search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேரன்மகாதேவி அருகே தோட்டத்தில் திருட்டு
    X

    சேரன்மகாதேவி அருகே தோட்டத்தில் திருட்டு

    • தோட்டத்தில் மேற்பார்வையாளராக அஜித்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
    • திருட்டு குறித்து அஜித்குமார் பத்தமடை போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடையில் கருப்பங்குளம் பகுதியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது தோட்டம் உள்ளது. இங்கு குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ராம் அஜித்குமார்(வயது 31) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ந்தேதி இவர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 மின்மோட்டார்கள், தண்ணீருக்காக வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது.

    இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    Next Story
    ×