search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terrace"

    • வாழப்பாடி வட்டாரத்தில் உதவி இயக்குநர் முனைவர் பிரியதர்ஷினி தலைமையில் வாழப்பாடி மகளிர் சங்க அலுவலகத்திலும் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இதில் பெண்கள் ஆர்வத்தோடு அதிகளவில் பங்கேற்றனர்.

    வாழப்பாடி:

    பெத்தநாயக்கன்பாளை யம் வட்டாரத்தில் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் கோதைநாயகி தலைமையில் புத்திரகவுண்டன்பாளையம் வேளாண்மை வட்டார விரிவாக்க மையத்திலும், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் உதவி இயக்குநர் முனைவர்.கலைவாணி தலைமையில், மாசிநாயக்கன்பட்டி மகளிர் சங்க அலுவலகத்திலும், வாழப்பாடி வட்டாரத்தில் உதவி இயக்குநர் முனைவர் பிரியதர்ஷினி தலைமையில் வாழப்பாடி மகளிர் சங்க அலுவலகத்திலும் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இப்பயிற்சியில், தக்காளி, மிளகாய், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், கீரைகளை மாடித்தோட்டம் அமைத்து சாகுபடி செய்வது குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. 3 வட்டாரங்களிலும் தலா 50 பேர் பயிற்சி பெற்றனர். இதில் பெண்கள் ஆர்வத்தோடு அதிகளவில் பங்கேற்றனர்.

    மாடித்தோட்டம் அமைப்பதற்கு தேவையான வளர்ப்பு பைகள், தென்னைநார் கழிவு, காய்கறி விதைகள், உயிர் உரங்கள், வேப்ப எண்ணெய் ஆகியவை உள்ளடக்கிய தொகுப்பை மானிய விலையில் பெறுவதற்கும், ரூ.450 பணம் செலுத்தி ஏராளமானோர் முன்பதிவு செய்தனர். மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் அரசு மானியத்தில் ரூ.450 மட்டும் கொடுத்து மாடித்தோட்ட தொகுப்பை பெற்றக் கொள்ளலாமென, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி பயனுள்ள வகையில் அமைந்ததாக பயிற்சி பெற்ற பெண்கள் தெரிவித்தனர்.

    • பெண்ணின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • செல்விக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், புதுக்காடு செல்லும் சாலையின் அருகே குடியிருப்பு பகுதி யில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பெண் பிணம் கிடப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பிணமாக கிடந்த பெண் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மனைவி செல்வி (45) என்று தெரியவந்தது.

    மேலும் போலீசாரின் விசாரணையில் செல்விக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவ்வப்போது வீட்டை விட்டு செல்லும் செல்வி 2 நாட்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார். இதனால் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வி குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் செய்யவில்லை.

    இந்த நிலையில் தான் செல்வி பிணமாக மீட்கப்பட்டார் அவர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது.
    • வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

    உடுமலை,

    உடுமலை நகரில் சிலர் தங்களது குடியிருப்பு ஒட்டிய நிலப்பகுதிகளில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர். அங்கு மூலிகைச்செடிகள், குரோட்டன்ஸ் வகைகள், துளசி உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை வளர்க்கின்றனர்.

    அதேநேரம் இடவசதி இல்லாத சிலர் மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.அவ்வகையில், ஐஸ்வர்யா நகரில் சிலர் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி மற்றும் மூலிகைத்தோட்டம் அமைத்துள்ளனர். வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

    இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது:-

    மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைகளையும், தோட்டத்தை பராமரிக்கச்செய்வதன் வாயிலாகஅவர்களும் உற்சாகம் அடைகின்றனர். தவிர மருத்துவ குணம் கொண்ட மூலிகைச்செடிகள் வளர்ப்பில் அதன் முழு விபரத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, உரமிடுவது போன்ற பணிகள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றி விடுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×