுள்ளதாக வெள்ளாளப்பட்டி மின்சார வாரியத்தில் பல முறை முறையிட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாகவும். இதனால் பழுதான மின் கம்பி அறுந்து  விழுந்து மின்சாரம் பாய்ந்து இறந்ததாக கூறினர். 

    இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சேட்டுக்கு வெண்ணிலா என்ற மனைவியும், சண்முகி, தரணிகா என்ற இரண்டு மகள், சர்வேஷ் என்ற மகனும் உள்ளனர்.
    கிருஷ்ணகிரியில் தோட்டத்தில் புகுந்த 11 அடி மலைப்பாம்பை வனத்துறையில் பிடித்து வன பகுதியில் கொண்டு விட்டனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, பட்டா குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது50). இவரது தோட்டத்தில் திடீரென சத்தம் கேட்டது. அப்போது அந்த பகுதியில் அவர் சென்று பார்த்த போது 11 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இது குறித்து வனத்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் குச்சியை வைத்து அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் செப்டிபள்ளி வன பகுதியில் கொண்டு விட்டனர்.

    கூடலூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் விவசாயிகள் வாழை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வாழை பயிர்களை யானைகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி அருகே கூடலூர் மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலை பகுதியில் விலை உயர்ந்த மரங்களும், மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்குள் உள்ளிட்ட பலவகை இன உயிரினங்களும் உள்ளன.

    வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் விவசாயிகள் வாழை, கரும்பு, தென்னை, மா உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் வன விலங்குள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் வனத்துறையினர் சில இடங்களில் மட்டும் அகழிகள் அமைத்தும், சூரிய மின்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டது.

    தற்போது அகழிகள் மழையினால் சேதம் அடைந்து விட்டது. மின்வேலி கம்பிகளும் செயல்படாமல் உள்ளது. இதனால் வன விலங்குகள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.

    கூடலூர் வனச்சரகம், வெட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு விடியும் நேரத்தில் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    ×