search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறையினர்"

    • எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு குட்டிகளுடன் ரோட்டில் சுற்றி திரிந்து வருகிறது.
    • தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிங்கோனா எஸ்டேட் பகுதியில் அந்த யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி திரிகிறது. அவற்றை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அவை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு குட்டிகளுடன் ரோட்டில் சுற்றி திரிந்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக ஒற்றை காட்டுயானை கடந்த சில நாட்களாக சின்கோனா பகுதியில் சுற்றி திரிகிறது. அது இரவுநேரத்தில் பஸ்சை வழிமறிப்பதும், குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிவதுமாக அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் சின்கோனா- பெரியகல்லார் சாலையில் நேற்று மதியம் ஒற்றை காட்டுயானை பட்டப்பகலில் உலா வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேயிலை பறிக்கும் தொழி லாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் பாதுகாப்பான இடம் தேடி தஞ்சம் அடைந்தனர்.

    இதற்கிடையே காட்டு யானை நடமாட்டம் பற்றி தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரோட்டில் பட்டப்பகலில் நடந்து சென்ற ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    வால்பாறை சின்கோனா ரோட்டில் ஒற்றை காட்டு யானை பட்டப்பகலில் நடந்துசென்ற சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வந்தபோது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை திடீரென பஸ்சை வழிமறித்தது.
    • யானை அங்கிருந்து நகராமல், கோபம் அடைந்து வனத்துறை ஊழியரை நோக்கி ஓடி வந்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது.

    வால்பாறையில் இருந்து நேற்று மாலை சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதிக்கு அரசு பஸ் சென்றது. பஸ்சை பென்னட் என்பவர் இயக்கி வந்தார். பயணிகள் 15 பேர் பயணித்தனர்.

    சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வந்தபோது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை திடீரென பஸ்சை வழிமறித்தது.

    சாலையில் யானை நின்றதை பார்த்ததும் அதிர்ச்சியான டிரைவர், சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை சில அடி தூரத்தில் நிறுத்தி விட்டார்.

    யானை அங்கிருந்து நகராமல் வெகுநேரமாக அங்கேயே நின்றிருந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    அப்போது பஸ்சில் இருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் பஸ்சை விட்டு கீழே இறங்கி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டார். அவருடன் பயணிகளும் இணைந்து யானையை விரட்ட முயன்றனர்.

    ஆனால் யானை அங்கிருந்து நகராமல், கோபம் அடைந்து வனத்துறை ஊழியரை நோக்கி ஓடி வந்தது. இதனால் அவர் ஓடி சென்று பஸ்சில் ஏறி கொண்டார்.

    இதையடுத்து பயணிகள் அனைவரும் சேர்ந்து சத்தம் எழுப்பினர். இதனால் யானை அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, கடந்த சில தினங்களாக இங்கு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். ஊருக்குள் யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • நாகரில் கைதானவர்கள் ‘திடுக்’ தகவல்
    • திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்தி கள்ள சந்தையில் விற்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    நாகர்கோவில்:

    திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் ஆம்பர் கிரீசில் இருந்து உயர்ரக வாசனை திரவியங்கள் வெளிநாடு களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மருந்து பொரு ளாகவும், மூலப்பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. எனவே திமிங்கல உமிழ்நீர் கட்டிக்கு கள்ள சந்தையில் மதிப்பு அதிகமாகும். இதனால் திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்தி கள்ள சந்தையில் விற்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் அவ்வப்போது திமிங்கலம் உமிழ்நீர் கட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் போது வனத்துறையினரும், போலீசாரும் பிடித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நெல்லையிலிருந்து குமரி மாவட்டத்திற்கு திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கும், வனத்துறையின ருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து வடசேரி பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது காரில் வந்த அவர் கும்பலை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 10 கிலோ திமிங்கலம் உமிழ்நீர் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. போலீசார் அதை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் விசாரித்தபோது உமிழ்நீர் கட்டியை கடத்தி வந்தது நெல்லை மாவட்டம் மேல கருங்குளத்தை சேர்ந்த அருணாச்சலம், மேல முன்னீர் பள்ளத்தை சேர்ந்த நாராயணன், மேலப்பாளை யத்தை சேர்ந்த வேலாயுதம், நாங்குநேரியை சேர்ந்த சுந்தர் என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து காரும் பறிமுதல் செய்யப் பட்டது. பறிமுதல் செய்யப் பட்ட திமிங்கல உமிழ்நீரின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உமிழ்நீர் கட்டியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் ரூ.2 லட்சத்திற்கு வாங்கியதாகவும் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே பதுக்கி வைத்த தாகவும் கூறினர். தற்பொழுது அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக தெரி வித்தனர். யாரிடம் விற்பனை செய்ய கொண்டு வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • சாயல்குடி அருகே வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர், கடலாடி தாசில்தார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே ஒப்பிலான் கிராமத்தில் வனத்துறை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கட்டிடங்களை கட்டி பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். வனத்துறை பகுதியில் உள்ள பொது மக்களை காலி செய்ய வலியுறுத்தி ஆக்கிரமிப்பு களை அகற்றுவதற்காக இன்று அதிகாலை வந்த வனத்துறை அதிகாரிகளை கண்டித்து சாயல்குடியில் இருந்து செல்லும் ஒப்பி லான்-வாலிநோக்கம் சாலையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்தும் வனத்துறையினரை முற்று கையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, கடலாடி தாசில்தார் ரெங்கராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர்கள் இருவர் பெட்ரோல் கேனை தலையில் ஊற்றி தீயை பற்ற வைக்க முற்பட்டனர். அவர்களை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்கிர மிப்புகளை அகற்றக் கூடாது எனவும், வீடு கட்டி இருக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி இருந்தனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    முடிவில் தாசில்தார் தற்போது வனத்துறையினர் ஆக்கிரப்புகளை அகற்ற மாட்டார்கள் எனவும், பின்பு ஒரு நாளில் பொது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு அதன் மூலம் நட வடிக்கை எடுத்துக்கொள்வோம் என உத்திர வாதம் அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • சிறுத்தை ஒன்று மானை துரத்திக்கொண்டு குடியிருப்பு பகுதியை ஒட்டி சென்றதாக தகவல் பரவியது.
    • வனத்துறையினர் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    அறச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள அட்டவனை அனுமன்ப ள்ளி ஊராட்சியில் அறச்ச லூர் மலையை ஒட்டி அமை ந்துள்ள ஓம்சக்தி நகரில் கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் சண்முக

    சுந்தரம் என்பவரது தொழுவத்தி லிருந்த கன்றுக்குட்டியை இரவில் வந்த மர்மவிலங்கு இழுத்துசென்றது.

    இதனை அடுத்து வெள்ளி வலசில் மற்றொரு விவசா யியின் ஆட்டுப்பட்டியிலிருந்த ஆடு ஒன்றை இழுத்து சென்றுள்ளது.

    இதனால் இச்சம்ப வங்களில் தொடர்பு டைய விலங்கை பிடிக்க வனத்துறையினர் வனப்ப குதியில் கண்கா ணிப்பு கேமராக்க ளை பொருத்தியும், கூ ண்டுகளை வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு அறச்சலூரை அடுத்த ஊஞ்சப்பாளையம் சாவடி க்காடு பகுதியில் சிறுத்தை ஒன்று மானை துரத்திக்கொண்டு குடியிருப்பு பகுதியை ஒட்டி சென்றதாக தகவல் பரவியது.

    இதனை கேள்விப்பட்ட வனத்துறையினர் அங்கு சென்று வனப்பகுதியில் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அவர்களுடன் வெள்ளிவலசை சேர்ந்த மக்களும் தேடினர்.

    • வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகிறார்கள்.
    • வாகன ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே மலையை ஒட்டியுள்ள ஓம் சக்தி நகரில் சண்முகசுந்தரம் என்ற விவசாயின் தொழு வத்தில் கட்டியிருந்த 7 மாத கன்று குட்டியை அடை யாளம் தெரியாத மர்ம விலங்கு ஒன்று இழுத்து சென்றது.

    இது குறித்து தனது தொழுவத்திற்கு விவசாயி சண்முக சுந்தரம் வந்தார். அப்போது கன்று குட்டியை மர்ம விலங்கு தூக்கி சென்றது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் குறித்து அரச்சலூர் வனத்துறை யினருக்கு தகவல் அளித்த தின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்து அறிந்து கொள்ள அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

    மேலும் அந்த மர்ம விலங்கை பிடிக்க அந்த பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து வனத்து றையினர் அரச்சலூர் பகுதியில் வாகன ஒலிபெருக்கி மூலம் இரவில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர்.

    இதனால் அறச்சலூர் பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது. இந்த நிலையில் அறச்சலூரை சேர்ந்த தமிழரசு என்பவரது தொழுவத்தில் சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ்-அப் போன்ற சமூக வளை தலங்களில் தகவல் வைரலானது.

    இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • இரவில் வெளியே வரவேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மத்தூர்:

    போச்சம்பள்ளி அருகே அகரம் அடுத்த பேருஅள்ளி கிராமத்தில் மர்ம விலங்கு கால்தடம் விவசாய நிலத்தில் பதிந்துள்ளதால் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த பேருஅள்ளி கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 5 நாட்களாக இந்த பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் மர்ம விலங்கு ஒன்று நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த தகவல் காட்டு தீ போல இப்பகுதிகளில் பரவ துவங்கியது. மேலும் இந்த பகுதியில் உள்ள ஜகன், மற்றும் சின்னசாமி ஆகியோரின் தென்னந்தோப்புகளில் மர்ம விலங்கின் கால்தடம் பதிந்து இருப்பதை பார்த்து அவர்கள் கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் வனவர் பிரவின்ராஜ் தலைமையிலன வனகாப்பாளர் சுகுமார், உள்ளிட்ட குழுவினர். மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தாமோதிரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மர்ம விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் அது சிறுத்தையின் கால்தடம் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் சார்பில் மருதேரி ஊராட்சியில் பேருஅள்ளி கிராமத்தில் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு சிறுத்தையை பார்த்தால், வனத்துறைக்கோ அல்லது ஊராட்சி மன்ற தலைவருக்கோ தகவல் கொடுக்க அறிவுறுத்தினர்,

    மேலும் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும், சின்னசாமி என்பவர் தென்னந் தோப்பில் உள்ள வீட்டில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் போச்சம்பள்ளி பகுதியில் கிராம மக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    • கடந்த 25 நாட்களாக வனத்துறையினர் சிற்றாறு பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • தற்காலிகமாக 2 மாத காலத்திற்கு பஸ்களை மாணவ-மாணவிகள் நலன் கருதி சிற்றாறு சிலோன் காலனி வழியாக இயக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புலி புகுந்து ஆடு, மாடுகளை கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    விரைவு படையினர் மற்றும் டாக்டர் குழுவினர் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2 இடங்களில் கூண்டு அமைத்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். 50 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையிலும் புலி சிக்கவில்லை. கடந்த 25 நாட்களாக வனத்துறையினர் சிற்றாறு பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் கடந்த 2 வாரங்களாக புலி நடமாட்டம் பற்றி எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து வெளியூர்க ளில் இருந்து வந்த அதிரடி படையினர் திரும்பி சென்றனர். புலி நடமாட்டம் இல்லாததையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிற்றாறு பகுதி பொதுமக்க ளுடன் வன அதிகாரி இளையராஜா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. அப்போது கால்ந டைகளை இரவு நேரத்தில் பாதுகாப்பாக அடைத்து வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்தனர்.

    மேலும் அந்த பகுதி மக்க ளும் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். அதாவது சிற்றாறு பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் கோதையாறு வரை 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    புலி நடமாட்டம் காரணமாக மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள் நடந்து வீட்டுக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சிற்றாறு காலனி வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கூறினர்.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கலெக்டரிடம் பேசினார்கள். தற்காலிகமாக 2 மாத காலத்திற்கு பஸ்களை மாணவ-மாணவிகள் நலன் கருதி சிற்றாறு சிலோன் காலனி வழியாக இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் வனத்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர். இன்று அல்லது நாளை முதல் சிற்றாறு சிலோன் காலனி வழியாக அரசு பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • 2021ம் ஆண்டு, மாங்காபாறை வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த போது ஆட்டுக்கூட்டத்துடன் வரையாடு ஒன்று சேர்ந்தது.
    • கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதன் இயல்புகளில் மாற்றம் ஏற்பட்டது.

    உடுமலை:

    கேரளா மாநிலம் சின்னாறு வன உயிரின காப்பகம், மறையூர், காந்தலூர், பாலப்பட்டி, மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர்கள் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு, மாங்காபாறை வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த போது ஆட்டுக்கூட்டத்துடன் வரையாடு ஒன்று சேர்ந்தது.

    இரு ஆண்டுகளாக ஆடுகளுடன் சேர்ந்து, மேய்ந்தும், இரவு நேரங்களில் பட்டிகளில் அவற்றுடனே உறங்கி, கிராமத்திற்குள் வளர்க்கும் ஆடு போல் மாறியது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதன் இயல்புகளில் மாற்றம் ஏற்பட்டது.

    ஆடுகளை தாக்குவது, மனிதர்களை தாக்குவது என தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தியது. வரையாடு தாக்கிய சம்பவங்களில் 8 பேர் காயமடைந்தனர். இதில், 2பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.மனிதர்களை தாக்கிய வன விலங்கான வரையாட்டை பிடிக்க வேண்டும் என, கிராம வனக்குழு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட வன அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.

    இதனையடுத்து கேரளா வனத்துறையினர், வலை வீசி வரையாட்டை பிடித்து கூண்டுக்குள் அடைத்து, வரையாடு தேசிய பூங்காவான ராஜமலைக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆண் வரையாடு குட்டியாக இருந்த போது, மற்ற ஆடுகளுடனும், மக்களுடனும் சகஜமாக இருந்துள்ளது. தற்போது 3 ஆண்டுகள் வளர்ந்த நிலையில் இனப்பெருக்கம் மற்றும் அதன் கூட்டத்தை தேடியுள்ளது.

