search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "examined the"

    • நாயை, சிறுத்தை விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வளை தலங்களில் பரவி வருகிறது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடயங்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் விளா முண்டி வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் இருந்து யானை கள் உள்பட பல வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள பவானிசாகர் நீர் தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்கிறது.

    மேலும் வனப்பகுதியை யொட்டி உள்ள கிராம பகுதிகளில் யானை மற்றும் சிறுத்தைகள் புகுந்து வரு கிறது.

    இதே போல் விளாமுண்டி வனப்பகுதி அருகே கல் குவாரி மற்றும் குடியிருப்பு பகுதி அமைந்து உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள்.

    அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் கண் காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் விளா முண்டி பகுதியில் இரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதை கேட்டு பொதுமக்கள் வன விலங்கு ஏதாவது வந்து உள்ளதா? என அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அங்கு வேலை செய்பவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் கல்குவாரி அடுத்த கிராம பகுதியில் ஒரு சிறுத்தை நுழைந்து அங்கு காவலுக்கு இருந்த நாயை துரத்தியது. இதையடுத்து அந்த நாய் சிறுத்தையிடம் சிக்காமல் தப்பி சென்று உயிர் தப்பியது பதிவாகி இருந்தது.

    மேலும் நாயை, சிறுத்தை விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வளை தலங்களில் பரவி வருகிறது.

    இது குறித்து அவர்கள் விளாமுண்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடயங்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் பவானிசாகர் வனசரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை குழுவினர் கண்காணிப்பு காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து சிறுத்தை வனப்பகுதிக்கு சென்று விட்டதா? அல்லது அந்த பகுதியில் பதுங்கி உள்ளதா? என கண்காணித்து வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, விளா முண்டி வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளி யேறி ஊருக்குள் வருவது கண்காணிப்பு கேமிரா காட்சியில் பதிவாகி உள்ளது.

    எனவே இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் கல்குவாரி யில் வேலை செய்பவர்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    ×