search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மந்தாரக்குப்பத்தில்  குடிசை வீடு எரிந்து நாசம்
    X

    மந்தாரக்குப்பத்தில் தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது

    மந்தாரக்குப்பத்தில் குடிசை வீடு எரிந்து நாசம்

    • மணிகண்டன் (வயது 49)மனைவி நந்தினி (25) லோன் பணம் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று உள்ளனர்.
    • இந்நிலையில் திடிரென்று அவர்களின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.

    கடலூர்:

    மந்தாரக்குப்பம் செக்கடி தெரு குமார் மகன் மணிகண்டன் (வயது 49)கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25) என்எல்சி இடத்தில் மதியழகன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். நேற்று வடலூரில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் லோன் பணம் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று உள்ளனர். இந்நிலையில் திடிரென்று அவர்களின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட நந்தினியின் தங்கை திவ்யா போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக புறப்பட்டு வந்தனர். இருவரும் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமா கின.இதில், வீட்டில் இருந்த ஜவ் அடுப்பு, துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின.

    இது குறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீடு எவ்வாறு தீப்பிடித்து எரிந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×