    அதனை பாதுகாப்பாக பிடித்து ராஜமலையில் வரையாடுகள் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது என்றனர்.

    • ஆடுகளை அடைத்து வைத்ததன் மூலமாக புலி நடமாட்டம் குறைந்துள்ளது
    • தற்போது சிற்றாறு பகுதியை சுற்றி அனைத்து காமிராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி

    நாகர்கோவில் :

    சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் குடி யிருப்புகள் பகுதியில் புலி நடமாட்டம் இருந்ததால் பொதுமக்கள் அச்ச மடைந்தனர். அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை புலி கடித்து கொன்றது.

    இதையடுத்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்ட னர். அங்கேயே முகாமிட்டு வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் புலி சிக்கவில்லை. தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்ததையடுத்து தேனியில் இருந்து எலைட் படையினரும் களக்காட்டில் இருந்து டாக்டர் குழுவினரும் வரவழைக்கப்பட்டு தேடும்பணி நடந்தது.

    2 இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டதுடன் 50 இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு தேடும் பணி நடந்து வருகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து நவீன காமிரா கொண்டு வரப்பட்டு இரவு நேரங்களில் புலி நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். ட்ரோன் காமிரா மூலமா கவும் கண்காணிப்பு பணி நடந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் இல்லாத நிலை உள்ளது. வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் புலி நடமாட்டம் குறைந்தது. இதையடுத்து புலியை பிடிக்க வனத்துறையினர் புதுவியூகம் மேற்கொண்ட னர். ஆட்கள் நடமாட்டத்தை குறைத்தால் மட்டுமே புலியை பிடிக்க முடியும் என்று முடிவு செய்தனர்.

    இதனால் தற்போது தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எலைட் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர். டாக்டர் குழுவினர் மட்டும் கண்காணித்து வருகிறார்கள். தற்போது சிற்றாறு பகுதியை சுற்றி அனைத்து காமிராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சிற்றாறு காலனி பகுதியில் அந்த பகுதி மக்களுடன் வனத்துறை யினர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் வன அதிகாரி இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். புலியை பிடிப்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். ஆடுகளை அடைத்து வைத்ததன் மூலமாக புலி நடமாட்டம் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

    • 2 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் புலியை பிடிக்க வனததுறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
    • புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புலி அட்டகாசம் செய்தது.

    தொழிலாளர்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை வேட்டையாடியதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து புலியை பிடிக்க வனதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டும் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. 2 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் புலியை பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் புலி சிக்கவில்லை. புலியை பிடிக்க எலைட் படையினரும், டாக்டர்கள் குழுவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் நெல்லையிலிருந்து வந்த விரைவு படையினரும் தேடி வருகிறார்கள். பேச்சிப்பாறை மூக்கரைக்கல் பகுதியில் டிரோன் கேமரா மூலமாக தேடும் பணி நடந்தது.

    இன்று 2-வது நாளாக வனத்துறையினர் புலியை டிரோன் கேமரா மூலமாக தேடி வருகிறார்கள். ஆனால் புலி சிக்க வில்லை. இது குறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், பேச்சிப்பாறை சிற்றாறு பகுதிகளில் டிரோன் கேமரா மூலமாக கண்கா ணிக்கப்பட்டது. டிரோன் கேமராவிலும் புலி நடமாட்டம் தென்படவில்லை. வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்ததை அடுத்து புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆடுகளை மட்டும் பொதுமக்கள் பத்திரமாக அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
    • பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு பஞ்சாயத்து பகுதியில் காபி, அன்னாசி பழம், வாழை, மிளகு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு குரங்குகள், முயல்கள், நரிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்நிலையில் வாழவந்திநாடு பஞ்சாயத்து கரையன்காடுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனிசாமி (51), காளி (70). இவர்கள் இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

    வழக்கம்போல் இருவரும் இன்று காலை 6 மணி அளவில் அப்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் வழியாக தோட்ட வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    காளியம்மன் கோவில் அருகே சென்றபோது மறைந்திருந்த கரடி, அவர்கள் மீது பாய்ந்து தாக்கியது. முகம், கை, கால் , கழுத்து, உடல் உள்ளிட்ட பகுதிகளில் குடித்து குதறியது. இதனால் நிலைகுலைந்த இருவரும் படுகாயங்களுடன் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செம்மேடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவம் நடந்த வனப்பகுதியில் கரடியை பிடிப்பதற்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே இந்த பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தோட்ட வேலைக்கு சென்ற 2 பேரை கரடி கடித்து குதறிய சம்பவத்தால் வாழவந்திநாடு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    ×