search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில்  பரபரப்பு  தீ விபத்தில் கார் எரிந்து நாசம்:பஸ்சுக்கு  காத்திருந்த பயணிகள் ஓட்டம்:
    X

    தென்னங்கீற்று கொட்டகையில் பற்றி எரியும் நெருப்பினை படத்தில் காணலாம்.

    திண்டிவனத்தில் பரபரப்பு தீ விபத்தில் கார் எரிந்து நாசம்:பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் ஓட்டம்:

    • அதிகாலை வீட்டருகே விற்பனைக்காக வைத்திருந்த தென்னங்கீற்று கட்டுகளில் திடீரென தீப்பற்றியது
    • அப்போது காற்று வேகமாக வீசியதால் அருகில் நின்றகார்களிலும் நெருப்பு பரவும் வாய்ப்பு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பஸ்களுக்கு காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம்,பிப்.11-விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியை ேசர்ந்தவர் குமரன். இவர் அந்த பகுதியில் தென்னங்கீற்று வியாபாரம் செய்து வருகிறார்.இன்று அதிகாலை வீட்டருகே விற்பனைக்காக வைத்திருந்த தென்னங்கீற்று கட்டுகளில் திடீரென தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நெருப்பு கொழுந்து விட்டு எரிய ெதாடங்கியது. இந்த தீ அருகில் நிறுத்தி இருந்த குமரனுக்கு சொந்தமான காரிலும் பற்றியது. இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது.சிறிது நேரத்தில் அந்த இடமுழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அருகில் நின்றகார்களிலும் நெருப்பு பரவும் வாய்ப்பு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பஸ்களுக்கு காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து உடனே திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுஇந்த பகுதி போக்குவரத்துக்கு முக்கியமான சென்னை பிரதான சாலை ஆகும். தொடர்ந்து நெருப்பு பற்றி எரிந்ததால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அந்த வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் ஒருவழிபாதையில் திருப்பி விடப்பட்டதுஇதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குபதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×