search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாசம்"

    • மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது.
    • அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி மங்கலம் சாலையில், தாமரைக் குளம் பகுதியில் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.இங்கு தர்மபுரி மாவட்டம் எம். பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி சிவகாமியுடனும், அதே பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் தனது மனைவி உமாவுடனும், தனித்தனியாக தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு குமாரின் மனைவி சிவகாமி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குடிசையில் தீ பற்றியது. இதில் மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது. சிறிது நேரத்திலேயே இரு குடிசைகளும் முற்றிலும் தீயில் எரிந்ததால் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது.

    தகவல் அறிந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர். அவிநாசி வட்டாட்சியர் மோகன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், தீ விபத்து பகுதியில் ஆய்வு செய்து இரு குடும்பத்தினரும் மாற்றிடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

    • தீயணைப்பு போலீசார் வருவதற்குள் கடை தீக்கிரையானது
    • கடைக்கு யாராவது தீவைத்தார்களா என விசாரணை

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி அருகே உள்ள பெரியார் நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் பிரபா (வயது 65). இவரது வீட்டின் முன்பு ஆறுச்சாமி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக துணி அயர்ன் செய்யும் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

    இன்று அதிகாலை திடீரென அந்த அயர்ன் கடை தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த துணிகளும் தீக்கிரையானது.

    இதுபற்றி வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த கடைக்கு யாராவது தீவைத்தார்களா, அல்லது விபத்து காரணமாக தீப்பிடித்ததா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.  

    • வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
    • ஏலக்கி வாழைப்பழம் மிக குறைந்த அளவில் வரத்து உள்ளன.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ராமாபுரம், வழி சோதனை பாளையம், வெள்ளக்கரை, சாத்தான்குப்பம், கீரப் பாளையம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சேடப்பாளை யம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று சூறாவளி காற்று நள்ளிரவில் அடித்த காரணத்தினால் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக் கான ரூபாய்கள் பயிரிடப் பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் திடீரென்று வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பி லான வாழைத்தார்கள் சேதமாகி நாசமாயின.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டன் கணக்கில் வாழைப் பழங்கள் மேற்கண்ட பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற் பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து கடலூர் சுற்றியுள்ள பகுதி களில் வாழைத்தார்களை அறுவடை செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் ஜன வரி மாதம் வரை வாழைத் தார்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அறு வடைக்கு முன்பு வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் தற்போது வாழைத்தார்கள் இல்லா மல் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.

    இதன் காரணமாக கடலூர் உழவர் சந்தையில் செவ்வாழை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 1100 ரூபாய்க்கும், கற்பூரவல்லி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்தநிலையில் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பூவன்பழம் ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழைத்தார் குறைந்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது மேலும் ஏலக்கி வாழைப்பழம் மிக குறைந்த அளவில் வரத்து உள்ளன. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வாழைத்தார்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் விலை அனைத்தும் 2 மடங்காக உயர்ந்து உள்ளதால் பொது மக்கள் வாழைப் பழம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். மேலும் இனி வருங்காலங்களில் அதிக அளவில் கோவில் திரு விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்நோக்கி உள்ள நிலை யில் போதுமான அளவில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால் வரலாறு காணாத வகையில் வாழைத் தார்கள் மற்றும் வாழை பழங்கள் அதிக விலையில் விற்பனையாகும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பல மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
    • வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வண்டலூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது45). நேற்று மின்கசிவு காரணமாக இவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது.

    அப்போது காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வண்டலூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தமிழரசி , வெங்கடேசன், பாப்பையன், ராஜேந்திரன், ராஜேஷ் கண்ணா, மதீஷ் ராஜ், சுப்பிரமணியன், அரவிந்த் , பெரியசாமி, ராகுல் ஆகியோ ரின் கூரைவீடுகளுக்கும் பரவியது.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை, கீழ்வேளூர், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட 4 தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பல மணிநேரம் போராட்ட த்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

    ஆனாலும் இந்த தீவிபத்தில் 11 கூரைவீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலானது. மேலும் வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதமானது.

    இந்த தீவிபத்தில் ஒரு ஆடும் இறந்தது.

    இதன் சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    தகவல் அறிந்ததும் அமைச்சர் ரகுபதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9 ஏக்கரில் முந்திரி விவசாயம் செய்து வந்தார்.
    • பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமானது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் மற்றும் பழையாறு பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் உள்பட 9 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி விவசாயம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் இவர்களது முந்திரி தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த பூம்புகார் மற்றும் சீர்காழி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க நீண்ட நேரம் முயற்சி செய்து தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. மேலும் இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கூரை வீடு மின் கசிவால் தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது.
    • ரூ.5 ஆயிரம் நிவாரணம், காய்கறி மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே சொக்கநாதபுரம் ஒத்தக்கடையில் கூலித் தொழிலாளியான நடேசன் என்பவரின் கூரை வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகிவிட்டது.

