search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேரன்மகாதேவியில் கடையில்  பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    சேரன்மகாதேவியில் கடையில் பெண்ணிடம் நகை பறிப்பு

    • வித்யா பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • நகையை பறித்த அந்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் மேல உப்பூரணியை சேர்ந்தவர் துரைமணி. இவரது மனைவி வித்யா(வயது 38). இவர் காமராஜ்நகர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு கடையில் வித்யா இருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.

    அவர்களில் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த நபர் பெட்டிக்கடையில் பொருட்கள் கேட்டுள்ளார். வித்யா அந்த பொருட்களை எடுத்துக்கொண்டி ருந்தபோது, அவரது கழுத்தில் கிடந்த நகையை அந்த நபர் பறித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார்.

    இதுகுறித்து வித்யா அளித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 திருடர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×