search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheranmahadevi"

    • தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

    வியதீபாதம் யோகத்தில் ஒருவன் பிறந்தால், அவன் குடும்பத்தில் மோட்சம் அடையாத ஆன்மாக்களின் சாபம் ஏற்படும். அப்படி இந்த யோகத்தில் பிறந்தவரோ அல்லது அவரது தந்தையோ, ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற வியதீபாதம் யோக நாளில் (ஜோதிடர் மூலம் இந்த நாளை அறிந்து கொள்வதே சரியானது)

    அதிகாலை நேரத்தில் இந்தத் திருத்தலத்தில் உள்ள தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் நதிக்கரையில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள பக்தவத்சலப் பெருமாளை வணங்கி, அர்ச்சனை மற்றும் ஆராதனைகளைச் செய்ய வேண்டும். பின்னர் தங்களால் முடிந்த அளவு (குறைந்தது 10 பேருக்கு) அன்னதானம் செய்தால், பித்ரு தோஷம் மற்றும் கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

     பரிகாரம் செய்வது எப்படி?

    அசுப யோகங்களின் தோஷம் உள்ளவர்கள், முதலில் இந்தத் திருத்தலத்தின் புனித நீரான தாமிரபரணி நதியில் நீராட வேண்டும். நீராடும்போது உடுத்தி இருந்த ஆடையை அங்கேயே களைந்து, அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, புதிய ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், பழைய ஆடைகளை ஆற்றில் விட்டு, அதனை மாசுபடுத்தக்கூடாது.

    பின்னர் ஆலயத்திற்குள் சென்று பக்தவத்சலப் பெருமாள் முன்பாக நின்று, அவரை வழிபட வேண்டும். பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை வாங்கிச் சென்று, பூஜை செய்யும் பட்டாச்சாரியாரிடம் கொடுத்து சுவாமிக்கு அணிவிக்கச் செய்ய வேண்டும். அதோடு சுத்தமான நெய் வாங்கிச் சென்று, சுவாமியின் முன்பாக இருக்கும் விளக்கில் சேர்க்கச் சொல்ல வேண்டும். பின்னர் உங்களது குறைகள் தீர இறைவனை வழிபட வேண்டும்.

    இறுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. அது என்னவென்றால், கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும் முன்பாக, கோவிலிலோ, அல்லது வரும் வழியிலோ குறைந்தது 10 பேருக்கு கட்டாயமாக அன்னதானம் செய்ய வேண்டும். இதற்கான பணத்தை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்யச் சொல்வதில் எந்த பலனும் இல்லை. நீங்களே நேரடியாக உங்கள் கைகளால் இந்த அன்னதானத்தை வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • `பஞ்சாங்கம்’ என்பது மிகவும் உயிரோட்டமான சொல்.
    • பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயம்.

    ஜோதிடத்தில் `பஞ்சாங்கம்' என்பது மிகவும் உயிரோட்டமான சொல். நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான். தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு.

    இந்த யோகங்களைத் தவிர இன்னும் சில யோகமும் உண்டு. 27 நட்சத்திரங்களை போல, 27 யோகங்களும் உள்ளன. அவற்றில் பிரீதி, ஆயுஸ்மன், சவுபாக்கியம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரியான், சிவன், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிராம்யம், ஐந்திரம் ஆகிய 17-ம் சுப யோகங்கள் ஆகும். மீதமுள்ள விஷ் கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், விகாதம், துருவம், வியதீபாதம், பரிகம், வைதிருதி ஆகிய 10-ம் அசுப யோகங்கள் ஆகும்.

    சுப யோகங்களில் பிறந்தவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.

    அண்ணன், தங்கை, அக்கா, அத்தை என ஒரு கூட்டமே திருமணமாகாமல், சரியான தொழில், உத்தியோகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும். ஒரு சிலர் குழந்தை இல்லாமல் இருப்பார்கள். சில குடும்பங்களில் தொடர் மரணங்கள், அகால மரணங்கள் போன்ற துன்பங்கள் நிகழலாம். இவற்றிற்கெல்லாம் இந்த அசுப யோகங்கள் காரணமாக அமையலாம்.

    அதேபோல் சில குடும்பங்களில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சொர்க்கமா?, நரகமா?, மறுபிறவியா?, தண்டனையா? என்று, எதுவுமே இல்லாமல் ஒரு உறுதியற்ற தன்மையில் அல்லாடிக் கொண்டிருக்கும். அதற்கும் அசுப யோகத்துடன் அவரின் குடும்பத்தில் பிறந்தவர்களின் ஜாதகமே காரணம்.

    இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலமாக அமைந்ததுதான், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அமைந்துள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சேரன்மகாதேவி. இங்கிருந்து வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது, பக்தவத்சலப் பெருமாள் ஆலயம்.

    வியாச முனிவரால் பெருமைப்படுத்தப்பட்ட 12 ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் அடிப்பகுதியில் நரசிம்மப் பெருமாள் யோக நிலையில் கோவில் கொண்டிருப்பதாக ஐதீகம். பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயம், 1921-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் இருக்கிறது.

    அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாகும். தாமிரபரணியை ஒட்டினாற்போல் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.

    கிழக்கு நோக்கி அபயக்கரம் நீட்டி அருளும் பக்தவத்சலப் பெருமாள், `நான் இருக்கிறேன்.. இனி உன் துன்பம் நீங்கி விடும்" என்பதுபோல் முத்திரைக் காட்டி கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு வெளியே வலதுபுறத்தில் லட்சுமிதேவியுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

    அசுப யோகங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்திருந்தாலும் கூட, அவர்கள் தன் துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, கோவிலைத் தொட்டுச் செல்லும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபட வேண்டும். இதுபற்றியும், இந்த நதி பற்றியும் வியாசரால் எழுதப்பட்டுள்ளது. அது தாமிரபரணி மகாத்மீயத்தில் காணப்படுகிறது.

    10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.

    மேலும் மேற்கண்ட தோஷம் உள்ளவர்கள், இந்த நதியில் நீராடி, வியாசர், மார்க்கண்டேயர், அகத்தியர், சப்த நதிகள், பக்தவத்சலப் பெருமாள் ஆகியோரை தரிசித்து, அன்னதானம் செய்தால் `நவகிரிச்சினி பலன்' (ஒரு லட்சம் காயத்ரி உச்சரித்த பலன்) கிடைப்பதுடன், தோஷங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    சில ஆலயங்களுக்கு நாம் என்னதான் முயற்சித்தாலும், அந்த இறைவனின் கருணைப் பார்வை நம்மீது படவில்லை என்றால், அங்கு செல்ல முடியாத நிலையே ஏற்படும். இருப்பினும் அந்த இறைவனை நினைத்து மனமுருக வேண்டிக்கொண்டால், அவரை வழிபடுவதற்கான வாய்ப்பை அவரே ஏற்படுத்தித் தருவார். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.

    • முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான வேல்துரை நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
    • மரணமடைந்த வேல்துரையின் சொந்த ஊரான கங்கனான்குளத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான வேல்துரை நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

    அதனை அறிந்ததும் தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தற்போதைய செகந்திராபாத் பாராளு மன்ற தொகுதியின் பொறுப் பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொரு ளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரு மான ரூபி மனோகரன் எம்.எல்..ஏ. உடனடியாக நெல்லை திரும்பினார். மரணமடைந்த வேல்து ரையின் சொந்த ஊரான கங்கனான்குளத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    அப்போது ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளையங்கோட்டை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், களக்காடு கிழக்கு வட்டார பொறுப்பாளர் பானு, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியம்மாள், கவுன்சிலர் மரிய சாந்தி, முன்னாள் ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் வசந்தா, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, காங்கிரஸ் நிர்வா கிகள் சித்திரைவேல், ஆனந்த ராஜன், தாழைகுளம் ராஜன், நந்தகோபால், பிலியன்ஸ், ஸ்ரீதேவி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

    • அம்பை சட்டமன்ற உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏவை, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே, சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    சேரன்மகாதேவி:

    அம்பை சட்டமன்ற உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏவை, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையொட்டி சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே, சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மகாதேவி நகர செயலாளர் வக்கீல் பழனி குமார், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், உச்சிமாகாளி, நகரதகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகாராஜன், இளைஞர் அணி செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38), விவசாயி.
    • கடந்த 28-ந் தேதி இவர் தருவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38), விவசாயி. இவர் தற்போது நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 28-ந் தேதி இவர் தருவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

    இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சேரன்மகாதேவியை சேர்ந்த மாரியம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணேசன் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம்(24) என்பவர் நெல்லை கோர்ட்டில் இன்று சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே கொலையாளிகள் பயன்படுத்திய கார் மானூர் பகுதியில் ரஸ்தாவில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    • சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 55).
    • இவர் இன்று காலை புலவன்குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 55). இவர் இன்று காலை புலவன்குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள சர்ச் அருகே சென்றபோது, எதிரோ வந்த மினி லோடு வேன் அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தர்மராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதேநேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த மினி லோடு வேன் அப்பகுதயில் இருந்த தரைபாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் லோடு வேன் டிரைவரான வீரவநல்லூர் தம்பிரான் காலனியை சேர்ந்த காசிதுரை என்பவரது மகன் பிரவீனுக்கும்(20) வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பத்தமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, இறந்த தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்த பிரவீனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஷாஜகான் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார்.
    • அலங்கார விளக்குகளை அப்புறப்படுத்தும் பணியில் ஷாஜகான் ஈடுபட்டார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை சம்பந்தர் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 44 ). இவர் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார்.

    மின்சாரம் தாக்கி பலி

    நேற்று பத்தமடை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக அவர் ஒலிபெருக்கி மற்றும் அலங்கார விளக்குகள் பொருத்தி இருந்தார். விழா நிறைவையொட்டி இன்று காலை கோவிலில் அமைத்திருந்த அலங்கார விளக்குகளை அப்புற ப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேரன்மகாதேவியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஜமாத் தலைவர் அபுல்ஹசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • இப்தார் நிகழ்ச்சியில் முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர்.