    இதனை அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அறிவுறுத்தலின் படி, பேராவூரணி தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ நேரில் சென்று பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5000 நிவாரணத் தொகையும், காய்கறி மற்றும் அரிசி வழங்கினார்.

    இந்நிகழ்வில் கட்டையங்காடு ஒன்றிய கவுன்சிலர் கவிதா செல்வ குமார், சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராம் பிரசாத், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராசு, முன்னாள் மாநில கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன் கூட்டுறவு சங்க தலைவர் வே.கூத்தலிங்கம், இளைஞரணி செயலாளர் கே.எஸ்.வினோத் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் எஸ்.சத்யராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
    • தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அகரவெளி சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கொல்லையிலுள்ள வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர் இருப்பினும் தீ மளமளவென பரவி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.

    தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நீரை பீச்சு அடித்து தீயை அணைக்க முற்பட்டனர்.

    தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ வைக்கோல் போரில் பற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் திருக்குவளைத் துணை மின் நிலைய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்குவளை அருகே மின் கசிவு காரணமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
    • தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அகரவெளி சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கொல்லையிலுள்ள வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர் இருப்பினும் தீ மளமளவென பரவி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.

    தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நீரை பீச்சு அடித்து தீயை அணைக்க முற்பட்டனர்.

    தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ வைக்கோல் போரில் பற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் திருக்குவளைத் துணை மின் நிலைய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்குவளை அருகே மின் கசிவு காரணமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • 4 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
    • நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளுர் கண்ணந்தங்குடியில் நான்கு வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

    இதில் பணம், நகை, மாணவர்களின் சான்றிதழ், நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் சாம்பலானது.

    இதையடுத்து தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் செயலாளர் செந்தில்குமார், நிவாரணமாக தார்பாய் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பன்னீர்செல்வம், பிரைட் பீப்புள்ஸ் நிறுவனர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நேற்றிரவு வழக்கம்போல் இருவரும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • ரூ. 3 லட்சம்‌ மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40).

    இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் தாய் இருவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இதேபோல் அருகில் உள்ள வீட்டில் வீரையன் (44) என்பவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவியும், மகளும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் இருவரும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, திடீரென நள்ளிரவில் வெடிக்கும் சத்தம் கேட்டு இருவரும் கண் விழித்து பார்த்தபோது வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் கத்தி கூச்சலிட்டனர்.

    அதற்குள்ளாக, அருகில் இருந்த மாரிமுத்து என்பவரின் வீட்டிலும் தீ பரவியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தண்ணீர் ஊற்றி போராடி தீயை அணைத்தனர்.

    இதில் வீட்டில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    அதிர்ஷ்டசவமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    • மணிகண்டன் (வயது 49)மனைவி நந்தினி (25) லோன் பணம் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று உள்ளனர்.
    • இந்நிலையில் திடிரென்று அவர்களின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.

    கடலூர்:

    மந்தாரக்குப்பம் செக்கடி தெரு குமார் மகன் மணிகண்டன் (வயது 49)கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25) என்எல்சி இடத்தில் மதியழகன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். நேற்று வடலூரில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் லோன் பணம் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று உள்ளனர். இந்நிலையில் திடிரென்று அவர்களின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட நந்தினியின் தங்கை திவ்யா போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக புறப்பட்டு வந்தனர். இருவரும் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமா கின.இதில், வீட்டில் இருந்த ஜவ் அடுப்பு, துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின.

    இது குறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீடு எவ்வாறு தீப்பிடித்து எரிந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேம்பு, புங்கு, இலுப்பை, சில்க் காட்டன், மரவெட்டி, கருஞ்சுட்டி உள்பட பல எண்ணை வித்துக்கள்
    • எண்ணை வித்துக்கள் வைத்திருந்த குடோனும் வெடித்து சிதறி சேதம் ஆகியது

    நாகர்கோவில் :

    ஆசாரிபள்ளம் அருகே வெள்ள மண் ஓடை பகுதி யில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான எண்ணை மில் உள்ளது.

    இங்கு வேம்பு, புங்கு, இலுப்பை, சில்க் காட்டன், மரவெட்டி, கருஞ்சுட்டி உள்பட பல எண்ணை வித்துக்கள் வியாபாரத்திற்கு அரைத்து வருகிறார் கள். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.இந்த ஆலையில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் மற்றும் அரைத்து வைக்கப்பட்டு இருந்த எண்ணை மற்றும் புண்ணாக்கு அரைப்பதற்கு தேவையான மாட்டு எலும்பு தூள் உள்பட சுமார் 15 டன் பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது. எண்ணை வித்துக்கள் வைத்திருந்த குடோனும் வெடித்து சிதறி சேதம் ஆகியது. தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    நாகர்கோவில் தீய ணைப்பு வீரர்கள் உடனடி யாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக் குள் கொண்டு வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ அணைக் கப்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் புகை மண்ட லங்கள் வந்து கொண்டே இருந்தது.

    தீ விபத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான எண்ணை வித்துக்கள் எண்ணை புண்ணாக்குகள் எரிந்து நாசமாகி உள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆசாரிப் பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×