    சேரன்மகாதேவி:

    சேரன்மகாதேவியில் குத்பா முகைதீன் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, ஜமாத் தலைவர் அபுல்ஹசன் தலைமை தாங்கினார். செயலர் ஷேக் செய்யது அலி முன்னிலை வகித்தார். இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர் முகம்மது இஸ்ஹாக் ஹுசைன் தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தினராக சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் கலந்து கொண்டார். இமாம் மீரான்கனி,பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ், சேகரகுரு கிப்சன் ஜான்தாஸ், , அரிமா சங்கத்தினர் முருகேசன், அமல்ராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை தக்வா பள்ளிவாசல் இமாம் குலாம் முகைதீன் ஜமாலி தொகுத்து வழங்கினார். ஜமாத் துணைச் செயலர் செய்யது அப்பாஸ் வரவேற்றார். இளைஞர் நற்பணி மன்றச் செயலர் இம்தியாஸ் நன்றி கூறினார்.

    • வித்யா பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • நகையை பறித்த அந்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார்.

     நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் மேல உப்பூரணியை சேர்ந்தவர் துரைமணி. இவரது மனைவி வித்யா(வயது 38). இவர் காமராஜ்நகர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு கடையில் வித்யா இருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.

    அவர்களில் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த நபர் பெட்டிக்கடையில் பொருட்கள் கேட்டுள்ளார். வித்யா அந்த பொருட்களை எடுத்துக்கொண்டி ருந்தபோது, அவரது கழுத்தில் கிடந்த நகையை அந்த நபர் பறித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார்.

    இதுகுறித்து வித்யா அளித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 திருடர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விழாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 300 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    • சேக் அப்துல்லா,அம்பை சங்கர நாராயணன் ஆகியோர் இயற்கைவழி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.

    சேரன்மகாதேவி:

    சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி விழா சேரன் மகாதேவி ஸ்காட் பொறியி யல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.

    விழாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 300 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுபசெல்வி வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முருகா னந்தம் விழாவின் நோக்கம் குறித்து பேசினார்.

    சேரன்மகாதேவி சப்- கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம், பயன்பாடுகள் குறித்து தலைமையுரையாற்றி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பயனாளிகளுக்கு இடு பொருட்கள் வழங்கினார்.

    சேரன்மகாதேவி ஒன்றிய குழுத் தலைவர் பூங்கோதை குமார் மற்றும் பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன் வாழ்த்துரை வழங்கினர்.

    சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பொது மேலாளர் தம்பிதுரை மற்றும் முதல்வர் ஜஸ்டின் திரவியம், நெல்லை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) அசோக்குமார், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய மாநில அரசு திட்டம்) ஜாய்லின் சோபியா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் பூவண்ணன், விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதாபாய், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்ற ளிப்புத்துறை உதவி இயக்குநர் ரெனால்டா ரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரி யர் மற்றும் தலைவர் ஆறுமுகசாமி, இணை பேராசிரியர்கள் ரஜினி மாலா, இளஞ்செழியன் ஆகியோர் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து தொழில்நுட்ப உரை ஆற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

    இயற்கை விவசாயி சேக் அப்துல்லா மற்றும் அம்பை சங்கர நாராயணன் ஆகியோர் இயற்கைவழி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.

    பாரம்பரிய பயிர்களை சந்தைப்படுத்துதல் குறித்து உள்ள விஸ்வநாதன் மற்றும் இயற்கை விவசாயி லெட்சுமி தேவி ஆகியோர் பேசினர்.

    சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் நன்றி கூறினார்.

    இக்கண்காட்சியில் நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துவரும் பாரம்பரிய நெல் பயிர் ரகங்கள், அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்த பதாகைகள், சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு சிறுதானிய பயிர்கள் மற்றும் விழப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டது.

    மேலும் நெல் மற்றும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்த விற்பனை அங்காடி அமைக்கப்பட்டிருந்தது.

    விழாவிற்கான ஏற்பாடு களை நெல்லை மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • தோட்டத்தில் மேற்பார்வையாளராக அஜித்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
    • திருட்டு குறித்து அஜித்குமார் பத்தமடை போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடையில் கருப்பங்குளம் பகுதியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது தோட்டம் உள்ளது. இங்கு குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ராம் அஜித்குமார்(வயது 31) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ந்தேதி இவர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 மின்மோட்டார்கள், தண்ணீருக்காக வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது.

    இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    • கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின்நிலைத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற் பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின்நிலைத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கரிசல்பட்டி, பிள்ளைகுளம்,காணியாளர் குடியிருப்பு, பட்டன் காடு, இடையன்குளம்,கங்கணாங்குளம்,பத்தமடை,கோபால சமுத்திரம்,மேலச்செவல்,வாணியங்குளம், சுப்பிர மணியபுரம், சடையான்குளம், வெங்கட்ர ங்கபுரம், சிங்கிகுளம், தேவன் நல்லூர், இகாடுவெட்டி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×